tag:blogger.com,1999:blog-81305722024-03-07T13:30:09.481+05:30அர்த்தமண்டபம்<strong>சுதேசமித்திரன்</strong>சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-8130572.post-86063729444688019412010-06-19T12:46:00.002+05:302010-06-19T12:49:28.304+05:30அம்மாவுக்கு ஓர் அவசரக் கடிதம்சுதேசமித்திரன் டாட் காமில் இன்று வெளியிட்ட 'அம்மாவுக்கு ஓர் அவசரக் கடிதம்' எனும் கட்டுரையை வாசிக்க இங்கே தீண்டவும் <a href="http://sudesamithiran.com/?p=181">http://sudesamithiran.com/?p=181</a>சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8130572.post-61000647370589984752010-03-21T13:16:00.001+05:302010-03-21T13:19:34.213+05:30அல்லா அலாரம்!சுதேசமித்திரன் டாட் காமில் இன்று வெளியிட்ட அல்லா அலாரம்! எனும் கட்டுரையை வாசிக்க இங்கே தீண்டவும் <a href="http://sudesamithiran.com/?p=168#more-168">http://sudesamithiran.com/?p=168#more-168</a>சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8130572.post-80397676504925232662010-03-20T10:30:00.001+05:302010-03-20T10:32:04.898+05:30கோவா என்றொரு தமிழ்ப்படம்சுதேசமித்திரன் டாட் காமில் இன்று வெளியிட்ட கோவா என்றொரு தமிழ்ப்படம் எனும் கட்டுரயை வாசிக்க இங்கே தீண்டவும் <a href="http://sudesamithiran.com/?p=161">http://sudesamithiran.com/?p=161</a>சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8130572.post-13669768399725879852010-03-15T16:59:00.001+05:302010-03-15T17:01:32.054+05:30பசுமை நிறைந்த அறுபதுகள்சுதேசமித்திரன் டாட் காமில் இன்று வெளியிட்ட பசுமை நிறைந்த அறுபதுகள் எனும் கட்டுரையை வாசிக்க இங்கே தீண்டவும்: <a href="http://sudesamithiran.com/?p=147">http://sudesamithiran.com/?p=147</a>சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8130572.post-43312159973938030282010-03-13T16:15:00.002+05:302010-03-13T16:20:42.276+05:30welcome to sudesamithiran.com2004 முதல் ப்ளாக்ஸ்பாட்டில் வெளிவந்துகொண்டிருக்கும் எனது பதிவுகள் இனி கீழ்க்கண்ட முகவரியில் வெளிவரும்: <a href="http://sudesamithiran.com">http://sudesamithiran.com</a><br /><br />'பின்லேடனும் ப்ரானிக் ஹீலிங்கும்!' என்ற முதல் கட்டுரையை இந்தச் சுட்டியைத் தீண்டுவதன் வாயிலாக வாசிக்கலாம்: <a href="http://sudesamithiran.com/?p=135">http://sudesamithiran.com/?p=135</a>சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8130572.post-61425116876318502942009-08-29T11:37:00.003+05:302009-08-29T11:41:29.738+05:30சினிமாவும் சமூக அங்கீகாரமும்<span style="font-size:85%;"> </span><span style="font-size:85%;">நாடோடிகள் படத்தில் ‘நேர்மை’யான கதாபாத்திரம் ஒன்று வருகிறது. தன் சொந்த மகளை, தன் சொந்தத் தங்கையின் மகனுக்கு மணமுடித்துக்கொடுக்க அந்தக் கதாபாத்திரம் ஓர் எளிய எதிர்பார்ப்பை முன்வைக்கிறது. மாப்பிள்ளை கவர்ன்மென்ட் உத்யோகஸ்தனாக இருக்க வேண்டும் என்பதே அது! கவர்மென்ட் உத்யோகம் உறவை விடவும் பெரியதா என்று கேள்வி கேட்கக்கூடாது. அதெல்லாம் அவரவர் மனோபாவத்தைப் பொறுத்தது!<br /></span><br /><span style="font-size:85%;">கவர்மென்ட் உத்யோகம் என்பது நிலையானது; அந்தஸ்தானது; ஓய்வு பெற்ற பிறகும் ஊதியம் தரக்கூடியது என்பதனால் தன் மகள் எவ்விதமான பொருட்குழப்பமும் இல்லாமல் வாழ்வை நிம்மதியாகக் கழிக்க இயலும் என்பதாகக் கணக்கிடும் இந்த கிராமத்து மனப்போக்கு சற்று பரிணாமமடையும்போது ஏற்கப்பட வேண்டிய வேலைகள், மறுக்கப்பட வேண்டிய வேலைகள் என்று இளைஞர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் வேலைகள் இரண்டு விதமாகப் பிரிக்கப்படுகின்றன.<br /></span><br /><span style="font-size:85%;">டாக்டர், என்ஜினியர், ஸயன்டிஸ்ட், லெக்சரர் ஆகிய வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த கவர்ன்மென்ட் வேலை எதிர்பார்க்கப்பட்ட இடத்தில் இட்டு நிரப்பப்பட்டன. இவர்களெல்லாம் நல்ல வருமானமுள்ளவர்கள் என்பதாக பெண்ணைப் பெற்றவர்கள் கவனத்திற்கொள்ள ஆரம்பித்தார்கள். வக்கீல்கள் இந்த விஷயத்தில் அத்துணை பேணப்படவில்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அவர்கள் மாமனாரிடமே சட்டம் பேசிவிடக்கூடும்.<br /></span><br /><span style="font-size:85%;">ஆக, இந்த வெகு ஜாக்கிரதையான தேர்ந்தெடுப்பில் பின்னுள்ள வேலைகளெல்லாம் புறந்தள்ளப்படுகின்றன. வேண்டுமானால் குலத் தொழில் செய்கிற இளைஞர்களை குலத்தொழில் செய்கின்ற மாமனார்கள் தொழில் விருத்தி நிமித்தம் ஏற்றுக்கொண்டு வந்தார்கள் என்பது தொன்று தொட்டு இருந்து வருவதே என்பதனால் அதனை விட்டுத் தள்ளுங்கள்.<br /></span><br /><span style="font-size:85%;">இப்படி ஒரு நிலைப்பாடு எழுவதற்கு முன்னும் ஒரு காலம் இருந்தது. அப்போது மணமகனின் தகுதி கவனிக்கப்படவில்லை, அவனது தகப்பனார் மற்றும் மூதாதையரின் அந்தஸ்தே பெண்ணைப் பெற்றவர்களால் கண்காணிக்கப்பட்டது. இன்னாருடைய பேரன்; இன்னாருடைய மகன்; இப்படியாப்பட்ட சொத்துடையவன்; இத்தனை பேரோடு பிறந்தவன்; உடன் பிறந்தவர்கள் இப்படியிப்படியெல்லாம் இருக்கிறார்கள்; அவர்களின் வம்சம் இப்படியிப்படியெல்லாம் பெருகிற்று என்பதெல்லாம் பெண்ணைக் கொடுப்பதற்கான உபாயமாக இருந்த காலம் அது. அதையும் விட்டுத்தள்ளுங்கள்.<br /></span><br /><span style="font-size:85%;">நாம் வாழும் காலத்திற்கு வருவோம். இப்படி கொள்ளத் தக்கவை மற்றும் தகாதவை என்று இரண்டு தரப்பட்ட தொழில்கள் அல்லது வேலைகள் இந்திய தேசத்தில் விரிந்து பரந்து கிடக்கவே செய்கின்றன. ஐரோப்பிய நாடுகளைப் போல எல்லாத் தொழிலும் சமமானதே என்கிற நிலைப்பாடு வர்ணாசிரம தர்மத்தில் ஊறிய பாரதத் திருநாட்டில் இனியும்கூட எப்போது முகிழ்க்குமோ என்பதும்கூட ஐயப்பாடே.<br /></span><br /><span style="font-size:85%;">சரி, என்னத்துக்கு இந்த முகாந்திரம் என்று கேட்கிற நேரம் வந்துவிட்டதா? வேறு எதற்கு? சொந்தமாக லட்சக்கணக்கில் முதலீடு செய்து லேத் வொர்க் ஷாப் வைத்திருப்பவன், டூரிஸ்ட் வாகனங்கள் வைத்துக்கொண்டு தொழில் செய்பவன், டைலரிங் கடை அல்லது ரெடிமேட் ஆடைக் கடை வைத்திருப்பவன், ஏஸி மற்றும் ரெஃப்ரிஜிரேட்டர் பழுது பார்ப்பவன், டிஃபார்ம் முடித்து மெடிக்கல் ஷாப் வைத்திருப்பவன், புத்தகங்களைப் பதிப்பிப்பவன் என்று பல்லாயிரம் தொழில்கள் மற்றும் வேலைகள் கல்யாணச் சந்தையில் பின்தள்ளப்பட்டே வருகின்றன. இவர்களுக்கு சமுதாய அந்தஸ்து மற்றும் கல்வி அந்தஸ்து ஆகியவற்றில் இரண்டாந்தர மணமகள்களே வேண்டா விருப்பாக கட்டிவைக்கப்படுகிறார்கள் என்பதோடு காலமெல்லாம் குத்திக்காட்டவும் படுகிறார்கள்.<br /></span><br /><span style="font-size:85%;">இவர்களுக்கே இதுதான் நிலைமை என்றால், சமுதாயத்தால் மிகுந்த ஒழுக்கக்கேடு நிறைந்த தொழில் என்பதாகக் கருதப்படும் சினிமாத் தொழிலில் இயங்கும் இளைஞர்களின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்! (எப்புடீ? சுற்றி வளைத்தாலும் சப்ஜக்ட்டுக்கு வருவதில் என்னைவிட சமர்த்தன் யாராவது இருந்தால் நீங்களே சொல்லுங்கள்!)<br /></span><br /><span style="font-size:85%;">எமது சினிமாவில் இருக்கும் பல்வேறு இளைஞர்கள் தம் இளமையை இவ்விதமாகவே தொலைத்து வந்திருக்கிறார்கள். சினிமாவில் வேலை பார்த்துவிட்டு அது தேவையில்லை என்று சொந்தத் தொழில் அல்லது ஏதாவது வேலைக்குத் திரும்ப நேர்ந்தாலும்கூட சமுதாயம் அவர்களை ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தவனைப் பார்க்கிற கோணத்திலேயே பார்க்கிறது. பொதுப்புத்தி சார்ந்து சமுதாயம் நினைக்கிறது, ‘ஒருமுறை ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தவன் மீண்டும் ஜெயிலுக்குப் போகவே செய்வான்!’ ஏனென்றால் அவனது முந்தைய குற்றப் பின்னணி அவனைப் பின்தொடரும்; போலீஸ்காரர்கள் அவனைக் கண்காணித்தவாறே இருப்பார்கள்; அந்த பிராந்தியத்தில் எந்தக் குற்றம் நிகழ்ந்தாலும் இவனும் விசாரிக்கப்படுவான் இந்தச் செயல்பாடுகள் அவனை மீண்டும் ஜெயிலுக்குள் செலுத்தவே முனையும் என்பதனால் அவனுக்குப் பெண்ணைக் கொடுக்கக்கூடாது என்பது எத்தனை நியாயமானதோ, அதே அளவுக்கு நியாயமானதுதான் சினிமாத்துறைக்குப் போய்விட்டு வந்தவன் அல்லது இப்போதும் அதில் இருப்பவனுக்கு பெண்ணைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்வதும்!<br /></span><br /><span style="font-size:85%;">இது பெண்ணைக் கொடுப்பது என்பதில் மாத்திரம் முடிந்து போகிற விஷயமல்ல, ஒரு பாங்க் லோன் வாங்கப்போனாலும் சரி, ஒரு விற்பனைப் பிரதிநிதி வேலைக்கு மனுப் போட்டாலும் சரி, பெரும் தடையாகவே அவனது சினிமா ஆர்வம் அவனை இம்சித்து வருகிறது. இதனாலேயே சினிமாத் துறை என்பது ஒரு இளைஞனை புலி வாலைப் பிடித்ததைப்போல வருத்தவே செய்கிறது.<br /></span><br /><span style="font-size:85%;">உண்மையில் மற்றவர்கள் குற்றஞ்சாட்டுமளவுக்கு இந்தத் துறை அத்தனை மலிவானதா? உண்மையிலேயே ஒழுக்கக் கேடுகள் நிறைந்ததா? சம்பாத்திய நிலையின்மையை முன்வைப்பதா என்கிற கேள்விக்கெல்லாம் பதில் ஒன்றே ஒன்றுதான், ‘இது முழுக்கவும் உண்மையுமல்ல, முழுக்கவும் பொய்யுமல்ல!’<br /></span><br /><span style="font-size:85%;">இந்த மாதிரி ஒழுக்கக் கேடு என்பது வேறு தொழில்களில் இல்லையா? டாக்டர்கள், என்ஜினியர்கள் எல்லோருமே ரொம்பவும் ஒழுக்கசீலர்கள்தானா? நைட் டூட்டிகள், கார்ப்பரேட் அலுவலகத்தின் நான் சர்வயலன்ஸ் அறைகள் ஆகிய பொழுதுகள் மற்றும் ஸ்தலங்களில் அவர்களின் ஒழுக்கங்கள் சரியாகத்தான் பேணப்படுகின்றனவா? கலாச்சார மாற்றத்தின் முன்னால் கற்புநெறி தப்பிப் பிழைத்துதான் இருக்கிறதா என்கிற கேள்விகளுக்கெல்லாம் உங்களுக்கே விடைகள் தெரியும்.<br /></span><br /><span style="font-size:85%;">நீங்கள் இருக்குமிடத்தில் உள்ள அத்தனை சாத்தியங்களையும் நீங்கள் முகர்ந்து பார்த்துவிடுகிறீர்களா? அதெல்லாம் தனி மனிதர்களின் ஆசாபாசங்கள், ஒழுக்கநெறிகள் சார்ந்த பூர்வீக மனப்பதிவுகள், நோயுறுநிலைகள் குறித்த தெளிவுகள் என்று வித்தியாசப்படத்தானே செய்கின்றன!<br /></span><br /><span style="font-size:85%;">முதற்கண் இந்தச் சமுதாயம் சினிமாவைப் பார்க்கிற பார்வை மாற வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்! இதற்கு சினிமா என்பது கூத்தாடிகளின் வேலையல்ல என்கிற தெளிவே பிரதானமானது. சினிமா என்பது ஒரு தொழில் என்கிற போதத்தை அப்போதுதான் சமூகத்தால் எட்ட முடியும். அந்த போதமே அங்கீகாரத்தை முன்வைக்க முடியும்.<br /></span><br /><span style="font-size:85%;">சினிமா இவ்வாறு வெறுக்கப்பட்டு வந்ததற்கான அடிப்படைக் காரணம் முந்தைய தலைமுறையில் படிப்பு வராதவர்கள் சென்னைக்கு ரயிலேறி சினிமாவில் சேர்கிறேன் என்று அடித்த கொட்டத்தால்தான்! பொதுவாகவே, கலைத்திறன் உள்ள மனத்திற்கு கணக்கு வராது என்பது விதி. இதற்கு சுஜாதா மாதிரி விலக்குகள் இருக்கலாம். ஆனால் கணக்கு வராதவர்கள் எல்லாம் தாங்கள் கலைத்திறன் உள்ளவர்கள் என்பதாக கருதிக்கொண்ட அவலமே இவ்விதமான தப்பிதமான எண்ணப் பதிவை முன்வைத்துத் தொலைத்தது.<br /></span><br /><span style="font-size:85%;">அந்தக் காலத்தை விட்டுத் தள்ளுங்கள்! இப்போது அப்படியா? சினிமா என்பது கல்லூரியிலேயே போதிக்கப்படும் தொழிலாக விஸ்வரூபமெடுத்துவிட்ட காலம் இது! விஷுவல் கம்யூனிகேஷன் என்பது திரைப்படக் கல்லூரிக்கு வெளியேயும் திரைப்படக் கலையை போதிக்கக்கூடிய வாய்ப்பை கல்வித்துறைக்கு நல்கியிருக்கிறது. சினிமா மட்டுமல்லாமல் விளம்பரத் துறை முதலான பல்வேறு கதவுகளை இந்தப் படிப்பின் வாயில் திறக்கிறது.<br /></span><br /><span style="font-size:85%;">படித்த இளைஞர்கள் சினிமாவுக்குள் நுழைகிறார்கள். சினிமா என்கிற மகாவிருக்ஷத்தில் தங்கள் கிளை எது என்பதிலும் அவர்கள் தீர்மானமாக இருக்கிறார்கள். முன்னைப்போல டைரக்டராகப்போகிறேன் என்கிற ஒற்றைக் கனவோடு சினிமாவுக்குள் நுழைகிற போக்கு இப்போது முற்றிலும் மாறிவிட்டது. சினிமா என்பது எண்ணற்ற வேலைவாய்ப்புகளின் சாத்தியங்களை உள்ளடக்கியது என்கிற தெளிவு இளைஞர்களின் மத்தியில் இப்போது எழுந்துவிட்டது.