September 30, 2008

சர்வம் ஹீரோ மயம்!

இன்னும் ஒரு சுட்டிக்கான பதிவு. வார வாரம் இந்த தொல்லை வேறு உங்களுக்கு. இந்த உயிரோசை இதழில் என் கட்டுரை ஹீரோ என்பவன் யார் என்று பேசுகிறது. சுட்டி இதோ: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=239

September 24, 2008

உயிரோசை உலா


மனுஷ்ய புத்திரனின் உயிரோசை இணைய இதழ் அசத்தலாக வந்துகொண்டிருக்கிறது. உன் தொடர் வருவதால் நீ அப்படித்தான் சொல்வாய் என்று சொல்பவர்கள் ஒரு நடை பொய் பார்த்து விட்டு சொல்லுங்கள். முக்கியமாக ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டும். இந்த வாரம் நான் எழுதியுள்ள கட்டுரையை வாசித்து பாருங்கள். இந்தக் கட்டுரையை வணிக இதழ்கள் வெளியிட விரும்புமா என்று கவனியுங்கள். அப்போதுதான் ஒரு நல்ல இணைய இதழின் முக்கியத்துவம் உங்களுக்கு விளங்கும். வெளிப்படையான எழுத்துக்களுக்கு தமிழில் சிற்றிதழ்களை விட்டால் வேறு புகல் இல்லை. இணையத்திலோ யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற சுதந்திரம் இருப்பதால் பெரும்பாலான எழுத்துகள் விளையாட்டாகவே பதிவாகின்றன. உயிரோசை மாதிரியான பரிபூரண இணைய வார இதழ் இதுவரை வந்ததில்லை என்பதாகவே தோன்றுகிறது. இதழ் அச்சுக்கும் தாவும் நாளை ரொம்ப ஆசையோடு எதிர்பார்க்கிறேன். என் இந்த வார கட்டுரைக்கான சுட்டி: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=199

September 16, 2008

புதிய இணைய இதழ்! புதிய கட்டுரைத் தொடர்!

வெகு நாட்களுக்குப் பிறகு அர்த்த மண்டபத்துக்குள் நுழைகிறேன், இந்த முறை நுழைந்திருப்பது பதிவொன்றிற்காக அல்ல. அறிவிப்பொன்றிற்காக.

நண்பர் மனுஷ்ய புத்திரன் புதிதாக ஓர் இணைய வார இதழ் ஆரம்பித்திருப்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். தெரியாது என்றால் தெரிந்து கொள்ளுங்கள். அவரது
www.uyirmmai.com இல் அதற்கான சுட்டி கிடைக்கும். வார இணைய இதழின் பெயர் உயிரோசை.

இந்த இதழில் தமிழ் சினிமா பற்றி ஒரு தொடர் எழுத முடியுமா என்று என்னிடம் கேட்டார். என்ன ஒரு தைரியம் பாருங்கள். யாரைப் பார்த்து என்ன கேட்பது என்று ஒரு விவஸ்தை வேண்டாம்? நான் blog எழுதுகிற லக்ஷ்ணமே நீங்கள் எல்லாம் அறிந்த ஒன்றுதானே. அறியாவிட்டால் என் பதிவுகளுக்கு இடையேயான கால அவகாசத்தை ஒரு தரம் புரட்டி பாருங்கள். என் சுறுசுறுப்பின் வேகம் உங்களுக்கும் தெரிய வரும்.

இருந்தாலும் துணிந்து இறங்கிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். அவரிடமும் அதைத்தான் சொன்னேன். யாராவது கழுத்தில் கத்தியை வைத்தால்தான் எழுதவே செய்வேன் என்பதாக. அவர் நான் துப்பாக்கியே வைப்பேன் என்று சொன்னார். இங்கே நான் விளையாட்டாக இதைக் குறிப்பிட விரும்பவில்லை. ஓர் எழுத்தாளன் அதுவரைக்குமான அவனது சாதனைகளுக்காக கௌரவிக்கப்படும்போதுதான் அவனிடம் இருந்து மேலும் மேலும் நல்ல படைப்புருவாக்கங்கள் தோன்றக்கூடும். இந்த சோர்வை நான் கோபி கிருஷ்ணனிடம் பார்த்துத் தவித்துப் போயிருக்கிறேன்.

என் தொடரின் தலைப்பு 'தமிழ் சினிமா: அமுதும் நஞ்சும்.' (நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று என்ற நாஞ்சில் நாடனின் தலைப்பிலிருந்து திருடப்பட்டது என்று உங்களிடம் யாராவது சொன்னால் அதை மறுக்க வேண்டாம்)

முதல் கட்டுரையின் தலைப்பு 'ஏன் எமது சினிமா சாகிறது?'

கட்டுரைக்கான நேரடி சுட்டி:
http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=158