November 25, 2008

காமெடியும் கீமாவடையும்!

காமெடி என்றால் நகைச்சுவை என்றும் கீமாவடை அல்லது கீமெடி என்றால் தர்ம அடி என்றும் தற்காலத் தமிழ் சினிமா நிகண்டுவில் ஒரு வரி காண்கிறது. அதாவது கொத்துக்கறி போடுவது!

கடந்த வாரம் சட்டக்கல்லூரி மாணவர்களின் கைவரிசை (உருட்டுக்கட்டை வரிசை?) குறித்து ஒரு ரவுண்டு புலம்பியிருந்தேன். சினிமா வார்த்துக் கொடுக்கும் வன்முறைக் காட்சிகள் இளைஞர்கள் மத்தியில் எவ்விதமான மனச்சிதைவை ஏற்படுத்துகின்றன என்கிற புலம்பல் அது! கடந்த இதழில் மாயாவின் கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததைப்போல அடி வாங்குபவன் நல்லவன் என்கிற மனநிலைதான் நமக்கு இப்போதும் இருப்பதற்கு மிக முக்கிய காரணமும் சினிமாதான் என்றே தோன்றுகிறது.

அடிப்பது உதைப்பது ஆகியவை ஹீரோக்களும் வில்லன்களும் அடியாட்களும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் உதவியோடு சாதிக்கும் கலை என்பதெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரைதான். அதன்பிறகு டிரென்ட் மாறுகிறது! கௌண்டமணி செந்திலை உதைப்பதிலிருந்து இது தொடங்கியிருக்கலாம் (அல்லது பாரதிராஜாவின் 16 வயதினிலேயில் ரஜினிகாந்த் கௌண்டமணியை அடிப்பதிலிருந்து இது தொடங்கியிருக்கலாம். அந்த அடியைத்தான் கௌண்டர் போகிறவன் வருகிறவனுக்கெல்லாம் தவணை முறையில் கொடுத்துவந்தார் என்பதாகவும் கொள்ளலாம்).

read more: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=569

November 20, 2008

நான் மதிக்கும் கலைஞர்கள் செய்த பிழைகள்!

நாகார்ஜுன் நடித்த இரண்டு தெலுங்குப் படங்கள் தமிழில் தறிகெட்டு ஓடின. ஒன்று மணிரத்னம் இயக்கிய கீதாஞ்சலி. மற்றது ராம்கோபால் வர்மா இயக்கிய சிவா! தமிழில் டப் செய்யப்பட்டபோது இவற்றின் பெயர்கள் இதயத்தைத் திருடாதே, உதயம்!

இதயத்தைத் திருடாதேயில் நாகார்ஜுன் ஒரு நோயாளி. தன் நோயை அறிந்துகொள்ளும் வரைக்கும் கல்லூரி கான்வகேஷனில் காம்பௌன்ட் சுவரைத் தாண்டி தாமதமாக நுழையும் அளவுக்குத்தான் இவரது மாணவ சேஷ்டை இருக்கும். ஆனால் உதயத்தில் அப்படியே தலைகீழ். ஆரம்பத்தில் மிக அமைதியான மாணவனாகத் தோற்றமளிக்கிற இவர், ஒரு பாய்லிங் பாய்ண்ட்டில் வெடித்து தன் சைக்கிளின் செயினை அறுத்தெடுக்கும்போது படம் வேறு தாளகதிக்குள் நுழைந்துவிடும். கல்லூரிக்குள் மாணவர்கள் மோதல் என்பது ரொம்பவும் அழுத்தமாக வெளிவந்தது அந்தப்படம் முதலாகத்தான் என்பதாகவே நினைக்கிறேன். மாணவர்கள் தங்களுக்குள் ஆயுதங்களால் தாக்கிக்கொள்வது, தாதாக்கள் கல்லூரிகளுக்குள் ஊடுருவுவது, அதற்குக் காரணமாக இருக்கும் மாணவர்கள் பிற்பாடு தாதாக்களாகவும் அரசியல்வாதிகளாகவும் மாறுவது என்பதாக ஒரு பேரமைப்பை எடுத்துக்காட்டிய படம் உதயம்...

read more: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=537

November 12, 2008

துடிக்கத் துடிக்க நடிக்க...

தமிழ் சினிமாவில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்? யாரெல்லாம் துடிக்கிறார்கள்? வாருங்கள் உயிரோசை இந்த வார பதிவுக்கு:
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=485

November 04, 2008

உலக சினிமாவுக்கான ஏணி!

நமது படங்கள் உலக தரத்திற்கு உயர்ந்து கொண்டிருக்கின்றன என்பதாக ஒரு மாயை உருவாகி வருகிற சூழலில் அது எந்த அளவுக்கு உண்மை என்பதை இந்த வார உயிரோசை தொடரில் முயன்று பார்த்திருக்கிறேன்.

சுட்டி இதோ: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=445