<br /></span><br /><span style="font-size:85%;">தொழில்நுட்ப வளர்ச்சியைத் தன் இரு கைகளாலும் தழுவிக்கொண்ட துறைகளில் மிக முக்கியத்துவம் பெறுவது சினிமா என்கிற நிலைப்பாடு மிகவும் ஆரோக்கியமானது. இது படித்த இளைஞர்களின் சேவையைப் பெருமளவில் கோரவே செய்கிறது. இதனால் முன்னைப்போல திருட்டு ரயிலேறி சினிமாவுக்கு வருகிற அவசியம் ஏதும் இல்லாத நிலையே இப்போது காண்பது. ஒரு வாரம் முன்பாகவே ரிசர்வ் செய்து ஏஸி கோச்சில் சென்னைக்கு இளைஞர்கள் வரக்கூடிய காலமிது.<br /></span><br /><span style="font-size:85%;">மற்ற சாத்தியங்கள் கிடக்கட்டும், உதவி இயக்குனர் என்கிற வேலையையே எடுத்துக்கொள்வோம், இந்த வேலை எவ்விதமான சம்பாத்திய சாத்தியங்களை உள்ளடக்கியது என்கிற கேள்வி நியாயமானதே! உண்மையில் இன்றைய பொழுதில் திறமையுள்ள ஒரு உதவி இயக்குனர் சாதாரணமாக வருடத்திற்கு குறைந்த பட்சம் ஒன்றரை லட்சம் சம்பாதிக்கக்கூடிய நிலைப்பாடு உண்டு என்பதே உண்மை. இன்றைய காலகட்டத்தில் கடைசி உதவி இயக்குனர் என்பவருக்கே ஆறு மாதத்திற்கு நாற்பதாயிரம் கொடுக்கப்படவேண்டும் என்பதே இயக்குனர் சங்கத்தின் முன்வைப்பு! இது சரிவரக் கிடைக்கிறதா இல்லையா என்பதை சங்கம் சரிவரக் கண்காணிக்கிறதா என்பதே கேள்வி என்றபோதும், இந்தத் துவக்கம் நல்ல எதிர்காலத்தையே முன்வைக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.<br /></span><br /><span style="font-size:85%;">அதே உதவி இயக்குனர் ஒரு வெற்றிகரமான இயக்குனராக மாறும்போது மிகக் குறுகிய காலத்தில் அவர் சம்பாதிக்க முடிகிற தொகை எவ்வளவு என்று பார்த்தால், அது பல லட்சங்கள் செலவு செய்து ஸாஃப்ட்வேர் இன்ஜினியரான ஒருவர் ஆயுட்காலத்தில் சம்பாதிக்க முடிகிற தொகையை விடவும் பன்மடங்கு உயர்ந்தது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. அதை ஜாக்பாட் என்று நீங்கள் வேண்டுமானால் நினைக்கலாம், ஆனால் அதைக் கருத்தில் கொள்ளாமல் போவது எவ்விதத்தில் நியாயமானது என்பதே எனது கேள்வி!<br /></span><br /><span style="font-size:85%;">சினிமாவின் போக்கில் இத்தனை மாற்றங்கள் இருந்தாலும் சமூகத்தின் போக்கில் ஏதும் மாற்றமிருக்கிறதா என்பதே எனது கேள்வி! சமூகம் சினிமாவை இன்னும் மாற்றாந்தாய்க் கண்ணோட்டத்தோடே பார்க்கிறது. ஒழுக்கக்குலைவு, நிரந்தரமில்லாப் பணிச்சூழல் ஆகிய காரணங்களை அது முன்வைக்கவே செய்கிறது.<br /></span><br /><span style="font-size:85%;">அறை எண் 305இல் கடவுள் படத்தில் சிம்பு தேவன் நையாண்டி செய்ததைப்போல விரல்களை இழந்துவிட்டால் அப்புறம் ஒரு ஸாப்ட்வேர் இன்ஜினியர் என்ன செய்ய முடியும் என்கிற கேள்வியை இங்கே தாராளமாக முன்வைக்கலாம். இந்தக் கட்டுரை எழுதப்படும் காலம் ஐடி துறையில் ரெஸிஷன் உள்ள காலம் என்பதால் அந்தச் சகோதரர்களை மேலும் புண்படுத்துவதல்ல என் நோக்கம் என்பதனால் இதோடு நிறுத்திக்கொள்ளலாம்.<br /></span><br /><span style="font-size:85%;">ஒரு சினிமா வெளிவருகிறது என்று சொன்னால் பால்குடம், பதினைந்தடிப் பூமாலை, தாரை தப்பட்டை என்று எதிர்கொள்ளத் தயாராகிறது சமூகத்தின் ஒரு பிரிவு. குடும்பத்தோடு அதைப் போய்ப்பார்ப்பதற்கு குடும்ப பட்ஜெட்டில் நிதி ஒதுக்குகிறது வேறொரு பிரிவு, போய்ப் பார்க்கிறதோ இல்லையோ, பத்திரிகைகள் மற்றும் மீடியாக்களின் வாயிலாக அந்தப் படத்தின் ரிஸல்ட்டை அறிந்து அதைத் தமக்குள் விவாதித்துப் பொழுதைக் கழிக்கிறது இன்னுமொரு பிரிவு, தான் பெற்ற உத்தியோக உயர்வு, வருமான உயர்வு, தனது பிறந்தநாள், கல்யாண நாள் ஆகிறவற்றுக்காக சக நண்பர்கள் அல்லது உத்தியோகஸ்தர்களை அந்தச் சினிமாவுக்கு அழைத்துப்போய் கடன் தீர்க்கிறது மற்றுமொரு பிரிவு.<br /></span><br /><span style="font-size:85%;">இப்படி சினிமாவைத் தங்கள் வீட்டு விசேஷம் போலக் கொண்டாடுகிற இந்தச் சமூக மனம், சினிமாவில் கொடிகட்டிப் பறக்கிற ஆட்கள் தவிர்த்து மற்றவர்களெல்லாம் தரங்கெட்டவர்கள் என்பதைப்போன்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பது எதனால்?<br /></span><br /><span style="font-size:85%;">சமூகம், பணம் என்கிற ஒரே சாளரத்தின் வாயிலாகவே உலகத்தைப் பார்க்கிற காலம் இது. சினிமாவில் சம்பாதித்து அந்தப் பணத்தை சரிவர வேறு இடங்களில் முதலீடு செய்து வைத்திருக்கும் ஒருவரை சமுதாயம் விரும்பவே செய்கிறது. எது எப்படியானாலும் அவன் பணக்காரன் என்பதனால் அவனை ஏற்றுக்கொள்வதில் எவ்விதமான தயக்கமும் வேண்டியதில்லை என்பதே அதன் வாதமாயிருக்கக்கூடும். டாக்டர்களும் இன்ஜினியர்களும் இந்த அடிப்படையில்தான் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள் என்பதே அடிப்படை உண்மை!<br /></span><br /><span style="font-size:85%;">ஆனால் சினிமா என்கிற தொழிலில் கிட்டத்தட்ட நிரந்தர வருமானமுள்ள எத்தனையோ பேர்கள் உண்டு என்கிற போதம் சமூகம் முழுக்கப் பரவலாக இன்னும் சில காலம் பிடிக்கக்கூடும். அதற்கு இந்தக் கட்டுரை ஒரு திறவுகோலாக இருந்தால் நான் விரும்பும் சினிமாவுக்கு என்னாலான கொடையாக அது இருந்துவிட்டுப் போகட்டும்!</span>சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8130572.post-29835699251173759112009-08-04T18:00:00.005+05:302009-08-04T18:04:44.932+05:30சினிமா எனும் சில்லரை வியாபாரம்!<span style="font-size:85%;"></span><br /><p><span style="font-size:85%;">சினிமா என்பதொரு தொழிலாகவும் இருப்பதனால் அதில் வியாபார நுணுக்கங்களைப் புகுத்துவதும் அவசியமாகவே ஆகிறது. ஒரு சினிமா வெற்றி பெறுவதற்கு விளம்பரங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை அலிபாபா திரைப்படத்தைக் குறிப்பிட்டு ஏற்கனவே எழுதியிருந்தேன். ஏனென்றால் இந்தக் காலத்தில் விளம்பரம் இல்லாமல் கன்ஸ்யூம் செய்யப்படுவது தாய்ப்பால் மட்டும்தான்!</span></p><span style="font-size:85%;"><p><br />ஒருகாலத்தில் மாட்டுவண்டிகளில் அல்லது குதிரை வண்டிகளில் மைக்செட் கட்டி கிராமம் கிராமமாக சினிமாவுக்கு விளம்பரம் செய்துகொண்டு போனார்கள். துண்டுப் பிரசுரங்களைப் பொறுக்குவதற்கென்றே குழந்தைகள் வண்டியின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தன. இந்தக் காட்சி பெரும்பாலும் இப்போது அழிந்தேவிட்டது. அதனிடத்தில் போஸ்டர்கள் பெருமிதத்தோடு வந்தமர்ந்துகொண்டன. இதனால் கழுதைகளுக்கும் மாடுகளுக்கும் பூதாகரமாக்கப்பட்ட முலைகள் உணவாயின. இப்போது வந்துவிட்ட ப்ளெக்ஸ் டெக்னாலஜியோ அவற்றைப் பட்டினி போடுவதாக இருக்கிறது. கடவுளுக்கு பயந்த ஒருவன் போகிற பாதையில் உள்ள கோவில்களுக்கெல்லாம் சலாம் போட்டுக்கொண்டு போவதுபோல சினிமா பேனர்களுக்கு சலாம் போடுகிற ஒருவனை ஒரு டிடீயெச் டீவி விளம்பரத்துக்காகப் பயன்படுத்தியது. அந்த அளவுக்கு திரும்பிய பக்கமெல்லாம் பேனர்கள் மயம்தான்.<br /></p><p>இது இல்லாமல் பத்திரிகைகள் வாயிலாக செய்யப்படும் மறைமுக விளம்பரங்களோ அதைவிடவும் முக்கியமானவை. ஒரு படத்திற்கு டைரக்டர் அவசியமோ இல்லையோ, பீயாரோ அவசியம் என்பதையே இவை முன்னிறுத்துகின்றன. சரியான ஆள் கையில்தான் அந்த வேலையைக் கொடுக்கவேண்டும். எந்த பத்திரிகைக்கு எந்த ஸ்டில்லை கொடுக்கலாம், அதை எப்போது கொடுக்கலாம்; ஒவ்வொரு பத்திரிகையிலும் யாரை கவனித்தால் படமும் செய்தியும் வருகிற சைஸில் வரும்? படத்தைப் பற்றி கவர்ஸ்டோரிகள் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? டைரக்டரின் பேட்டி வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? என்று எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்த ஒருவர்தான் அந்த வேலையைச் சரியாக செய்ய முடியும்.<br /></p><p>படங்களின் ஸ்டில்கள் பத்திரிகைகளில் வெளிவருவதால் பத்திரிகை விற்கிறதா அல்லது படம் ஓடுகிறதா என்கிற கேள்வி கோழி-முட்டை கதை மாதிரி பதிலே இல்லாதது. இதன் அடுத்த கட்டமாகத்தான் படத்தின் ஸ்டில்கள் என்பதற்கு முந்தியே, பூஜை போடும்போதே அல்லது அதற்கு முன்பாகவே ஸ்டில் செஷன்கள் நடந்தேறுகின்றன. படத்தில் சம்பந்தப்பட்ட நாயகன் மற்றும் நாயகி ஆகியோரை ஒருநாள் முன்கூட்டியே கால்ஷீட் பெற்று வித விதமான காஸ்ட்யூம்களில் சுட்டுத் தள்ளுவது என்பதாக ஆரம்பித்த இந்த ஸ்டில் செஷன்கள் இப்போது முக்கிய ஆர்ட்டிஸ்டுகளையும்கூட சேர்த்துக்கொண்டுவிட்டது. இதனால் படம் எடுக்கப்படுகிறதோ இல்லையோ, பப்ளிசிடி உறுதியாகிவிடுகிறது.<br /></p><p>ஒரு பத்திரிகையில் ஒரு பக்கம் விளம்பரம் தரவேண்டுமானால் சில லட்சங்கள் செலவாகும், அதே பத்திரிகையில் படத்தைப் பற்றிய செய்தி வரவேண்டுமானால் சில ஆயிரங்கள் செலவு செய்தால் போதும் என்கிற நிலைப்பாடு எப்போதுமே சிறப்பானதுதானே! சமீபத்தில் தினமணிக் கதிரில் மூன்று பக்கங்கள் சினிமா செய்திகளைப் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. சினிமா என்கிற பூதம் அவ்வளவு பெரியது.<br /></p><p>பரஸ்பரம் கொடுத்து வாங்கிக்கொள்கிற இந்த யுக்தி பிழையானதல்ல. இரண்டு பக்கமும் பிழைப்பு ஓடத்தானே வேண்டியிருக்கிறது. அதிலும் திடீர் திடீரென்று சுவரொட்டி ஒட்டுவதற்குத் தடை, ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பதற்குத் தடை என்று அரசாங்கம் அதன் இஷ்டப்படி சில ரகளைகள் செய்வதும் பிற்பாடு தளர்த்துவதுமாக விளையாடிக்கொண்டிருக்கையில் கிரகண காலங்களில் வெளிவரும் படங்கள் வம்பில் மாட்டிக்கொள்வது தவிர்க்க இயலாததுதானே, இந்த நேரத்தில் அவர்களுக்குக் கை கொடுப்பது பத்திரிகை வாயிலான செய்திகளைத் தவிர வேறென்ன!<br /></p><p>அடுத்த கட்ட விளம்பர யுக்தி டீவியோடு தொடர்புள்ளது. டீவிக்கு காட்சிகளைக் கொடுப்பது என்பதில் தொடங்கி, டீவியில் விளம்பரம் கொடுப்பது என்று விரிவடைந்து, இப்போது படம் வெளி வந்த முதல் வாரமே சம்பந்தப்பட்ட டெக்னீஷியன்கள் மற்றும் நடிக நடிகைகள் கூட்டாக பேட்டி கொடுப்பது, படத்தைப் பற்றி உரையாடுவது என்பதாக வந்து நிற்கிறது. இதனால் கதை தெரியாமல் படம் பார்க்க விரும்புபவர்கள், முதல் நாள் முதல் ஷோவிலேயே க்யூவில் நின்றோ, ஃபோனில் புக் செய்தோ, திருட்டு டிவிடி வாங்கியோ படத்தைப் பார்த்துவிடுவதே சாலச் சிறந்தது என்கிற நிலைப்பாடே இன்று எழுந்திருப்பது.<br /></p><p>அப்படிப் பார்க்கவில்லையானால் சம்பந்தப்பட்ட நடிகையை டீவியில் பார்த்ததும் சித்தம் இழந்து வாயைப் பிளந்துகொண்டு பார்க்க ஆரம்பிக்கிற வகையில் அந்த நடிகையின் வாய் வாயிலாகவே கடைசிக் காட்சியில் நான் செத்துப்போகும்போது என்கிற வார்த்தைகளைக் கேட்டு வாயடைத்துப் போவது தவிர்க்க இயலாததாகும். இப்படியாக படத்தின் முக்கிய திருப்பங்கள், கதை முதலான எதுவும் ரகசியமில்லாமல் போகும்.<br /></p><p>மணிரத்னம், ஷங்கர், என்று ஏதோ ஒரு சில டைரக்டர்கள்தான் இப்போதும் தங்கள் பாப்புலாரிடி கொடுக்கிற தைரியத்தில் இவற்றை ரகசியமாக வைத்துக்கொள்ள சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த பத்திரிகையாளர் ஒருவர், சிவாஜி வெளிவருவதற்கு முன் என்னிடம் ஒரு செய்தியை சொன்னார். இந்தப் படத்தில் ஒரு பாடலை ஸ்டன்ட் காட்சியாகப் படமாக்குகிறார்கள் என்று. இந்த செய்தியை அவர் பத்திரிகையில் எழுதியபோது ஷங்கரே ஆச்சர்யப்பட்டார் என்பதும் பின்னால் நிகழ்ந்த சம்பவம். அவர் எப்படி இதை அறிந்தார் என்று கேட்டால், அவர் ரொம்ப 'கூலாக' சொன்னார், ஏவியெம்மில் செட் போட்டு உள்ளே யாரையும் விடாமல் ரகசியமாக ஷூட் செய்துகொண்டிருந்தார்கள். உள்ளேயிருந்து பாட்டு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அதனால் பாடல்காட்சி பதிவாவது தெரிந்தது. ஆனால் ஸ்டன்ட் நடிகர்கள் வெளியே வந்து தம்மடித்துக்கொண்டிருந்தார்கள். இந்த இரண்டையும் ஒட்டுவது என்ன சிரமமா?<br /></p><p>இப்படியெல்லாம் ரகசியமாக ஷூட் செய்தாலும் இந்தச் செய்திக் கசிவுகளை விரும்பாத சினிமாக்காரர் ஒருவர் இருக்க முடியுமா என்ன? மணிரத்னம் ஊட்டி மலைக் காட்டில் ஆதிவாசிகளின் குடியிருப்பை அமைத்திருக்கிறார். ராவணா படத்துக்காக பலநாட்கள் அங்கும் சாலக்குடியிலும் ஷூட்டிங் நடக்கிறது என்று சொன்னால், ராமாயணத்தில் வரும் போர்க்காட்சிகளுக்கு பதிலாக வனத்தில் நீண்ட சேஸிங் காட்சிகள் இருக்கப் போகின்றன என்று அனுமானிப்பது பிழையாகப்போவதில்லை. ஆங்கிலத்தில் வெளிவந்த எத்தனையோ வன விரட்டல் காட்சிகள் நம் மனத்தின் மேல்மட்டத்தில் மிதக்க ஆரம்பிப்பதிலும் வியப்பில்லை.<br /></p><p>வீட்டில் உலை கொதிக்கிறதோ - ரைஸ்குக்கர் விசிலடிக்கிறதோ – இல்லையோ பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பாதவர்கள் யாரும் உண்டா? அதே ஆவல்தானே சினிமாவில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதிலும் இருந்து தொலைக்கிறது. இந்த ஆர்வத்துக்கான தீனி என்கிற பெயரில் மறைமுகமான இவ்விதமான கிசுகிசுக்களும், செய்திகளும் எல்லோருக்கும் ஏதாவதொரு பலனை அளிப்பதாக இருக்கத்தானே செய்கின்றன!<br /></p><p>சரி, படத்துக்கு பூஜை போட்டாயிற்று, போஸ்டர் ஒட்டியாயிற்று, விளம்பரங்கள் கொடுத்தாயிற்று, பத்திரிகைகளுக்கு செய்திகள் கசியவிட்டாயிற்று. ஸ்டில்கள் வழங்கப்பட்டாயிற்று. படம் ரிலீஸ் ஆகப்போகிறது. படம் வேறு சுமாராகத்தான் வந்திருக்கிறது. ஓடவேண்டுமானால் இவை மாத்திரம் போதாது. என்ன செய்யலாம்?<br /></p><p>இப்படியொரு குழப்பம் வந்தபோது சமீபத்தில் நம்மாட்கள் ஒரு மிகப்பெரிய லூட்டியை அடித்தார்கள். கலா மாஸ்ட்டர் தயவால் கெமிஸ்டரி என்கிற வார்த்தை இந்த நேரத்தில்தான் டீவியில் வாயிலாக பிராபல்யமடைந்திருக்கிறது. இதை ஏன் நாம் உபயோகித்துக்கொள்ளக்கூடாது? இந்த யோசனையின் பலன்தான் இப்போது நாம் படிக்கும் ஒருசில செய்திகள்.<br /></p><p>நகுலுக்கும் சுனைனாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது. அடுத்த படத்திலும் அவர்களே ஜோடியாக நடிப்பதற்கான காரணம் அவர்களுக்டையே பூத்துள்ள காதல்தான்! ஸ்நேகாவுக்கும் ப்ரசன்னாவுக்கும் கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆகிவிட்டது. அடுத்தது கல்யாணம்தான்!<br /></p><p>இந்த மாதிரி செய்திகள் முன்பெல்லாம் பத்திரிகையாளர்களால்தான் புனையப்பட்டு வந்தன. ஆனால் இன்றைக்கோ சம்பந்தப்பட்ட படத்தின் டீமே இதை தீர்மானித்துவிடுகிறது. படம் நன்றாக ஓட இதுவொரு விளம்பர யுக்தியாகக் கையாளப்படுகிறது. எல்லோரும் சேர்ந்தே செய்கிற இந்தக் கூட்டுக் களவாணித்தனத்துக்கு பத்திரிகைகளும் துணைபோவதே இப்போது நடப்பது. அதாவது, அதைப் படிப்பவர்களைத் தவிர மற்ற அனைவருக்குமே தெரியும், அது பொய் என்பது!<br /></p><p>நம்ம விசிலடிச்சான் குஞ்சுகள், அடடா ஸ்நேகா கல்யாணம் செய்துகொண்டால் அப்புறம் சினிமாவில் நடிக்க வாய்ப்பில்லையே, இந்தப் படத்தைப் பார்த்துத் தொலைத்துவிடுவதுதான் சரியாக இருக்கும்போல இருக்கிறதே என்று அஞ்சி அஞ்சி குறிப்பிட்ட சினிமாவைப் போய் பார்த்துவிடுவார்கள் என்பதே அவர்கள் போடும் கணக்கு!<br /></p><p>காதல் என்பதும் கல்யாணம் என்பதும் அவரவர் சொந்த விவகாரங்கள் என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆனால் பிரபலங்களின் அசைவுகள் அனைத்துமே கண்காணிக்கப்படுவனவாக இருப்பதனால் அவர்கள் எங்கே போகிறார்கள், யாரோடு உறங்குகிறார்கள், யாருடைய வலையில் விழுகிறார்கள், யாரை வலையில் வீழ்த்துகிறார்கள் என்பன யாவுமே செய்திகளாகிவிடுகின்றன.<br /></p><p>இப்படியொரு செய்தியுருவாக்கத்தை சாதிப்பதன் வாயிலாக பத்திரிகைகள் சம்பாதிக்க முடியுமானால் அதே உத்தியை உபயோகித்து படமுதலாளிகள் ஏன் சம்பாதிக்கக்கூடாது என்பதே இப்போது எழுந்திருக்கும் கேள்வி.<br /></p><p>எம்ஜியார் கத்தி வைத்துக்கொள்ளச் சொன்னதுபோல பரபரப்பான செய்தியொன்று எப்போதும் தேவைப்படுவதாகவே இருந்து வருகிறது. அதை யார் எதற்காக உற்பத்தி செய்கிறார்கள் என்பதைப்பற்றியெல்லாம் யாருக்கு அக்கறை? சம்பந்தப்பட்ட நடிகரும் நடிகையும் அல்லது இயக்குனரும் நடிகையும் உள்ளூர புன்னகைத்துக்கொள்வார்கள். நடிகர் அல்லது இயக்குனர் வீட்டில் பார்க்கும் பணக்காரப் பெண் ஒருத்தியை மணந்துகொண்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார், நடிகை மார்க்கெட் சரியும் நேரத்தில் வலையில் விழும் என்னாரையை மணந்துகொண்டு தேசத்தைப் பார்த்துப் போய்விடுவார். அதையெல்லாம் எப்போதோ மறந்துவிட்டு அப்போதுதான் புதிதாக கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆன புதிய நடிகர்களைப் பற்றி படித்து முதுகைச் சொறிந்துகொண்டிருப்பார்கள் ரசிகமஹாஜனங்கள்.<br /></p><p>சினிமா ஒரு சில்லரை வியாபாரம் என்று சொல்வது இதனால்தான். ஒரு படம் ஜெயிக்க வேண்டுமானால் எந்தவிதமான சில்லரைத்தனமான காரியத்தையும் செய்யத் துணியவேண்டும் என்பதே பாலபாடமாக இருக்கும்போது இந்த வாக்கியம் பொருந்தவே செய்கிறது.<br /></p><p>சரி விளம்பர யுக்தி என்பது இவ்வளவு தூரம் வந்துவிட்டது. அடுத்து வேறென்னவெல்லால் செய்யலாம்?<br /></p><p>சம்பந்தப்பட்ட நடிகரையும் நடிகையையும் உல்லாசமாக இருக்க வைத்து அந்தப் பொழுதுகளை ரகசியமாகப் படம் பிடித்து இன்டெர்நெட்டில் போடலாம். அது நாங்கள் இல்லை என்று மிகச் சாதாரணமாக அவர்கள் மறுத்துவிட்டுப் போய்விடுவார்கள் என்பதனால் ஒரு வம்பும் வரப்போவதில்லை.<br /></p><p>அல்லது, ரகசியம்கூட வேண்டாம், கான்ட்ராக்டில் விளம்பரம் வரைக்கும் எழுதும்போது இதையும் எழுதி வாங்கிக்கொள்வது உசிதமாக இருக்கும். ரசிகர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் இரட்டை லாபமாகத்தானே போகும்!<br /></p><p>சம்பந்தப்பட்ட நடிகர் கல்யாணமானவராக இருந்தால் அவரது மனைவியையும் ஒரு ஒப்பந்தத்துக்குள் கொண்டு வரலாம். அதாவது இவ்விதமாக ஒரு வதந்தி பரப்பப்படும். அதைப் பார்த்து மனைவியானவர் நடிகருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும். படம் ஓட ஆரம்பித்து வெற்றி பெற்றுவிடும் என்கிற நம்பிக்கை வரும்போது சமாதானமாகிவிட்டதாக கூட்டாக காஃபி வித் ஹாசனில் நடிகை சகிதம் காட்சி தந்துவிடவேண்டும். இதைவிட வேறென்ன பப்ளிசிடி வேண்டும்?<br /></p><p>தன் மனைவியை மீடியாக்களுக்குக் காட்ட விரும்பாதவர்கள், மாமனாரின் கையில் ஒரு அரிவாளைத் தரலாம். கொஞ்சம் படித்தவராக இருந்தால் துப்பாக்கியைக்கூட கொடுக்கலாம். ஏனென்றால் மகள் விதவையாவதை எந்தத் தகப்பனும் விரும்புவதேயில்லை!<br /></p><p>இந்த மாதிரி உங்களுக்குத் தோன்றும் ஐடியாக்களை ஒரு போஸ்ட் கார்டில் எழுதி நீங்களே கிழித்துப் போட்டுவிடுங்கள், அவர்களின் கண்களில் கிண்களில் தென்பட்டுத் தொலைக்கப்போகிறது!</span></p>சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8130572.post-28999724538893986312009-07-28T11:02:00.001+05:302009-07-28T11:12:55.681+05:30கோவை போ போ என்கிறது, சென்னை வா வா என்கிறது!இன்னும் பதினைந்திலிருந்து முப்பது தினங்களுக்குள் சென்னைக்கு புலம் பெயர்வதாக ஒரு திட்டம். இது இன்றைக்கு நேற்றைக்கு போட்ட திட்டமல்ல, கிட்டத்தட்ட பன்னிரெண்டாட்டுத் திட்டம். ஒருவழியாக இப்போதுதான் கோவையோடான ஜென்ம பிராப்தியை முடித்துக்கொண்டு சென்னைப்பக்கம் வந்து காலை வைக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.<br /><br />உண்மையில் இந்த உலகில் நான் வெறுக்கும் இடங்களில் முக்கியமானது சென்னைதான். என்ன செய்யலாம்? கோவை மாதிரி ஒரு நகரில் வாழ்ந்து பார்த்தவர்களுக்குத்தான் நான் சொல்வதன் அருமை புரியும். நண்பர்கள் பலரும் திரும்பத் திரும்ப கட்டளையிட்டு வந்திருந்தும் இப்போதுதான் இது சாத்தியமாகிறது. எழுத்தாளர்கள் பொதுவாகவே ஏழைகள் என்பதனால் அவர்களை சென்னை ஏளனத்துக்கும் உள்ளாக்கலாம், சீராட்டவும் செய்யலாம் என்பது தொன்றுதொட்டு நாம் பார்த்து வருவதே.<br /><br />சென்னை எனக்குப் புதிதல்ல என்பதனால் அந்த அச்சமொன்றும் இல்லை. அச்சமெல்லாம் வாடகை வீடுகள் பற்றியதாக மட்டுமே இருக்கிறது. நண்பர்கள் யாரேனும் இவ்விஷயத்தில் உதவ முடியுமானால் <span style="font-size:130%;color:#000000;">sudesi@gmail.com</span> என்ற என் ஈமெயில் முகவரிக்கு உங்கள் அழைப்பெண் சகிதம் எழுதலாம். நானே அழைக்கிறேன்.<br /><br />உதவுவது என்றால் அட்வான்ஸ் தொகையை கொடுத்து உதவுவது, மாதாமாதம் வாடகை கொடுத்து உதவுவது என்று பிச்சைக்கார எழுத்தாளர்களைப்போல உங்களை நான் அச்சுறுத்தவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். நல்ல இடத்தில் கையைக் கடிக்காத வாடகையில் ஒரு வீடு! அவ்வளவுதான் தேவையானது! மற்றபடி பக்கத்து வீட்டில் அழகிகள் இருக்கவேண்டும் என்கிற அவசியம்கூட இல்லை.<br /><br />சரி, என் அகராதியில் நல்ல இடம் என்பது எது? கையைக் கடிக்காத வாடகை என்பது எது என்பதாகவெல்லாம் பிரத்யேகமாகத் தெரிந்து கொள்ள மட்டும் விரும்புபவர்களுக்கும் மேற்கண்ட மெயிலுக்கு முறையிட உரிமை வழங்கப்படுகிறது.<br /><br />Atleast இதை யாராவது படித்தார்கள் என்கிற நம்பிக்கையையாவது மாதாவைப் போல மடியில் போட்டுக்கொண்டு அது ஊட்டும் என்பதனால் அதையும் நான் விரும்பவே செய்கிறேன்.<br /><br />-சுதேசமித்திரன்<br /><br />பி.கு.: இவ்விஷயத்தில் முந்துபவர்களுக்கு, ஆடிமாத ஆஃபராக, அவர்கள் விரும்புமிடத்தில் ஆட்டோகிராஃப் போட சித்தமாயிருக்கிறேன்.சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8130572.post-76459910638076451342009-07-27T19:55:00.001+05:302009-07-27T20:05:37.557+05:30நான் சினிமா பார்ப்பதில்லைஎன்னிடம் ஒருசிலர் இந்த வாசகத்தைச் சொல்லியிருக்கிறார்கள்: நான் சினிமாபார்ப்பதில்லை!<br /><br />இந்தக் காலத்தில் இப்படியும் ஒருத்தர் இருக்க முடியுமா என்று உங்களில் ஒருசிலர் கருதலாம். ஆனால் இது உண்மைதான். அதெப்படி? வீட்டுக்குள்ளேயே டீவியை வைத்துக்கொண்டு ஒருவர் சினிமாவையே பார்ப்பதில்லை என்று சொன்னால், குடும்பஸ்தன் கலவியிலேயே ஈடுபட்டதில்லை என்று சொல்வதைப் போல அபத்தம் அல்லவா என்றும் நீங்கள் கேட்கலாம்! ஆனால் இப்படியும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.<br /><br />சினிமா பார்க்காமல் இருப்பதே ஒரு சமூக அந்தஸ்து என்று கருதுபவர்கள் அவர்கள். அவர்களில் ஒரு சினிமாகூட பார்த்தேயிராதவர்கள், சில சினிமாக்களைப் பார்த்து பின் ஒதுங்கிவிட்டவர்கள், சினிமா பார்க்க வகையில்லாதவர்கள், சினிமாவை வெறுப்பவர்கள் என்று பல பிரிவுகள் இருக்கலாம்.<br /><br />பொழுதுபோக்கு கலை என்று எவ்விதமான ஆர்வமும் இல்லாமல் தொழில் ஒன்றே குறியாய் வாழ்கிறவர்களில் பலரும், சம்பாதிக்கும் காசு கைக்கும் வாய்க்கும் எட்டாத நிலைமையில் சினிமா டிக்கெட் விற்கிற விலையில் மனைவியின் உடலே சினிமாதான் என்று நொந்து கிடப்பவர்களில் பலரும் சினிமா பார்ப்பதில்லை; தாங்கள் சார்ந்த மதம் ஆபாசம் என்பதாக அறிவுறுத்துவதால் பலர் சினிமா பார்ப்பதில்லை. சினிமா என்பது வீணர்களின் வேலை என்று கருதும் பல புத்திஜீவிகள் அல்லது ஆராய்ச்சியாளர்கள் அல்லது விஞ்ஞானிகள் சினிமா பார்ப்பதில்லை.<br /><br />இவர்களுக்கெல்லாம் நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். இதனால் சினிமாவுக்கு எந்த நஷ்டமும் இல்லை சகோதரர்களே! இழப்பு உங்களுக்குத்தான்!<br /><br />லூமியர் சகோதரர்கள் முதன்முதலில் சலனப் படத்தைத் திரையிட்டபோது திரையில் ரயிலைப் பார்த்ததும் பார்வையாளர்கள் பயந்து வெளியே ஓடினார்கள் என்பதுதான் சினிமா மனித உள்ளங்களில் நிகழ்த்திய முதல் அனுபவம். அதன் மிச்ச சொச்ச டியென்னேக்கள்தான் இவர்களுக்குள் இருக்கிறதோ என்பதாகவே தோன்றுகிறது.<br /><br />உண்மையில் இப்போதும் ரயிலைப் பார்த்திராதவர்கள் நம் தமிழகத்தில் பலரும் உண்டு. கடலைப் பார்த்திராதவர்கள் அதனினும் ஏராளம் உண்டு. ஆனால் அவர்களும் அவற்றை சினிமாவில் பார்த்துவிட்டவர்கள்தான். தண்டவாளம் போட முடியாத ஊர்களுக்கெல்லாம் ரயிலைக் கொண்டுபோகிற சாதனையை சினிமாவைத் தவிர வேறு எதுசெய்ய இயலும்?<br /><br />சினிமா அறிமுகமான புதிதில், பெண்ணடிமைத்தனம், சமூக கட்டுத்திட்டங்கள் என்று மிகவும் உள்ளொடுங்கியிருந்த நம் மனங்கள் சினிமாவைப் பார்ப்பதை ஒரு பாவமாகவே கருதிய காலம் இருந்தது. சினிமா நடிகன் என்றால் கூத்தாடி என்றும் நடிகை என்றால் வேசி என்றும் வர்ணிக்கப்பட்ட அந்தக் காலத்தில் சினிமா மைனர்களின் கேளிக்கைகளில் ஒன்றாகவே கருதப்பட்டுவந்தது நியாயமானதுதான். ஆனால் இப்போது எத்தனையோ தொழில்நுட்ப சாத்தியங்களை உள்வாங்கிக்கொண்டு இவ்வுலகில் உலவும் எத்தனையோ தொழில்களோடு நெஞ்சு நிமிர்த்தி சவால்விடும் சினிமா எனும் பேரியக்கத்தை உங்களால் எப்படி வெறுக்க முடியும்?<br /><br />நடிகர் சிவாஜிகணேசன் ஒருமுறை விமானத்தில் அருகில் உட்கார்ந்திருந்தவரிடம் பேச்சுக் கொடுத்த கதை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். தன்னைக் கண்டுகொள்ளாத சக பயணியிடம் நான்தான் சிவாஜி கணேசன் என்று அவர் சொன்னார்.<br /><br />அதற்கு அவர் அப்படியா என்ன பண்றீங்க என்று கேட்டார் என்பது அந்தச் சம்பவம். இதில் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். அவர் சினிமா பார்க்காதவராகவே இருக்கட்டும். சாலையில்தானே அவர் பயணிக்கும் கார் ஓடுகிறது! சுவர்களெங்கும் ப்ளோஅப்களாக இந்த சகபயணியின் முகத்தை ஒருமுறைகூட அவர் கண்டதேயில்லையா? இதற்கான பதில் மிகவும் எளிமையானது. கண்டிப்பாகப் பார்த்திருப்பார். நாட்டமில்லாத ஒன்று மனத்தில் பதிவதில்லை என்பதனால் நேரில் பார்க்கும்போது அடையாளம் தெரிய இயலாமல் போவது இயல்பானதே!<br /><br />இந்த நாட்டம் என்கிற வார்த்தைதான் மிகவும் முக்கியமானது. ஊரில் எத்தனையோ கோவில்கள் இருக்கின்றன. எல்லோருமா கோவில்களுக்குப் போகிறார்கள்? வருஷாவருஷம் உங்கள் ஊரில் சர்க்கஸ் நடக்கிறது, ஒவ்வொரு வருஷமுமா நீங்கள் போய்ப் பார்க்கிறீர்கள்? எத்தனையோ டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கின்றன. அதற்காக எல்லோருமா குடிக்கிறார்கள்? எதிலும் ஒரு நாட்டம் வேண்டும். நீங்கள் பழகாத ஒன்றை நீங்கள் எப்படி விரும்ப முடியும்?<br /><br />என்னுடைய இரண்டு நண்பர்களைப் பற்றி இங்கே குறிப்பிடலாம், ஒருவர் கிறிஸ்துவத்தைச் சார்ந்தவர். அவர் உறவுக்காரப் பெண்கள் மற்றும் அறிமுகமாகும் பெண்கள் பலரோடும் கலவியில் ஈடுபடுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அவர்களை வசீகரிக்க அவர் பல தந்திரங்களை உபயோகிப்பார். அவற்றில் முதலாவது சினிமா. அவர் புதிதாக அறிமுகமாகும் பெண்ணிடம் சொல்வார், நான் சினிமா பார்ப்பதில்லை. அவளுக்குள் ஏற்படும் மெல்லிய வியப்பு அவருக்கு போதுமானது. அதைத் தொடர்ந்து ஏன் பார்ப்பதில்லை என்கிற விவாதமொன்று அங்கே எழுந்தே தீரும் என்பதனால் மீதியெல்லாம் நடக்க வேண்டிய விதத்தில் நடந்தே தீரும். அவர் உண்மையிலேயே சினிமா பார்க்க விரும்பாதவர்தான். அவருக்கு சினிமா ரத்தமும் சதையுமாக வேண்டும். திரையில் எல்லாம் போட்டுக் காட்டினால் போதாது. தற்போது அவர் ஒரு மதபோதகராக சிறப்பாக இயங்கி வருகிறார். வீடு வீடாகச் சென்று மதப் பிரசங்கங்கள் செய்கிற வேலை. எதன்இடத்தை எது பிடித்துக்கொண்டது என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.<br /><br />இன்னொரு நண்பர், மிக முக்கியமான ஒரு நடிகையை ஒரு கெஸ்ட் ஹவுசில் பார்த்த கதையை நெடுங்காலமாக சிலாகித்து வருபவர். அவள் இறுக்கமான அரைக்கால் சட்டைஅணிந்து (அதைக் கால்கால் சட்டை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்) கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தாள். அந்த மாதிரி தொடைகளை நான் என் ஆயுட்காலத்தில் பார்த்ததில்லை என்று அவர் மருகுவார். தொடையைப் பார்த்ததற்கே இத்தனை மருகினால் உடையை நீக்கியிருந்தால் எத்தனை பதற்றம் ஆகியிருப்பார். அவர் தானாக ஒருபோதும் சினிமாவுக்குப் போக மாட்டார். எப்போதாவது நான் வலியுறுத்தினால் வருவார். அப்படி அவர் பார்த்த படங்கள் குணா மற்றும் மகாநதி. அந்தப் படங்களின் சோகமான முடிவு அவருக்குள் ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தியது. தொடையும் உடையும் தருகிற பதற்றத்தைவிடவும் சோகம் தரும் பதற்றம் மிகப் பெரியது என்பது அப்போது தெரிந்தது. ஏனென்றால் அதன்பிறகு அவர் எந்தப் படத்துக்கும் வரத் தயாராக இல்லை.<br /><br />இப்படியொருவர் சினிமா பார்த்து மனநடுக்கம் கொள்ள முடியுமா? ஏன் முடியாது? ஒவ்வொருவர் மனத்தின் சுமை தாங்கும் அளவும் ஒவ்வொருவிதமானதுதானே! என் உறவுக்கார மூதாட்டி ஒருவர். பெரும்பாலும் சினிமாவுக்கே போகாத அவரை வெள்ளை ரோஜா என்கிற சிவாஜி கணேசன் நடித்த படத்துக்குக் குடும்பத்தோடு கூட்டிப்போனார்கள். மொழுமொழுவென்று க்ஷவரம் செய்த முகத்தோடு வெள்ளங்கி புனைந்து அடர்த்தியான கறுப்பு ப்ரேம் கண்ணாடியோடு சிவாஜிகணேசன் ஒரு பாதிரியார் பாத்திரத்தில் அந்தப் படத்தில் நடித்திருப்பார். அந்த ஊரில் ஒரு பெண் கொலை செய்யப்படுவாள். போஸ்ட் மார்ட்டம் செய்யாமல் உடலைப் புதைத்துவிடுவார்கள். பாதிரியார் தன் சகோதரரான டியெஸ்பி (மற்றொரு சிவாஜி)யிடம் புதைத்த உடலைத் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்வார்.<br /><br />மறுநாள் டியெஸ்பி ஊர்க்காரர்கள் முன்னிலையில் சவப்பெட்டியைத் தோண்டியெடுத்து திறந்து பார்த்தால் உள்ளே பாதிரியாரின் சவம் இருக்கும். இது அந்த சமயத்தில் சாதாரணமாக எல்லா பார்வையாளர்களையுமே சீட்டின் நுனிக்குக் கொண்டு வந்த காட்சி.<br /><br />இந்தப் படம் துவங்கியதிலிருந்தே நான் சொல்லும் மூதாட்டி, இந்த கெட்டப்பில் சிவாஜி தன் இறந்துபோன சகோதரனைப் போலவே இருப்பதாக சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார். இந்தக் காட்சியில் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பில் திரையரங்கிலேயே அவர் இறந்துவிட்டார். இது கோவையில் நடந்த சம்பவம்.<br /><br />சினிமாவின் தத்ரூபம் ஏற்படுத்துகிற மாயையின் வினை இது. அவர் சினிமா பார்க்காமலே இருந்திருந்தால் இருந்திருக்கலாம்!<br /><br />இந்த மாதிரி உதாரணங்கள் இருந்தாலும் சினிமா என்பது எவ்வளவு உன்னதமான கலைவடிவம் என்பதை பார்வையாளர்கள் உணரவேண்டும் என்பதே முக்கியமானது. சினிமா பார்க்க விரும்பாதவர்கள் பலரும் எப்படி சினிமாவைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறார்களோ, அதேமாதிரிதான் சினிமா பார்க்க விரும்புபவர்களில் பலரும்கூட சினிமாவைப் பற்றிய அபத்தமான புரிதலைக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.<br /><br />நான் சினிமா பார்க்க விரும்புகிறேன் என்று மார்தட்டிக்கொள்ளும் ஒருவருக்கும் நான் சினிமா பார்ப்பதில்லை என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒருவருக்கும் இந்த இடத்தில்தான் எவ்விதமான வித்தியாசமும் இல்லாமல் போகிறது.<br /><br />நான் சினிமா பார்க்க விரும்புகிறேன் என்று சொல்பவர் பார்க்க விரும்புகிற சினிமா எது என்று கேட்டுப் பாருங்கள், அதற்கு பதிலாக அவர் சினிமா பார்க்காமலே இருந்துவிடுவதுதான் பெட்டர் என்பதுதான் தெரியவரும். சினிமா என்றால் ஒரே ஆர்ப்பாட்டமாக இருக்க வேண்டும்; குத்தாட்டம், கும்மாளம் என்று ஜங்கு ஜங்கென்று குதிப்பதாக இருக்க வேண்டும்; ஒற்றை ஆள் ஐம்பதுபேரை அடி பின்னுவதாக இருக்க வேண்டும்; சீறிப் பாய்கிற கார்கள் ஒன்றோடொன்று மோதி ஆகாயத்தில் பறக்க வேண்டும்; உலகில் உள்ள அழகான லொக்கேஷன்களிலும் ஸ்டுடியோவில் கோடிக்கணக்கான செலவில் போடப்பட்ட செட்டுகளிலும் நாயகனும் நாயகியும் தறிகெட்டு நாட்டியமாடவேண்டும்; நகைச்சுவை என்கிற பெயரில் காமெடியன்கள் வந்து கூத்தடிக்கவேண்டும், கதாநாயகி அல்லது கவர்ச்சி நடிகை (எவ்வளவு அபத்தமான பிரயோகம் இது!) ஆகக் குறைந்த ஆடையில் வந்து மனசை அள்ளவேண்டும். இப்படியெல்லாம் எந்த சினிமா இருக்கிறதோ அந்த சினிமாவை நான் பார்க்க விரும்புகிறேன் என்று ஒருவர் சொன்னால், அந்த சினிமா வரவும் வேண்டாம், அதை அவர் பார்க்கவும் வேண்டாம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.<br /><br />இம்மாதிரி படம் எடுப்பது தவறு என்று மற்ற விமர்சகர்கள்போல நான் சொல்ல வரவில்லை. வரட்டும், சினிமாவின் தவிர்க்க இயலாத ஒரு வடிவமாக இதுவும் இருந்துவிட்டுப் போகட்டும், பெரும் பணம் முதலீடு செய்யப்படும் ஒரு சினிமா வடிவம் தவறுதலாக பூதத்தைக் கிளப்பியதுபோல கிளம்பிவிட்டது. அதை அடக்குவது இயலாதுதான். ஆனால் இந்தக் காரணத்தால்கூட பலரும் சினிமாவைப் பார்க்க விரும்பாமல் இருக்கலாம் அல்லவா! அவர்கள் அளவில் குறைந்தவர்கள் என்பதனால்தானே கருத்தில் கொள்ளப்படுவதேயில்லை!<br /><br />நல்ல சினிமா வரட்டும் பார்க்கிறேன் என்று ஒருசிலர் என்னிடம் சொன்னதுண்டு. அவர்களில் எவ்வளவு நல்ல சினிமாவைக் கொடுத்தாலும் நொட்டை நொள்ளை சொல்லும்ஆசாமிகளைத் தள்ளிவிடலாம், சினிமா என்பது அபத்தங்களும் ஆபாசங்களும் நிறைந்ததல்ல என்கிற உத்திரவாதத்தைத் தருகிற சினிமாக்களை மட்டுமாவது நம்மால் அவர்களுக்குக் கொடுக்க முடிந்தால் அதுவே பெரிய வெற்றிதானே!சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8130572.post-83149962922656558062009-07-16T12:06:00.002+05:302009-07-16T12:11:43.063+05:30அழகர் உலகம்<span style="font-size:85%;"></span><br /><p><span style="font-size:85%;">அழகர் உலகம் என்பது பல வருடங்களுக்கு முன்னால் நான் வானொலிக்காக எழுதிய நாடகத்தின் தலைப்பு. அழகான நடிகன் ஒருவனை அவலட்சணமான நிருபன் ஒருவன் பேட்டியெடுக்கிறான். பேட்டியின் முடிவில் அழகற்றவன் அழகனாகவும் அழகானவன் அவலட்சணமாகவும் தோற்றமளிக்கிறார்கள். அவர்களைத் தவிர வேறு பாத்திரங்கள் நாடகத்தில் கிடையாது. கதாபாத்திரங்களுக்கு சொந்தமாக வசனம் பேசுகிற சுதந்திரம் அந்த நாடகத்தில் இருந்தது. அதாவது தாங்கள் ஒரு நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கிறோம் என்றுகூட கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வார்கள். என்னைவிட உனக்குத்தான் நல்ல வசனம் எழுதியிருக்கிறான் சுதேசமித்திரன் என்றுகூட ஒரு வசனம் வரும். இப்படியெல்லாம் எழுதினால் ஒலிபரப்புவதற்கு நம் வானொலி என்ன அகில உலக வானொலியா? இதனால் அந்த நாடகம் வானொலியில் வெளிவரவே இல்லை. இருந்தாலும் அந்த நாடகம் சொல்ல வந்த விஷயத்தை ஒரு கட்டுரையின் வாயிலாக இங்கே சொல்லிவிட முடியும். தலைப்பாவது வீணாகாது பாருங்கள்!</span></p><span style="font-size:85%;"><p><br />சமீபத்தில் என் எதிர்வீட்டுப் பெண்ணுக்குக் கல்யாணம் நடந்தது. சாதாரணமாக ஓரளவு அழகான பெண்தான் அவள். ஆனால் கல்யாணத்திற்காக மேக்கப் என்பதாகவோர் அயோக்கியத்தனம் செய்யப்பட்டு, மணப்பந்தலில் முகத்தைப் பார்க்க சகிக்கவில்லை. இதில் மூன்று காமிராக்களை வைத்து க்ளோஸப் வேறு யெல்ஸீடி திரைகளில் விரிக்கப்பட்டது. இந்தக் கொடுமைகள் இப்போது பொதுவாக எல்லா கல்யாணங்களிலும் நடந்தேறுகின்றன. இதற்கு ஆதார காரணம் என்ன என்று நான் சொல்ல வேண்டியதில்லை.<br /></p><p>உண்மையில் மேக்கப் என்கிற ஒப்பனை ஒரு சில முகங்களை அழகாக மாற்றிவிடுகிறது. ஒருசில முகங்களை விகாரமாக மாற்றிவிடுகிறது என்பதே உண்மை. மேக்கப் டெஸ்ட் என்பது ஒருவர் ஃபோட்டோஜினிக் முகம் கொண்டவரா இல்லையா என்பதைத்தான் தீர்மானிக்கிறதே தவிர, மேக்கப் செய்தால் அழகாக இருக்கிறாரா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதில்லை. ஃபோட்டோஜினிக் என்பது காமிரா லென்சுக்கு ஒரு முகத்தைப் பிடித்திருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றிய சமாச்சாரம்.<br /></p><p>உதாரணமாக பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி நல்ல போட்டோஜினிக் முகம் கொண்டவர். ஆனால் அவரின் பேத்தியான நடிகை வைஷ்ணவி போட்டோஜினிக் முகம் இல்லாதவர். வைஷ்ணவியோடு நான் பணியாற்றியிருக்கிறேன். முதல் நாள், டாப்ஸும் இறுக்கமான முக்கால் பேன்ட்டும் அணிந்து மேக்கப் கீக்கப் ஏதும் இல்லாமல் அவர் வந்து நின்றபோது, யார் இந்த சூப்பர் பிகர் என்றுதான் முதலில் நினைத்தேன். உண்மையிலேயே மிக அழகான பெண் அவர். ஆனால் லென்ஸுக்குத்தான் ஏனோ அவர் முகத்தைப் பிடிப்பதேயில்லை. திரைப்படத்தில் பார்க்கும்போது முகம் விரிந்து ஒருமாதிரியாகத் தெரியும். பெரும்பாலும் அழுகைக் கதாபாத்திரங்களையே வேறு அவர் தாங்கி வந்த வகையிலும் அவர் உண்மையிலேயே நல்ல அழகி என்பது பலருக்கும் தெரியாமலே போய்விட்டது.<br /></p><p>சார்லி சாப்ளின் என்கிற நடிகனின் முகம் அவனது சொந்த முகத்திலிருந்து முற்றிலும் வேறானது என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். ஹிட்லர் மீசையும் கண்களைச் சுற்றிலும் அப்பிய மையும் உயர்த்திய புருவமுமே அந்த வேறொரு முகத்தை அவருக்கு வழங்கின. பழைய தமிழ்ப்படங்களைப் பாருங்கள், எம்ஜியார் முதற்கொண்டு விதிவிலக்கேயில்லாமல் நடிகர்கள் கண்ணுக்கு மையிட்டிருப்பார்கள். மையிட்ட கண் ஹைலைட் ஆகிறது. ஓவியத்தில் தேவைப்படுமிடங்களில் வைக்கப்படும் கறுப்புதான் ஓவியத்தின் டெப்த்தைத் தீர்மானிக்கிறது. இதே வேலையைத்தான் முகத்தில் மை செய்கிறது.<br />இதனால்தான் மேக்கப் இல்லாத நடிகையின் முகம் விகாரமானது என்பதுபோன்ற விகடங்கள் எழுந்து தொலைத்திருக்கின்றன. மிக அழகாக அலங்காரம் செய்யப்பட்ட முகம் அந்த அலங்காரங்களைக் கலைத்துவிட்டுப் பார்த்தால் மிகச் சாதாரணமாகத் தெரிவதில் வியப்பென்ன இருக்கிறது!<br /></p><p>சரி, அழகு என்பது என்ன என்பதற்கு வருவோம். வசீகரமானது அழகு. சினிமாவில் இவ்விதமான வசீகரம் எல்லா தரப்பிலும் தேவைப்படுவதை நம்மால் தவிர்க்க முடிவதேயில்லை. சத்யஜித்ரேகூட தன்னுடைய படங்களில் நடிக்கும் நடிகனோ நடிகையோ கண்டிப்பாக அழகாக இருக்கவேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததாக அவர்மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு.<br /></p><p>அழகு என்கிற வசீகரம் ஆளாளுக்கு மாறுகிற காரணத்தாலேயே பலவிதமான ஆளுமைகள் சினிமாவில் நமக்குக் கிடைக்கின்றனர். ரஜினிகாந்த்தின் கண்கள் வசீகரமானவை, கமலஹாசனின் ஒயில் வசீகரமானது, அஜீத்தின் புன்னகை வசீகரமானது, விஜய்யின் முகம் வசீகரமானது, பிரபுதேவாவின் நடனம் வசீகரமானது, ஜேகேரித்தீஷின் பர்ஸ் வசீகரமானது என்று வசீகரத்தின் தன்மைகள் மாறுபட்டுக்கொண்டே இருக்கின்றன.<br /></p><p>அழகு அவசியமானதுதான். சாலையில் நடந்து போகிறவர்களில்கூட அழகானவர்கள்தான் திரும்பிப் பார்க்கப்படுகிறார்கள். இப்படியிருக்க, சினிமாவோ பார்வையாளனை மனதிற்கொண்டே படமாக்கப்படுவது. ஏதோவொரு விதத்தில் பார்வையாளனைக் கவர வேண்டிய கட்டாயம் அதற்கு உண்டு. அழகானவர் என்பதாக அறியப்படும் கமலஹாசன் தன் குணா படத்தில் கறுப்பாக மாறியபோது களையில்லாத அவரது முகத்தோற்றத்தைப் பார்த்து நாவிதராக வரும் சிவாஜி (கணேசன் அல்ல), நம்ம மாதிரி வித்தியாசமான முகம் இருந்தாலே அப்படித்தான் பாப்பாங்க என்று சொல்வார்.<br /></p><p>இந்த இடத்தில்தான் சினிமா சறுக்குகிறது. உண்மையிலேயே வசீகரம் இல்லாத ஒரு நடிகனை வசீகரம் இல்லாத ஒரு கதாநாயகப் பாத்திரத்துக்குப் பொருத்திப் பார்க்க எமது சினிமா தயாராக இல்லை. நாயகன் அழகற்றவன் என்றால் அழகான நாயகன் ஒருவன் அழகற்றவனாக மேக்கப் செய்யப்படுவானே தவிர, வேறு ஒன்றும் நிகழாது. குணாவாக மட்டுமல்ல, சப்பாணியாகவும்கூட ஒரிஜினல் சப்பாணி ஒருவர் நடிக்க முடியாது.<br /></p><p>இந்த விஷயத்தில் கேரளா ஓரளவு தேவலாம். இத்தனைக்கும் மலையாளிகள் பொதுவாகவே தமிழர்களை விடவும் அழகானவர்கள் என்பதே எனது பர்சனல் கருத்து. என்ன இருந்தாலும் தெய்வத்தின்டெ ஸ்வந்தம் மாந்தரல்லவா அவர்கள்! மலையாளத்தில் ஸாந்தம் என்ற படத்தில் இயக்குனர் ஜெயராஜ், ஐயெம் விஜயன் என்கிற நடிகரைக் கதாநாயனாக அறிமுகப்படுத்தினார். அவர் இந்திய கால்பந்து அணியின் வீரர். அவரது தோற்றம் தமிழில் திமிரு திரைப்படத்தில் வில்லனாக நடிக்க மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது.<br /></p><p>நாயகர்களை விடுங்கள், நாயகியரைப் பொறுத்தவரைக்கும் இயக்குனர்கள் சின்ன வயசில் காதலித்துத் தோற்றுப்போன முகங்களுக்கே இங்கே முன்னுரிமை தரப்படுகிறதோ என்றே தோன்றுகிறது. சற்று கூர்ந்து கவனித்துப் பாருங்கள், பாரதிராஜா பெரும்பாலும் ஒருவிதமான முகத்தால் வசீகரிக்கப்பட்டு வந்திருக்கிறார். என்னுயிர்த் தோழன் ரமா, கருத்தம்மா ராஜஸ்ரீ, அலைகள் ஓய்வதில்லை ராதா, முதல் மரியாதை ரஞ்சனி, கல்லுக்குள் ஈரம் அருணா முதலான முகங்கள் அவருக்குப் பிடித்தமானவை. மணிரத்னம் சரண்யா, மதுபாலா ஆகியவர்களின் எளிய முகங்களால் வசீகரிக்கப்படுகிறார். பாலச்சந்தருக்கு கண்கள் பெரிதாகவும் கன்னம் பம்மென்றும் இருந்தாகவேண்டும். பாலுமகேந்திராவையோ கேட்கவே வேண்டாம், டிபிகல் தமிழ் முகம் அவரை வசீகரித்துவிடுகிறது. ஷோபா, அர்ச்சனா, மவுனிகா என்று ஒரு பட்டியல் நீள்கிறது. இதனாலேயே இயக்குனர்களின் பர்சனல் காதல் தோல்விகள்தான் முகங்கள் குறித்த அவர்களின் வசீகரத்தைத் தீர்மானிக்கின்றன என்று சொல்லவும் ஏதுவாகிறது.<br />அவர்களுக்கு எது அழகு என்று தோன்றுகிறதோ, அந்த முகங்களைத் தமிழன் பார்த்துத் தொலைய வேண்டியதிருக்கிறது. அவர்களில், நெளிவுகள் சுளிவுகள் பிணைந்த ஆற்றல் உடையவர்கள் நிலைத்து நின்றுவிடுகிறார்கள். மற்றவர்கள் நம்மை அதிகம் இம்சைப்படுத்தாமல் ஓரங்கட்டப்பட்டுவிடுகிறார்கள்.<br /></p><p>அழகானவர்கள் என்பதாகக் குறிப்பிட முடியாத சிலரும் சினிமாவில் உயரங்களை எட்டியிருக்கவே செய்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ஹீரோவாக நடித்த இயக்குனர்களாகவே இருப்பார்கள். நடிகர் ராபார்த்திபனின் முகம் எவ்வளவு கரடு முரடானது! ஆனால் அவரிடம் இருக்கும் நக்கல் அவரது வசீகரமாகிறது. அதுவே அவரது அழகாக ஒப்புக்கொள்ளப்பட்டு அவர் ரசிக்கப்படுகிறார். பாக்கியராஜ், பாண்டியராஜன் ஆகியோரின் காமெடி சென்ஸ் அவர்களின் அழகு. நாசரின் வித்தியாசமான மூக்கு அவருக்கான அழகாக நினைவுகொள்ளப்படுகிறது. பிரகாஷ்ராஜின் ஆளுமை அவரது அழகாகிறது.<br /></p><p>இந்த உதாரணங்கள் சினிமாவில் பொதுவாக அழகு என்பதாக அறியப்படும் கருத்துக்கு மாற்று தேவை என்பதையே உணர்த்துகின்றன. ஒரு நடிகராக சேரனிடம் ஒரு வசீகரமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஓர் இயக்குனராகவே அவரை நான் மதிக்கிறேன். இருந்தாலும் அவரும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். சொல்ல மறந்த கதைக்கு அவர் சரிதான். ஆனால் ஆட்டோகிராஃபுக்கு அவர் தேவையில்லை என்பதே எனது கருத்து. ஏனென்றால் காமிராவுக்கு முன்னால் புதிதாக அவர் எதையும் செய்துவிடுவதேயில்லை. ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த உதாரணம் எதைக் காட்டுகிறது? ஒருவர் கதாநாயகனாக நிலைக்க வேண்டுமானால் அதற்கு அவர் நடித்த படங்கள் ஓடினால் மட்டுமே போதும் என்கிற நிலைமையையே காட்டுகிறது. அப்படியானால் ஒருவர் அழகாய் இருப்பதால் புதிதாக என்ன ஆகிவிடப்போகிறது?<br /></p><p>ஆகச்சிறந்த நடிப்புத் திறமை உள்ள ஒருவர் மிகுந்த விகாரமான தோற்றம் கொண்டவர் என்கிற காரணத்தினால் மட்டுமே நாயகனாக நடிக்க முடியாமல் போவது உண்மையிலேயே துன்பகரமானது என்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. மிக அற்புதமான நடிப்பாற்றல் உள்ள ஒரு நடிகை களையில்லாத முகத்தோற்றம் கொண்டிருப்பதனால் இரண்டாம் கதாநாயகி, தோழி, தங்கை என்று பின்னுக்குத் தள்ளப்படுவது எவ்விகிதத்தில் சரி என்பதும் எனக்கு விளங்கவேயில்லை.<br /></p><p>யாருக்கு பயந்து இவ்விதமான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன? பார்வையாளர்களுக்கு பயந்தா? பார்வையாளர்கள் அழகை மட்டுமே பார்க்கக்கூடிய அரைக் குருட்டுத்தனம் கொண்டவர்கள் என்பதாக அவர்கள் கருதுகிறார்களா? தேவலோகத்தில் அப்சரஸ்கள் அழகாக இருப்பார்கள் என்றால் அழகிகளை அப்சரஸ்களாகக் காட்டுங்கள், மெக்கானிக் பையன் அழுக்காக மட்டுமல்ல, அதிக வசீகரமும் இல்லாதவனாகத்தானே இருப்பான், அதற்கு எதற்கு பரத் மாதிரி ஒரு நடிகரின் அவசியம் வருகிறது?<br /></p><p>கடைசியாக நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான், வசீகரம் இல்லாத முகம் என்பதாக ஒன்று இல்லவே இல்லை. அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை என்பதைத் தவிர வேறு குறையேதும் இல்லை. மிகச் சாதாரணமான முகம் கொண்டவர்கள் பழகப்பழக மிக அழகானவர்களாகத் தோன்ற ஆரம்பிப்பதே இயற்கையானது. மிக அழகாக இருப்பவர்கள் தங்கள் குணத்தால் மிகக் குரூரமானவர்களாகத் தோன்றுவதும் நிகழ்ந்தே வருவது. பழக்கமே அழகைத் தீர்மானிக்கிறது. திரும்பத் திரும்பப் பார்க்கப்படும் முகம் மனத்தில் பதிந்து நம் சொந்த முகத்தைப்போல மாறிவிடுகிறது.<br />தான் அழகற்றவன்/அழகற்றவள் என்பதை ஒப்புக்கொள்ள ஒருத்தரும் இங்கே தயாராக இல்லை. தான் என்பது தோற்றமும் மனமும் ஒருங்கிணைந்த ஒன்று. முகம் எப்படி ஒரு அடையாளமோ, அதேமாதிரிதான் செய்கைகளும் அடையாளமாகின்றன. அதேமாதிரிதான் திறமைகளும் அடையாளமாகின்றன. மிகச் சிறப்பாக கிரிக்கெட் விளையாடும் ஒருவன் அழகாக இல்லை என்பதற்காக டீமில் சேர்க்கப்படாமல் தவிர்க்கப்படுவதில்லை. மிக இனிமையாகப் பாட்டுப் பாடும் ஒருத்தி அழகாக இல்லை என்பதற்காக மேடையில் மறுக்கப்படுவதில்லை.<br />சினிமாவில் மட்டும் ஏன் இந்தப் பாரபட்சம்? அதுவும் முழுக்க முழுக்க திறமைக்கே முக்கியத்துவம் தரப்படவேண்டிய அந்த உலகில் திறமை என்பதை அழகு என்பது தன் காலால் மிதித்து நர்த்தனம் ஆடிக்கொண்டிருப்பதில் அர்த்தமென்ன இருக்கிறதோ விளங்கவேயில்லை.</span></p>சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8130572.post-33594758939656754762009-07-14T13:21:00.003+05:302009-07-14T13:24:53.829+05:30இடையில் எதற்கொரு வேளை?<span style="font-size:85%;"></span><br /><p><span style="font-size:85%;">ஒருகாலத்தில் மாருதியின் வால் போல எமது சினிமாக்கள் நீண்டு கிடந்தன. (மாருதி என்றதும் மாருதி உத்யோக் நிறுவனத்தின் படைப்புகளுக்கு ஏது வால் என்று கேட்கக்கூடாது. இது கரசேவை கால்சேவை என்று தரமிழந்து போகாத சாக்ஷாத் ராமபக்த மாருதியின் வால்) மூன்று மணி நேரம், நான்கு மணி நேரம் என்று இலக்கில்லாமல் சுட்டுத்தள்ளப்பட்டு எடிட் செய்யப்பட்ட அந்தப் படங்களை மகாஜனங்கள் பார்க்குங்கால் நடுவில் மூத்திரம் முட்டுவதில் நியாயம் இல்லாது போகாது.</span></p><p><span style="font-size:85%;">அந்தக் காலத்தில் பாட்டு போட்டால் எழுந்து வெளியே போகிற சுதந்திரம் தங்களுக்கு உண்டு என்பதைக்கூட பார்வையாளர்கள் அறிந்திருக்கவில்லை. ஏனென்றால் படமே முழுக்க பாடல்களாலேயே நிரம்பியிருந்தது. இதனால் பாட்டுக்குப் பாட்டு மூத்திரம் பெய்ய வேண்டுமானால் தண்ணீர் பாட்டிலைக் கையோடு கொண்டுவந்திருந்தால்கூட ஆகாது. ஆங்கிலப்படங்களில்கூட இம்மாதிரி நீண்ட படங்கள் நிறைந்திருந்த காலமாகவே அது இருந்தது. இதனால் ஒரு இடைவேளைக்கு பதில் இரண்டு இடைவேளை விட்ட சரித்திரம்கூட உண்டு. ஹிந்தியில் சங்கம், மேரா நாம் ஜோக்கர் ஆகிய படங்கள் இரண்டு இன்டர்வெல் விடப்பட்ட படங்கள். தமிழில் நீண்ட படங்கள் வந்திருந்தும் இரண்டு இன்டர்வெல் விட்ட வரலாறு இருப்பதாக நினைவில்லை. ஆனால் கிராமத்து டூரிங் டாக்கீஸ்கள் ஒரே ப்ரொஜக்டர் வைத்து இயக்கப்பட்டதனால் ரீல் மாற்றுவதன்பொருட்டு மூன்று இடைவேளைகள் விடும் பழக்கம் இன்னும்கூட உண்டு.<br /></span></p><p><span style="font-size:85%;">இரவெல்லாம் விழித்திருந்து கதைசொல்லிகளின் பிரசங்கங்களையும் தெருக்கூத்துகளையும் பார்த்துப் பழகிய கூட்டமாக இருந்த வகையில் சினிமாவும் அவ்விதமாக நீண்டதாகவே இருந்தது இயல்பானதே. அதற்கு இடைவேளைகள் தேவைப்படுவதும் இயல்பானதே. ஆனால் இன்றைக்கு அப்படியா?<br /></span></p><p><span style="font-size:85%;">இரண்டரை மணிநேரப் படம் என்பது எழுதப்படாத சட்டமாக ஆனபின்னால் இடைவேளை என்பதும் மறுக்கப்படாத ஏற்பாடாக ஆகிவிட்ட சூழல் இன்று. இதனால் இடைவேளை என்பது கான்டீன் என்பதாக ஒன்றையும் உற்பத்தி செய்துகொடுத்தது. பூங்காக்களுக்கோ கடற்கரைக்கோ பொழுதைப் போக்கச் செல்பவர்கள் எதையாவது வாங்கி உண்பதில்லையா, அதுபோல சினிமாத் தியேட்டர்களுக்கு கேளிக்கை நோக்கத்தில் போகிறவர்களும் எதையாவது வாங்கித் தின்ன வேண்டும் அல்லவா. இப்படி உற்பத்தியான இந்த வழக்கம் இன்றைக்கு இதற்காகவே திரைப்படங்கள் இடைவேளை விடவேண்டும் என்கிற கொடுமைக்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.<br /></span></p><p><span style="font-size:85%;">இதன் உச்சபட்ச ரகளைதான் வெறும் ஒன்றரை மணிநேரமே ஓடுகிற ஆங்கிலப் படங்களுக்குக் கூட எமது தியேட்டர்களில் விடப்படும் இடைவேளை. இந்தக் கான்டீன் ஒரு பெரிய ஹோட்டல் சாம்ராஜ்ஜியத்தையே உற்பத்தி செய்து கொடுத்த ஆச்சரியம்கூட கோவையில் நிகழ்ந்தது. கோவை சென்ட்ரல் தியேட்டரில் தாமோதரசாமி நாயுடு என்பவர் ஒரு கான்டீன் நடத்தினார். கான்டீனில் இட்லி கொடுக்கலாம் என்பதாக அவருக்குத் தோன்றியது. அவரது இட்லியும் சாம்பாரும் பருப்பு வடையும் தியேட்டரில் கூட்டத்தைச் சேர்த்தன. தியேட்டரிலிருந்து வெளியே வந்தபோது அன்னபூர்ணா என்கிற பெயரில் ஒரு பெரிய சாம்ராஜ்ஜியமாகவே அது மெல்ல மெல்ல பரிணாமமடைந்தது.<br /></span></p><p><span style="font-size:85%;">இப்படி எங்காவது ஒருவருக்கு உதவியாக இருந்தபோதும் இந்த இடைவேளை என்பது சினிமாவின் கதைக்குள்ளும் தலையை நுழைத்து கதாசிரியனுக்கு அடுத்த கட்ட பிரச்சினை ஒன்றையும் கொண்டு வந்து சேர்த்தது என்பதே உண்மை. சாதாரணமாகவே கதை என்றால் அதற்கு உச்சக்கட்டம் என்கிற க்ளைமாக்ஸ் மிகவும் அவசியம். கதாசிரியன் படத்தின் க்ளைமாக்ஸ் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் எப்போதுமே அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது எழுகிற அபிப்பிராயமே படத்தின் வெற்றி தோல்வி ஆகியவற்றை நேரடியாகத் தீர்மானிக்கிறது என்பதனால் இது அவசியமானதே. ஆனால் இடைவேளை?<br /></span></p><p><span style="font-size:85%;">இடைவேளை என்பது கட்டாயமாக்கப்பட்ட பிறகு அதற்கும் க்ளைமாக்ஸுக்குத் தருகிற முக்கியத்துவத்தைத் தரவேண்டிய கட்டாய நிலைக்கே கதாசிரியன் தள்ளப்பட்டான். ஏனென்றால் ஒழுங்காக உட்கார்ந்து படம் பார்த்துக்கொண்டிருபவர்களை நம்பி சற்று நேரம் வெளியே அனுப்புகிறோம். அவர்கள் அப்படியே ஓடிப்போய்விடக்கூடாதல்லவா!<br /></span></p><p><span style="font-size:85%;">இதனால்தான் பத்தாவது வரைக்கும் நல்லா படிச்சான், ப்ளஸ்டூலதான் மனசு கண்டபக்கமும் அலைஞ்சு கோட்டை விட்டுட்டான் என்று இளம்பிராயத்தினரை விமர்சிப்பதைப்போல இன்டர்வல் வரைக்கும் பிரமாதம், செகண்ட் ஹாஃப் குப்பை என்று சொல்கிற நிலைப்பாடு எழுந்திருக்கிறது. இந்த பர்ஸ்ட் ஹாஃப் செகண்ட் ஹாஃப் என்கிற சங்கதியெல்லாம் ஆங்கிலப் படங்களில் இல்லாத வகையில்தான் அவர்களின் படங்கள் ஒவ்வொரு காட்சியும் க்ளைமாக்ஸ் காட்சிக்குண்டான சிரத்தையோடு எடுக்கப்படுகின்றன.<br /></span></p><p><span style="font-size:85%;">இங்கே கதை செய்ய வேண்டுமானால் மூன்று அம்சங்களை மட்டும் பார்த்துப் பார்த்துச் செய்தால் போதும் என்கிற நிலைப்பாடே இன்று நிலவுவது. படத்தின் துவக்கம், இடைவேளை, க்ளைமாக்ஸ் ஆகியவையே அவை. இவை சிறப்பாக இருந்துவிட்டால் நடுவில் தவிட்டைக் கொட்டி நிரப்பினாலும் பார்வையாளர்கள் சப்புக்கொட்டிச் சாப்பிடுவார்கள் என்பதைப் போலவே பெரும்பாலான சினிமாக்காரர்கள் நினைக்கிறார்கள். இதனாலேயே எமது படங்கள் குப்பையாக இருக்கின்றன.<br /></span></p><p><span style="font-size:85%;">அதிலும் இன்டர்வெல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகித் தொலைத்த வகையில் ஏதாவதொரு எதிர்பார்ப்பு அல்லது திருப்பத்தை அங்கே வைக்க வேண்டிய அவலம் கதாசிரியனுக்கு இருக்கிறது. எதிர்பார்ப்பை க்ளைமாக்ஸில் வைக்க முடியாது. ஆனால் படத்தின் துவக்கத்தில் வைக்க முடியும். ஆனால் மிக முக்கியமான திருப்பமொன்றை வைக்க சரியான இடம் இடைவேளைதான் என்பதாகவே தெரிகிறது. இதைச் சாக்கிட்டே படத்தில் முக்கியமான திருப்பம் என்பதாக ஒரு அபத்தம் வேறு உற்பத்தி செய்யப்படுகிறது.<br /></span></p><p><span style="font-size:85%;">முந்தானை முடிச்சு படத்தில் குழந்தையைத் தாண்டி பொய் சத்தியம் செய்கிறாள் நாயகி. இனி என்ன நடக்கப்போகிறதோ என்கிற பதைபதைப்போடு கான்டீனில் பர்ஸ் கரைவதைக்கூட அறியாமல் அமிலம் சுரந்த வயிற்றை நிரப்பிக்கொண்டே விசனப்பட்டுக்கொண்டிருக்கிறான் தமிழன். குழந்தையைத் தாண்டிவிட்டால் என்ன ஆகும்? உம்மாச்சியா வந்து கண்ணைக் குத்திவிடும்? அதன்பிறகு அவர்கள் இருவரும் இன்னொரு குழந்தையை உற்பத்தி செய்கிற சேவையில் ஈடுபட்டார்களா இல்லையா என்பதுதானே கதையாக இருந்தது. தாண்டப்பட்ட குழந்தைக்காகவோ தாண்டிய சிறுமிக்காகவோ பதைத்த மனம் அதற்கான பதிலைப் பெற்றதா?<br /></span></p><p><span style="font-size:85%;">இதைத்தான் இடைவேளைச் சூத்திரம் என்பதாக நாம் கண்டுபிடித்திருக்கிறோம். இடைவேளை என்கிற பொழுதில் பார்வையாளன் படத்தைத் தவிர வேறு யோசனைகள் இல்லாமல் இருந்துவிட்டால் போதும். அதற்கு அவனது மூளையில் ஒரு துளையைப் போட்டுவிட்டால் போதும் அது திரும்பவும் உள்ளே வருகிறவரைக்கும் குடைந்துகொண்டேயிருக்கும். உள்ளே வந்ததும் கொஞ்சம் களிமண்ணை அதில் நிரப்பிவிட்டால் அவன் கேள்விகளையெல்லாம் விட்டுவிட்டு தன் வேலையைப் பார்த்துக்கொண்டு போயே போய்விடுவான்.<br /></span></p><p><span style="font-size:85%;">இப்போது வருகிற படங்களில் கதையே தக்னூண்டுதான் இருக்கிறது. இதில் ஃபர்ஸ்ட் ஹாஃப் வேறு செகண்ட் ஹாஃப் வேறு! அப்புறம் கதையில் எதைத்தான் செய்ய முடியும்? கதையின் போக்கைக் கதைதான் தீர்மானிக்க வேண்டுமே தவிர இடைவேளை தீர்மானிக்கக்கூடாது என்பதே எனது ஆதங்கம். கதை துவங்குகிறது, நகர்கிறது, முடிகிறது. இதுதான் சரியான செயல்பாடாக இருக்க முடியும். நடுவில் இடைவேளை எதற்கு விடப்படுகிறது? தியேட்டர் உரிமையாளன் படத்தில் சம்பாதித்தது போதாதென்று கான்டீனை ஏலம் விட்டும் சம்பாதிப்பதற்கெனப் படைப்பாளி எதற்காக மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டும்?<br /></span></p><p><span style="font-size:85%;">சினிமாவைப் பொறுத்தவரை படைப்பாளியின் தலையில் மிகப்பெரிய பாரம் ஏற்றப்படுவது இவ்விதமாகத்தான். அவன் தயாரிப்பாளரைத் திருப்திபடுத்த வேண்டும், நடிகரைத் திருப்திபடுத்த வேண்டும், ஃபைனான்சியரைத் திருப்திபடுத்த வேண்டும், டிஸ்ட்ரிபியூட்டரைத் திருப்திபடுத்தவேண்டும், இந்த தியேட்டர் உரிமையாளர்களையும் திருப்திபடுத்த வேண்டும் என்றால் பார்வையாளனை எங்கிருந்து அவனால் திருப்திபடுத்த இயலும்?<br /></span></p><p><span style="font-size:85%;">இதையும் மீறி நல்ல சினிமாக்கள் வருகின்றன என்று சொன்னால் எமது சினிமாக்காரர்கள் எத்தனை கில்லாடிகள் என்பதை நீங்களே உணர்ந்துகொள்ளுங்கள்.<br /></span></p><p><span style="font-size:85%;">சமுத்திரகனியின் நாடோடிகள் படத்தின் இன்டர்வெல் மிகவும் முக்கியமானது. அது உண்மையில் இதுவரை வந்த தமிழ்ப்படங்களின் க்ளைமாக்ஸ் காட்சிகளை மெல்லிய அங்கதத்தால் தாக்குவது. ஏனென்றால் இரண்டொரு சண்டைக் காட்சிகள், டூயட்கள், காமெடி ட்ராக் ஆகியவற்றைச் சேர்த்திருந்தால் அந்தப்படம் இன்ட்டர்வெல்லோடு முடிந்துபோய்விடும். பார்வையாளனும் வழக்கம்போல திருப்தியோடு தியேட்டரை விட்டு வெளியே வந்துவிடுவான். ஆனால் சமுத்திரகனி வழக்கமாக காதல் கல்யாணம் செய்துகொள்கிற சினிமாக்களில் கல்யாணத்தோடு கதை முடிந்துவிடுவதை நையாண்டி செய்கிறார். சரி, நண்பர்கள் எல்லாம் சேர்ந்து கல்யாணம் செய்துவைத்துவிடுகிறீர்கள், அப்புறம் அவர்கள் யோனிப்பொருத்தம், கீனிப்பொருத்தம் எல்லாம் சேர்ந்து ஒழுங்காக வாழ்ந்தார்களா? இந்தக் கேள்வியையே இரண்டாவது பாதிக்குக் கொண்டு செல்கிறார்.<br /></span></p><p><span style="font-size:85%;">இதனால் இந்தப் படத்தின் இடைவேளை பார்வையாளனுக்கு ஏற்படுத்திய எதிர்பார்ப்பு முற்றிலும் புதிதானது. இதனாலேயே இந்தப்படத்தின் இன்டர்வல் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் போலவே விறுவிறுப்பானதாக அமைந்துவிட்டது. ஏனென்றால் மற்றப் படங்கள் அதுவரைக்கும்தான் யோசிக்கின்றன என்பதனால் அதுதான் க்ளைமாக்ஸ். நாடோடிகள் படத்தின் க்ளைமாக்ஸ், இன்டர்வெல் அளவு விறுவிறுப்பானதல்ல. சமுத்திரகனி அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. இதனாலேயே அவர் ஒரு சிறந்த கலைஞராகத் தென்படுகிறார். இந்தப்படம், சுப்ரமணியபுரத்திலும் அவரது பங்களிப்பு எத்தனைதூரம் இருந்திருக்கும் என்பதையே பார்வையாளனுக்கு விளக்குகிறது.<br /></span></p><p><span style="font-size:85%;">தான் வேறொருவரைக் காதலிப்பதாகக் காதலி சொல்கிறாள், அம்மாவைக் கொன்ற வில்லனைப் பழிவாங்குவதாக ஹீரோ சபதமேற்கிறான், ஹீரோவுக்குத் தெரியாமல் அவனுக்கு எதிராக ஒரு சதி தீட்டப்படுகிறது, ஹீரோவைக் கொல்வதற்காக வில்லன் வாடகைக்கமர்த்திய கொலைகாரன் புறப்படுகிறான், ஜனசந்தடியுள்ள முக்கிய இடங்களில் பாம் வைக்கப்படுகிறது என்று இன்டர்வெல்லுக்கான ஆலோசனைகள் ஒரேவிதமாகவே நெடுங்காலம் இருந்து வருகிற சூழலில் மற்றவர்களெல்லாம் க்ளைமாக்ஸ் என்று யோசிக்கிற விஷயத்தையே இன்டர்வெல்லாக வைக்கலாம் என்று யோசித்த பெருமை சமுத்திரகனியையே சாரும் என்றாலும், இப்படி ஏதாவதொரு காரணத்துக்காக இன்டர்வெல் என்பதற்காக மெனக்கெடவேண்டிய சூழலில்தானே அவரும் ஆழ்ந்திருக்கிறார்!<br /></span></p><p><span style="font-size:85%;">பாலச்சந்தரின் ஒருவீடு இரு வாசல் படத்தில் இன்டர்வெல் வரை ஒரு கதையும் இன்டர்வெல்லுக்குப் பிறகு மற்றொரு கதையும் இருந்தன. இது தமிழுக்குப் புதிதொன்றுமல்ல. இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஃபிலிம் அல்லது புட்டேஜுக்கு ரேஷன் இருந்த வகையில் சிறிய படங்களாக பல எடுக்கப்பட்டன. ஹரிதாஸ்கூட அவ்விதமாக எடுக்கப்பட்ட படம்தான். இதனால் பல படங்கள் இவ்விதமாக இரண்டு படங்களை இணைத்துக் காட்டப்பட்ட வகையில் இன்டர்வெல் என்பதன் அவசியம் ஏற்பட்டது. ஒருவேளை இதுகூட இன்டர்வெல்லுக்கான துவக்கமாக இருந்திருக்கலாம் என்பதாகவே தோன்றுகிறது.<br /></span></p><p><span style="font-size:85%;">எல்லா விஷயங்களிலிலும் மேற்கத்தியமயம் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது சினிமா மட்டும் ஏன் இன்னும் பத்தாம்பசலியாகவே இருந்துகொண்டிருக்கிறது என்பதுதான் விளங்கவேயில்லை. சொல்ல வந்த விஷயத்தை மட்டும் கச்சிதமான திரைக்கதைகளில் இன்டர்வெல் கின்டர்வெல் எல்லாம் இல்லாமல் ஒன்றரை மணிநேரத்தில் சொல்லக்கூடிய படங்களுக்காக தமிழன் இன்னும் எத்தனை காலம்தான் காத்துக்கொண்டிருக்கப் போகிறானோ தெரியவில்லை.</span></p>சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8130572.post-20719957080921235722009-07-07T10:50:00.002+05:302009-07-07T10:54:24.703+05:30சாமான்யர்களின் சினிமாவும் சீமான்களின் சினிமாவும்<span style="font-size:85%;"></span><br /><p><span style="font-size:85%;">சாமான்யர்களின் சினிமாவும் சீமான்களின் சினிமாவும் என்கிற தலைப்பு இரண்டு மூன்று விதங்களாகப் பொருள்கொள்ளப்படலாம். சாதாரண மனிதர்கள் விரும்பும் சினிமா, சீமான்கள் விரும்பும் சினிமா; சாதாரண மனிதர்களுக்காக எடுக்கப்படும் சினிமா, சீமான்களுக்காக எடுக்கப்படும் சினிமா; சாமான்யர்கள் எடுக்கும் சினிமா, சீமான்கள் எடுக்கும் சினிமா! (நான்காவதாக இயக்குனர் தோழர் சீமான் எடுக்கும் சினிமா என்பதாக ஏதும் தப்பர்த்தம் செய்துகொள்ள வேண்டாம்!)</span></p><p><span style="font-size:85%;">இந்தத் தலைப்பில் விட்டுப்போன இன்னொரு சங்கதி உண்டு. அது அறிவுஜீவிகளின் சினிமா. தமிழகத்தில் யாருக்குமே அறிவு என்பதாக ஒன்று இல்லாத காரணத்தால் அது இங்கே ஒரு பாடுபொருளாக இல்லாமற்போவதில் வியப்பில்லை. இப்படிச் சொல்வதற்காக அறிவு ஜீவிகளின் வாயிலிருந்தும் விரல்களிலிருந்தும் மட்டுமே வசைகள் வரும் என்பதனால் தேகத்தில் கீறல் விழாமல் தப்பித்துக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையில் நான் இதை எழுதவில்லை. ஏனென்றால் அறிவு ஜீவிகள் சினிமாக்காரர்களால் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டே வருகிறார்கள். அதனால் அவர்கள் இருக்கிறார்கள் என்கிற போதமே இங்கே ஒரு பண்ணாடைக்கும் இல்லை. இந்த லக்ஷணத்தில் சினிமா எதைக் காட்டுகிறதோ அது மட்டுமே நிஜம் என்பதாகவே தமிழ் மனங்கள்வேறு நம்பித் தொலைக்கின்றன. அதனால் அவர்களை விட்டுத்தள்ளுங்கள்.<br /></span><span style="font-size:85%;"></span></p><p><span style="font-size:85%;">சாமான்யர்கள் விரும்பும் சினிமா சீமான்கள் விரும்பும் சினிமா அல்லது சாமான்யர்களுக்காக எடுக்கப்படும் சினிமா சீமான்களுக்காக எடுக்கப்படும் சினிமா ஆகியவை வேறு வேறு அல்ல என்பதே உண்மை. சாமான்யன், தன்னால் முடியாததைச் செய்கிற ஒருவனைத் தலைவனாகக் கொண்டாடுகிறான். சினிமாவில் ஒரு கதாநாயகன் அதைச் செய்யும்போது அவனை இயல்பாகவே தன் தலைவனாக ஏற்றுக்கொள்வதற்கே இது வித்திடுகிறது. இதனால் அவ்விதமான சினிமாக்களை அவன் கொண்டாடுகிறான். சீமான் என்கிற வசதி படைத்த ஒருவன் தான் நினைத்தால் செய்துவிடக்கூடிய சாகசங்கள் என்பதனாலேயே அவற்றை ரசிக்கிறான். செலவில்லாமல், உடல்வதையுமில்லாமல் பார்த்து ரசிக்க முடிகிறதே, அது நல்லதுதானே! இதனால்தான், தான் வாழும் சூழலான ஏழ்மையைப் பிழியும் சினிமாவை சாமான்யனும் விரும்புவதில்லை, தான் பார்க்க விரும்பாத பக்கங்களை சீமானும் விரும்புவதில்லை. இதனால் இவர்கள் இருவரும் விரும்பும் சினிமா ஒரே வகைப்பட்டதுதான் என்பதனால் இந்த விஷயங்களைத் தள்ளிவிடலாம்.<br /></span></p><p><span style="font-size:85%;">நான் சொல்ல வருவது, சாமான்யர்கள் எடுக்கும் சினிமா மற்றும் சீமான்கள் எடுக்கும் சினிமா என்கிற இரண்டே பதங்களைப் பற்றித்தான். இன்னும் சொல்லப்போனால் சீமான்களால் நல்ல சினிமா கொடுக்க முடிகிறதா என்கிற கேள்வியே இக்கட்டுரையைப் பிணைத்திருக்கும் சங்கிலி.<br /></span></p><p><span style="font-size:85%;">தமிழ் சினிமாவின் நெடும் வரலாற்றில் ஸ்டுடியோக்களின் கைகளில் சினிமா இருந்த காலத்தில் சீமான்களே படங்களை எடுக்கும் நிலைப்பாடு நிலவியது. அதாவது தயாரிப்பாளர் தீர்மானிக்கும் சினிமாவே எடுக்கப்படும். அவர் விரும்பும் சினிமாவை மற்ற டெக்னீஷியன்கள் எல்லோரும் முனைந்து செய்து தரவேண்டும். இதனால்கூட ஆரம்பக்காலப் படங்கள் ராஜாகாலத்துப் படங்களாக இருந்திருக்கலாம். ஏனென்றால் ஒரு சீமான் மற்றவனை மகிழ்விக்க விரும்பினால் ஆடம்பரத்தைக்கொண்டே அதைச் செய்வான். ஒரு சீமானுக்கு மற்றவனிடம் ஒரு காரியம் ஆகவேண்டுமானாலும் அவன் அதே உத்தியையே கையாள்வான். இதனாலேயே கோட்டைகள், கொத்தளங்கள், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் (எவ்வளவு அழகாகச் சொல்லிவைத்திருக்கிறார்கள் பாருங்கள், மாட மாளிகை என்று வந்தால் கூடவே ஒரு கூட கோபுரம். கூடம் என்றால் ஹால். கோபுரம் என்றால் உயரமான கட்டடம் அல்லது மேல்மாடி. எனவே முதல் தளம் அல்லது இரண்டாவது தளத்தில் உள்ள பெரிய ஹால் என்பதே கூட கோபுரம். கான்க்ரீட் இல்லாத காலத்தில் பல மாடிகளில் கட்டப்பட்டவை அரண்மனைகளல்லாமல் வேறு எவையாக இருக்கக்கூடும்?) என்று பார்வையாளனை வசப்படுத்தி அவன் கையில் அல்லது வேட்டி மடிப்பில் உள்ள காசை உருவியெடுத்துவிடுவதே ஆரம்பக்கால சினிமாகர்த்தாக்களின் சூத்திரமாக இருந்தது. (அதன் இன்றைய பரிணாமம்தான் கிராஃபிக்ஸ் முதலான பிரம்மாண்டங்கள்!)<br /></span></p><p><span style="font-size:85%;">எல்லிஸ் ஆர் டங்கன் முதலாக ஏ.பி. நாகராஜன், பீயார் பந்துலு, பீம்சிங் என்று கேயெஸ் கோபாலகிருஷ்ணன் வரைக்கும் இவ்விதமாக ஸ்டுடியோக்களுக்குக் கட்டுப்பட்டு உழைத்தவர்கள்தான். இதற்குப் பின்னால்தான் ஸ்டுடியோக்களின் கட்டுப்பாட்டிலில்லாத இயக்குனர்களின் காலம் தொடங்குகிறது.<br /></span></p><p><span style="font-size:85%;">இந்தக் காலத்தில் இயக்குனர்கள் சம்பளம் வாங்குபவர்கள் அல்ல. தயாரிப்பாளரின் வருமானத்தைத் தீர்மானிப்பவர்களாக மாறிப்போகிறார்கள். ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன் முதலானவர்களின் தோற்றம் இந்தக் காலத்தில்தான் நிகழ்கிறது. இவர்களில் ஸ்டுடியோவில் தொடங்கி வெளியே வந்தவர்கள் முதல் இருவரும். பின்னவர்கள் முற்றிலும் சுதந்திரமானவர்கள். இவர்கள் உள்ளே நுழையும்போதுதான் சாமான்யர்களின் சினிமா உருவாக்கப்படுகிறது.<br /></span></p><p><span style="font-size:85%;">பாலச்சந்தர் ஒரு நடுத்தரவர்க்கத்து அரசு அலுவலர், பாரதிராஜா ஒரு சாதாரண கிராமத்துக் குடும்பத்திலிருந்து வந்த மலேரியா இன்ஸ்பெக்டர், மகேந்திரனும் நடுத்தர வர்கத்தைச் சார்ந்தவர்தான். அவர் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். இவர்களின் வரவே நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வை சினிமாவாகப் பார்க்க நமக்கு வகை செய்கிறது. அதுவரைக்கும் எடுக்கப்பட்ட கிராமத்து சினிமாக்களைப் பார்த்தால் அந்த வித்தியாசம் நன்றாகவே உணரப்படும். வீடு என்றால் முற்றம் வைத்த தொட்டிக் கட்டு வீடு செட் போடப்பட்டிருக்கும். அதுவும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் பார்த்த காரைக்குடி வீடு அளவு இல்லாவிட்டாலும் சற்று அதிக விசாலமாகவே விரிந்திருக்கும். ஆனால் வறுமையோ மின்னிக்கொண்டிருக்கும். சிவாஜி கணேசன் மட்டும் பிராந்திய மொழியைப் பேச முயல்வார், மற்றவர்கள் எல்லாம் அவரவர் தமிழில் பிளந்துகட்டிக்கொண்டிருப்பார்கள்.<br /></span></p><p><span style="font-size:85%;">இந்த அபத்தங்களையெல்லாம் தாண்டி வரக்கூடிய சாத்தியம் பாரதிராஜா முதலானவர்களுக்கு நேர்ந்தது அவர்கள் கடந்து வந்திருந்த பின்னணியால்தான். பாரதிராஜாவின் ஆரம்பக்காலப் படங்களான 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் முதலானவை அவரது கிராமத்துப் பின்னணியிலிருந்தும் அடுத்து வந்த நிழல்கள் அவரது ஆரம்பக்கால சென்னை வாழ்க்கைச் சூழலிலிருந்தும் சிகப்பு ரோஜாக்கள் அவரது குற்றப் பின்னணியிலிருந்தும்... பாரதிராஜா மன்னிக்க! சும்மா ஒரு ப்ளோவில் வந்துவிட்டது. சிகப்பு ரோஜாக்கள் அவர் பார்த்த ஹாலிவுட் படங்களின் பாதிப்பிலிருந்தும் வெளிப்படுகின்றன.<br /></span></p><p><span style="font-size:85%;">அவரது முதல் ஐந்து படங்களில் அவர் ஒருவிதமான வெரைட்டி தர முயன்றார் என்றாலும் பிற்பாடு வெகுகாலம் அவர் அழுத்தமான கிராமிய மணம் வீசும் காதல் படங்களுக்காகவே அறியப்பட்டார். அவரது கருத்தம்மா வரைக்கும் இதன் நீட்சி தொடர்கிறது. ஆனால் இப்போது அவரால் அப்படியொரு படம் கொடுக்க முடியுமா என்று கேட்டால் இந்தக் கட்டுரைக்கான விளக்கம் தனியாக எழுதப்படவேண்டியதில்லை. சாமான்யன் என்கிற வார்த்தையை இங்கிருந்துதான் அர்த்தப்படுத்துகிறேன். தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரைக்கும் ஒரு படைப்பாளி, தான் சார்ந்துள்ள நிலையைப் பொறுத்தே தனது படைப்புகளை வெளிப்படுத்துகிறான். இது தவிர்க்க இயலாததாகவே இருக்கிறது.<br /></span></p><p><span style="font-size:85%;">இதனால்தான் மணிரத்னம் சேரியைக் காட்ட முயன்றாலும் அதில் கொஞ்சம் கற்பூர வாசனை வந்துவிடுகிறது. தமிழில் அக்னி நட்சத்திரம் படத்தில்தான் முதன்முதலில் தனிநபர் விசாரணைக் கமிஷன் என்பது அழுத்தமாக உபயோகிக்கப்பட்டது. அதற்கு முன்னால் ஆர்கே செல்வமணி முதலான இயக்குனர்கள் ஒருவேளை இதனைக் கையாண்டிருக்கலாம். எனக்கு நினைவில்லை. ஆனால் ஒரு அரிஸ்ட்ரோக்ராட் அல்லது வசதியான பீரோக்ரட் ஆகியவர்களோடு சிறுவயது முதலே பரிச்சயம் உள்ள ஒருவர்தான் அவர்களைத் தங்கள் கதாபாத்திரங்களாக அழுத்தமாகப் பதிவு செய்ய முடிகிறது. இதுவே சீமான்களின் சினிமா என்று நான் சொல்லவருவது.<br /></span></p><p><span style="font-size:85%;">ருஷ்ய இலக்கியமேதை லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் போல ஒரு இலக்கியத்தைப் படைக்க தமிழில் நாதியில்லை என்று நான் அடிக்கடி புலம்புவதுண்டு. அரசர்களின் அந்தரங்க வாழ்வும் அரசியல் வாழ்வும் குறித்த மிகத் தடிமனான புத்தகம் அது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது அழுத்தமான இலக்கியமாக ஆகவேண்டுமானால் நீங்கள் அவர்களோடு நெருங்கிப்பழகியிருக்கவேண்டும். அவர்களது வழித்தோன்றல்களோடாவது தோழமை பாராட்டியிருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது எப்படி சாத்தியமாகும்?<br /></span></p><p><span style="font-size:85%;">தமிழ்தேயத்திலோ எழுத்தாளன் ஏழை. கண்ணதாசன் விருது பெற்றுக்கொண்ட மேடையில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் குறிப்பிட்டதுபோல எழுத்தாளன் என்பவன் பிச்சைக்காரனுக்கு சற்று மேல் தளத்தில் உள்ளவன். அவன் எங்கே அரசபோகம் குறித்து எழுத?<br /></span></p><p><span style="font-size:85%;">இதே நிலைதான் இயக்குனர்கள் என்பதாக தமிழ் சினிமாவுக்குக் கிடைப்பவர்களுக்கும் உள்ளது. இதனால்தான் ஏழைகளின் அல்லது நடுத்தர வர்க்கத்தின் வாழ்வை மிகத் துல்லியமாகக் காட்ட முடிகிற அவர்களால் பணக்காரர்களின் உண்மையான வாழ்வை மிகச்சரியாகக் காட்ட முடிவதில்லை.<br /></span></p><p><span style="font-size:85%;">இதில் ஒரு கேள்வி எழலாம். ஒரு சினிமாக்காரன், சினிமாவுக்கு வரும்போது ஏழையாக இருக்கலாம், பிற்பாடு அவனே ஒரு பெரும் பணக்காரனாக சினிமாவாலேயே உருவாகும்போது அவன் பணக்காரர்களின் வாழ்வை அறிய மாட்டானா என்று! இதற்கு வாய்ப்பே இல்லை என்பதே எனது பதில். புதுப்பணக்காரனின் கண்ணோட்டத்திற்கும் பரம்பரைப் பணக்காரனின் கண்ணோட்டத்திற்கும் உள்ள வித்தியாசம் காலுக்கும் தலைக்குமானது.<br /></span></p><p><span style="font-size:85%;">நான் பேசிக்கொண்டிருப்பது வர்க்க வாதமல்ல, வர்க்க வழக்கு.<br /></span></p><p><span style="font-size:85%;">மலையாளத்தில் ஆகாச கோபுரம் என்று ஒரு படம் வெளிவந்தது. மோகன்லால் ஹீரோ. இப்சன் எழுதிய மாஸ்டர் பில்டரின் அடாப்டேஷன் என்பதாக பறைசாற்றிக்கொண்ட அந்தப் படம் மோகன்லால் கேரியரிலேயே மிக மோசமான கரும்புள்ளி. தமிழில்கூட அவ்வளவு மோசமான படமொன்று இதுவரை எடுக்கப்பட்டதில்லை. சர்ரியலிசப் படமொன்றை எடுத்துக்கொண்டிருப்பதாக இயக்குனர் நினைத்தால் மட்டும் போதாது. அது உண்மையிலேயே அப்படி இருக்க வேண்டும். மோகன்லால் இந்தமாதிரி ஒரு படத்துக்கு எப்படி கால்ஷீட் கொடுத்தார் என்று மலையாள நண்பர்களிடம் வினவியபோது உண்மை வெளியே வந்தது. படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமானவர் வெளிதேசத்தில் வாழும் மலையாளி. அவர் மோகன்லால் அதுவரை வாங்கியிராத பெருந்தொகையை முழுவதும் அட்வான்ஸாகக் கொடுத்து அவரை புக் செய்தார் என்று அவர்கள் தெரிவித்தார்கள்.<br /></span></p><p><span style="font-size:85%;">பணக்காரர்கள் நினைத்தால் இந்தமாதிரிதான் கலை சேவை செய்ய முடியும். இருந்தாலும் சீமான்களின் சினிமா இந்த லக்ஷணத்தில்தான் இருக்கும் என்று நான் பொத்தாம்பொதுவாகச் சொல்ல வரவில்லை. ஒருவன் சீமானாக இருந்தாலும் அவனுக்குள் கலையார்வமும் திறமையும் இருந்தால் மட்டுமே அவனால் தமிழ் இதுவரை பார்த்திராத புதிய தளங்களில் சினிமாக்களை உருவாக்கித் தர முடியும் என்றே நான் சொல்கிறேன்.<br /></span></p><p><span style="font-size:85%;">கேயெஸ் ரவிக்குமார் வசதியான வீட்டிலிருந்து வந்தவர் என்பதாகச் சொல்வார்கள். ஆனால் அவர் செய்வதெல்லாம் வெறும் ரகளைகள்தான். சுப்ரமணியபுரம் சசிகுமாரை வேண்டுமானால் சொல்லலாம், மதுரையைச் சார்ந்த வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர் இவர். இருந்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் சென்னையைத் தவிர வேறு முக்கிய நகரங்கள் எல்லாம் கிராமங்களின் மீது போர்த்தப்பட்ட மஸ்லின் துணியைப் போலவே காண்பதால் இவரும் தான் சார்ந்த உலகத்தை மட்டுமே நமக்குக் கொடுக்க இயலக்கூடும்.<br /></span></p><p><span style="font-size:85%;">தமிழைப் பொறுத்தவரைக்கும் சீமான்களின் சினிமாவான அப்பர் கிளாஸ் சினிமாவைக் கொடுப்பதற்கு திரும்பவும் மணிரத்னம் முன்னால்தான் மண்டியிட வேண்டியதிருக்கிறது. அடுத்த தளத்தில் ராஜீவ்மேனனோ கௌதம் மேனனோ விஷ்ணுவர்தனோ வரக்கூடும். அவர்கள் செய்தால்தான் உண்டு. ஆனால் பிரதாப் போத்தன் நினைத்திருந்தால் செய்திருக்கலாம். அவரும் செய்யவில்லை. அது தமிழின் தலையெழுத்தே தவிர வேறில்லை.<br /></span></p><p><span style="font-size:85%;">பொதுவாகவே பணக்காரர்களுக்குக் கலைத்திறன் குறைவு என்பதையே இது காட்டுகிறது.<br />அவர்கள் தங்கள் பெண்களுக்கு பரதநாட்டியம் பயிற்றுவிப்பதோடு தங்கள் கலையார்வத்தைத் தணித்துக்கொள்கிறார்கள் போலும்.<br /></span></p><p><span style="font-size:85%;">இப்போது சினிமாக்காரர்களின் அடுத்த தலைமுறைகள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். மேல்தட்டு நுணுக்கங்களை நுகர்ந்துபார்க்கக்கூட அவர்களின் ஒருதலைமுறை டாம்பீகம் போதாது என்றபோதும், அவர்கள் தாங்கள் சார்ந்த சமூகத்தை நம் கண்முன் கொடுக்க வல்லவர்களாக இருந்தால் ஒருசில படங்கள் கிடைக்கலாம்.<br /></span></p><p><span style="font-size:85%;">மற்றபடி தமிழில் வெளிவரும் சினிமாக்கள் எல்லாமே சாமான்யர்களின் சினிமாக்களாகவே இருப்பதை வியப்பதற்கு என்ன இருக்கிறது!</span></p>சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8130572.post-46412404150638498902009-06-27T21:37:00.002+05:302009-06-27T21:41:30.371+05:30கதை கேளு! திரைக் கதை கேளு!!<span style="font-size:85%;">எமது சினிமாவில் சாதாரணமாகவே இந்தக் கதை கேட்டல் வைபவம் என்பது, அதன் அந்தராத்மாவை ரம்பம் கொண்டு அறுக்கிற வேலையாகவே பன்னெடுங்காலமாக நிகழ்ந்து வருகிறது.</span><br /><span style="font-size:85%;"><br />அதாகப்பட்டது, ஒரு சினிமா, ஷூட்டிங் வரைக்கும் வந்துவிட்டதென்றால் (அது ரிலீஸ் ஆகவேண்டும் என்பதாக எவ்விதமான உத்திரவாதமும் தேவையில்லை) அதற்கு முன்பாகக் கதை கேட்டல் என்கிற நிலைப்பாடு ஒன்று நிகழ்ந்தேயிருக்க வேண்டும். படத்துக்கு முதல் போடுகிறவரோ, நடிப்பவரோ, தயாரிப்பவரோ என யார் யாரோ கதையைக் கேட்கிறார்கள். நியாயப்படி தனக்கு எவ்விதமான கொள்வினையும் இல்லாத ஏரியாவாகிய கதை உருவாக்கத்தை மிகக் கஷ்டப்பட்டு அல்லது களவாடி இயக்குனர் அல்லது இயக்குனராக விரும்புபவர் செய்து வைத்திருக்கிறார். அது ஒரு ஹீரோவுக்குப் பிடித்தால் அவருக்கு தயாரிப்பாளர் கிடைத்துவிடுவார். தயாரிப்பாளருக்குப் பிடித்தால் ஹீரோகூட முக்கியமில்லை. படம் வெளிவந்துவிடும். இதனால் கதையைச் சுமப்பதும் அதை சரியானவர்களிடம் கொண்டு சேர்ப்பதும் ஒரு தேர்ந்த கலையைப் போல பயில வேண்டிய ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் இந்தக் கலையை திரைப்படக் கல்லூரி சொல்லித் தருவதில்லை.<br /><br />இது ஒருபுறம் இருக்க, நமது ஹீரோக்கள் எந்த அடிப்படையில் கதை கேட்கிறார்கள் என்கிற வாதத்துக்குள் நுழையலாம். ஏனெனில் அதுவே இதன் ஆதாரக் காரணமாக இருக்க முடியும். ஏனென்றால் எமது ஹீரோக்கள் கேட்பது கதையை அல்ல. தங்களின் பாத்திரம் என்ன என்பதையே அவர்கள் கேட்கிறார்கள். ஹீரோவின் பாத்திரம் மையமானது அதைச் சுற்றி நிகழ்வதுவே கதை என்பதைப்போன்ற மாயத் தோற்றமே அவர்களின் மனத்தில் காண்கிறது.<br /><br />இதனாலேயே சினிமாவுக்கான கதை என்பது ஹீரோவை மையப்படுத்தியே எழுதப்படுவதாக ஆகிவிடுகிறது. தமிழ் சினிமாவைப் பொருத்தவரைக்கும் அதுவும்கூட இரண்டே இரண்டு வகையில் அடங்கிவிடுகிறது என்பதாகவே தோன்றுகிறது. ஒன்று ரஜினிகாந்த்துக்குப் பொருந்தும் கதை, மற்றது கமலஹாசனுக்குப் பொருந்தும் கதை!<br /><br />ரஜினிகாந்த்துக்கு கதை சொல்வதற்கும் கமலஹாசனுக்குக் கதை சொல்வதற்கும் நேரெதிரான வித்தியாசங்கள் உண்டு என்பதை நாம் அனைவருமே அறிவோம். முன்பொரு காலத்தில் இருவரும் ஒரேவிதமான படங்களிலேயே நடித்துக்கொண்டிருந்தார்கள் என்பது வேறு விஷயம். அவர்கள் தங்கள் பாதைகளைத் தீர்மானிக்கும் வரைக்கும் நிகழ்ந்து வந்த விபத்துக்களே அவை! இப்போது அப்படியா?<br /><br />இதனால்தான் இன்றைக்கும் இவர்கள் இருவரில் ஒருவர் நடிக்கக்கூடிய கதை என்பதான இரண்டே வகைப்பட்ட கதைகளில் ஒன்றையே ஒவ்வொருவரும் உருவாக்குகிற நிலைமையே காண்கிறது. அதாவது, நல்ல நடிப்புத் திறமை உள்ள நடிகர் என்பதாகப்பெயர் வாங்கும் ஒருவருக்கு கமலஹாசனுக்குப் பொருந்தும் கதைகளையும், பெரியமாஸ் ஹீரோ அல்லது மாஸ் ஹீரோவாக ஆகக்கூடியவர் என்கிற நிலைப்பாட்டில்காணும் ஒருவருக்கு ரஜினிகாந்த்துக்குப் பொருந்தும் கதைகளையும் கதாசிரியர்கள் என்கிற இயக்குனர்கள் உருவாக்க வேண்டியிருக்கிறது. இந்த உண்மை தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் இதையே செய்து வருகிறார்கள்.<br /><br />இதில் கமலஹாசன் பட்டியலில் சிக்கிக்கொண்டிருப்பவர்கள் விக்ரம், சூர்யா, தனுஷ் மற்றும் ஜீவா! சிக்கிக்கொண்டிருப்பவர்கள் என்று ஏன் சொல்கிறேன் என்றால் அது வெற்றிக்கான உத்திரவாதமில்லாத பாதை என்பதனால்தான். சமீபத்தில் நடிகர் ஜீவாகூட ஒரு பேட்டியில் இதையேதான் சொல்லியிருக்கிறார். நாலு படங்களுக்கு ஒரு படம் பரீட்சார்த்தமாக முயல்வதாக இருக்கிறேன் என்று. கொஞ்சம் நல்ல மெமரி உள்ளவர்கள் இதையேதான் பன்னெடுங்காலமாக கமலஹாசன் செய்துவருகிறார் என்பதை நினைவுகூர்வார்கள். வெற்றிக்கு உத்திரவாதமாக கமலஹாசன் கைக்கொள்வது காமெடியை. மற்றவர்கள் அதோடு ஆக்ஷனையும் சேர்த்துக்கொள்ளும்போது அது கமலஹாசனையும்கூட பாதித்துவிடுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.<br /><br />சரி, வித்தியாசமான முயற்சிகளை விடுவோம். உத்திரவாதமாக ஜெயிக்கும் என்று மாஸ் ஹீரோக்கள் நம்புகிற கதைகள் உண்மையில் எவ்விதமாக இருக்கின்றன? அதாவது ரஜினி டைப் கதைகள் எவ்விதமாக உருவாகின்றன, அவற்றில் எந்ததெந்த அம்சங்கள் ஹீரோக்களைக் கவர்கின்றன என்கிற கேள்விக்கு பதில் சொல்வது அத்தனை கஷ்டமானதல்ல.<br /><br />எடுத்த எடுப்பிலேயே ஏதாவதொரு அநியாயம் நிகழ வேண்டும். அப்போது ஹீரோ பாய்ந்து வந்து பாகம் பாகமாகக் காட்டப்பட்டு ஒரு கணத்தில் முகம் ஃப்ரீஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் ஏகோபித்த விசில்களுக்கு இடம்விட்டு பிறகு பிழையாளர்களைப் பின்னியெடுக்க வேண்டும். அல்லது மிகப்பெரிய சாதனையாளனாக அவன் முன்வைக்கப்பட, அவனோ தன்னடக்கத்தோடு காட்சியளிக்க வேண்டும். இல்லையா, நூறுபேர் சூழ நடுத்தெருவில் ஒரு ஃபாஸ்ட் பீட்டுக்கு நடனமாட வேண்டும். இவற்றின் வாயிலாக தலைவன் வந்துவிட்டான் என்கிற நம்பிக்கையைப் பார்வையாளனுக்கு ஊட்டவேண்டும். அந்த ஊட்டமே படத்தின் வெற்றிக்கான அஸ்திவாரமாக அமைய முடியும் என்பதே தொன்றுதொட்ட நம்பிக்கை. இதனால்தான் கதை கேட்கப்படும்போது ஹீரோ இன்ட்ரொடக்ஷன் என்பது முக்கியமான அம்சமாகக் கோரப்பட்டு வருகிறது.<br /><br />வித்தியாசமாக ஹீரோவை எப்படி இன்ட்ரொட்யூஸ் செய்வது என்கிற போதமே பிற்பாடு உள்ள கதை என்கிற அம்சத்தைக் குலைக்கும் ஆதாரமாகிறது என்பதை நான் ஏற்கனவே எழுதிய ஞாபகம் இருக்கிறது. வில்லு படத்தில் ஹீரோ இன்ட்ரொடக்ஷன்<br />மேற்சொன்னவற்றில் முதல் விதமாக நிகழ்கிறது. எனக்கு எம்ஜியாரைத்தான் பிடிக்கும் என்று சொல்கிற ஒரு பூக்காரக் கிழவி இன்னொருத்தனையும் பிடிக்கும் என்று ஹீரோவின் சாதனையொன்றை விவரிக்கும் விதமாக (பெரிய விக்ரமாதித்யன் கதை பாருங்கள்) சொல்கிறார். பாட்டியின் பேத்தியை கயவர்கள் கற்பழிக்க விரும்பி கடத்த முயல்கிறார்கள். அந்தப் பிரதேசத்தில் நிறைய வண்ண வண்ணப் புடவைகள் கொடிகளில் காய்கின்றன. ஹீரோ சூப்பர்மேன் போல புடவைகளினூடாகப் பறந்து வருகிறார். ஓடுகிற ரயிலின் மீது பேலன்ஸ் செய்து நிற்பதுபோல ஜம்மென்று நிற்கிறார். ஆடி மாசம் போலிருக்கிறது. செம காத்து அடிக்கிறது. புடவைகள் பதாகைகள் போலப் பறக்கின்றன. உடல் முழுக்க வண்ணப் புடவைகள் சுற்றிய கோலத்தில் அவரது முகம்கூட நமக்குத் தெரியவில்லை. அடியாள் ஒருவன் அவரை சீண்ட, ஆகாயத்தில் தட்டாமாலை சுற்றி புடவை அவிழ்ந்து பூமியில் வந்து நிற்கிறார். அப்போது அடியாள் ஒருவன் கேட்கிறான், யார்ரா இவன், புரூஸ்லியா, ஜெட்லியா என்று, ஹீரோவான விஜய் சொல்கிறார், "கில்லிடா!"<br /><br />எப்படி?<br /><br />அதாவது இப்படி ஒரு இன்ட்ரொடக்ஷன் சொன்னால் விஜய் கால்ஷீட் கிடைத்துவிடும் போலிருக்கிறது. அடுத்த தலைமுறையின் முன்னோடியாக இவர்தான் அறியப்படுகிறார் என்பதனால் பின்னால் வருகிற அத்தனை நடிகர்களும் இதே பாணியையே பின்பற்றுவதும் தவிர்க்க இயலாததாகிறது.<br /><br />ஏனென்றால் வில்லு என்கிற இந்தப் படத்தில் கதை என்பதாக ஒரு சுக்கும் கிடையாது. பிரபுதேவா இயக்குனர் என்பதனால் ரீலுக்கு ரீல் பாட்டு. நயன்தாராவை ஜாடியில் போட்டு குலுக்காத குலுக்காக நடனங்கள், ஓட்டங்கள். பனிமலைகள், ஹெலிகாப்டர்கள் லாஞ்ச்சுகள் என்று பிரம்மாண்டச் சூழல்கள். சரி கதை? கதை என்பதாக எதுவும் இல்லை. ஆனால் தேசபக்தி என்பதாக ஒரு ஆதாரம் கதைக்குள் இருக்கிறது. அது போதாதா?<br /><br />கொலையுண்ட நிரபராதியின் மனைவியின் நெத்தியில் தேசத்துரோகியின் மனைவி என்று பச்சை குத்துகிறார்கள், மணல் புயல் வீசி புதைகிறது சடலம். அதைக் கண்டுபிடிக்கவேறு முடியவில்லை, சர்வ தேசக் குற்றவாளிகளை தான் போய் பிடிக்காமல் ஒரு சாதாரண இளைஞனின் பகை தீர்க்க உதவுகிறார் ஒரு போலீஸ் அதிகாரி என்று இத்தனை இத்தனை அபத்தங்களை ஒன்று சேர்த்து ஒரு கதை பண்ண முடியுமா என்று உண்மையிலேயே எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இது ஒரு ஹீரோவுக்கு பிடிக்கிறது என்று சொன்னால் தமிழ் சினிமாவின் விதியை எங்கே போய் நொந்துகொள்வது?<br /><br />பிரபுதேவா நல்ல நாட்டியக்காரர். நல்ல நாட்டிய ஆசானும்கூட. அவருக்கு எதற்கு இந்த வீண் பழி என்றே தோன்றுகிறது. சரி, கதையை அவர் செய்யவில்லை, தெலுங்கிலிருந்து கொண்டு வந்தார் என்று சொல்கிறீர்களா? உங்கள் வாக்கிலேயே அதற்கான விடையும் இருக்கிறது. மேற்சொன்ன விஷயங்கள் எல்லாம் தெலுங்குக்கு ஒருவேளை இப்போதும் சரிப்பட்டு வரலாம், அதைத் தமிழ் நாட்டுக்குப் பொருத்தமாக மாற்ற ஒரு கதையறிவு உள்ள மனிதன் வேண்டாமா? அப்படியே காப்பியடித்தால் அப்புறம் இப்படித்தானே இருக்கும்!<br /><br />விஜய்யின் கில்லியும் இவ்விதமாக தெலுங்கிலிருந்தே தமிழுக்கு வந்தது. ஆனால் அந்தக் கதையில் ஒரு உயிர் இருந்தது. ஒரு கமர்ஷியல் படத்தைப்போய் உயிர் கியிர் என்று சொல்லலாமா என்று கேட்கிற அளவுக்கு நீங்கள் ஆர்த்தடாக்ஸ் அல்ல என்று நம்புகிறேன். கொடூரமான ஒரு கிராமத்து பணக்காரன், தன் முறைப்பெண்ணின் மீது உயிரையே வைத்திருக்கிறான். அவளைக் கதாநாயகன் அவனிடமிருந்து காப்பாற்றுகிறான். இது கதை. ஆனால் இந்தக் கதை மட்டும் போதுமா? அருமையான ஒரு திரைக்கதையும் இருந்தால்தானே கதை சினிமாவாக மாறும்! அந்த வித்தை அந்தப் படத்தில் மிக அருமையாக செய்யப்பட்டிருந்தது என்பதை பார்த்தவர்கள் அறிவீர்கள்.<br /><br />கதை என்பது வில்லு படத்தில் போல இல்லாமல் அடிப்படை லாஜிக் உள்ளதாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அதைவிடவும் முக்கியமானது திரைக்கதைதான். ஏனென்றால் திரைக்கதை என்பது லாஜிக் இல்லாத கதையைக்கூட ஓடவைக்கக்கூடிய வல்லமை உடையது. இரண்டு விஷயங்களிலும் ஜெயித்தது கில்லி. அப்படியொரு படத்தில் நடித்துவிட்டு வில்லு மாதிரி ஒரு படத்தின் கதையை எப்படி விஜய் தேர்ந்தெடுக்கிறார் என்பதைத்தான் விளங்கிக்கொள்ளவே முடியவில்லை என்பதாகச் சொல்கிறேன்.<br /><br />இதேபோலத்தான் தமிழில் ஹரி இயக்கிய ஐயா என்கிற திரைப்படமும்! அருமையான கதை, அற்புதமான திரைக்கதை. இந்த இரண்டுமே அந்தப் படத்தின் வெற்றிக்கும் வசூலுக்கும் ஆதாரமாக அமைந்தன. இந்த இடத்தில் ஒரு விஷயத்தை யோசிக்க வேண்டியிருக்கிறது. ஐயா ரஜினிக்காக உருவாக்கப்பட்டு சொல்லப்பட்ட கதை என்பதாக இன்டஸ்டரியில் ஒரு பேச்சு உண்டு. அது உண்மை என்று பார்த்தால் ஒரு நல்ல படத்தை இழந்த வகையில் ரஜினி செய்த தவறு என்ன? அவருக்கு கதை பிடிக்கவில்லையா, திரைக்கதை பிடிக்கவில்லையா? அவை சிறப்பாக இருப்பதை அவர் கவனிக்காமல் போனதற்கான ஆதாரமான காரணம் என்ன? தமிழகத்தின் முதல்வராக வருவார் என எதிர்பாக்கப்படுகிற ஒருவர் வெறும் எம்மெல்லே பாத்திரத்தில் நடிப்பதா என்பதாக அவர் நினைத்தாரா? இதை ஹரிதான் சொல்ல வேண்டும்.<br /><br />இதே ரஜினிகாந்த்துக்காக பாரதிராஜா ஒரு கதையை உருவாக்கினார். அது கடலோரக் கவிதை. ரஜினி மறுத்த வகையில்தான் சத்தியராஜ் உள்ளே நுழைகிறார். அவரை ஒரு ஸ்டாராக அந்தப் படமே உருவாக்குகிறது. முட்டம் சின்னப்பதாஸாக ரஜினி வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஒருவேளை அவரது கேரியரில் குறிப்பிடத்தக்க மாற்றமொன்று நிகழ்ந்திருக்கும். ஆனால் அவரோ அதே பாரதிராஜாவின் கொடி பறக்குது என்று லாஜிக் பறக்கிற கதையொன்றில் நடித்து தன் பட்டியலில் இன்னொரு தோல்விப்படத்தைத் தாங்குகிறார். இந்த அபத்தம் எதனால் நடிகர்களுக்கு நிகழ்கிறது என்பதைத்தான் அவர்கள் ஆராயவேண்டும் என்று சொல்கிறேன்.<br /><br />அதற்கு அவர்கள் செய்ய வேண்டியது மிகவும் சுலபமான காரியம்தான். தாங்கள் இப்போது எந்த அடிப்படையில் கதை கேட்கிற வைபவத்தை எதிர்கொள்கிறார்களோ, அதற்கு நேரெதிரான நிலைப்பாட்டை அவர்கள் எட்ட வேண்டும். இது உண்மையிலேயே சுலபமானதுதானா என்று கேட்கிறீர்களா?<br /><br />வெற்றி உத்திரவாதமென்கிற போதமிருந்தால் ஏன் இது சுலப சாத்தியமாகாது? அவர்கள் யோசிக்க வேண்டியது இதைத்தான், படத்தில் அவர்கள் எவ்விதமாக இன்ட்ரொடியூஸ் செய்யப்பட்டாலும் சரி, எத்தனை சண்டைக்காட்சிகளில் நடித்தாலும் சரி, எத்தனை கதாநாயகியை அல்லது சென்ட்டிமென்ட்டைப் பிழிந்தாலும் சரி, அவை அந்தப் படத்தின் வெற்றிக்கு எந்த உதவியும் செய்யப்போவதில்லை. படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பவை முதலில் திரைக்கதை, அடுத்தது கதை, மூன்றாவதாக மேக்கிங். இந்த மூன்று விஷயங்களில் அக்கறை செலுத்திய படங்கள் தோல்வியைத் தழுவுவது கடின சாத்தியமே!<br /><br />இதனால்தான் சொல்கிறேன், நடிகர்கள் தங்கள் பாத்திரத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அவர்களுக்கு பணத்தையும் புகழையும் வாரிவாரிக் கொடுக்கலாம், ஆனால் தொடர்ந்து நான்கு படங்கள் ஊற்றிக்கொண்டால் அவர்கள் பெற்ற அனைத்தும் வந்த வழி தெரியாமலே ஒழுகியோடிவிடவும் செய்யும். இதை நடிகர்கள் உணர்ந்துகொண்டால், வெற்றி என்பதன் அவசியம் உணர்ந்து, ஹீரோயிசம் என்கிற அடைப்புக்குள்ளிருந்து அவர்கள் வெளிவந்துவிட வாய்ப்பாக அமையாதா?<br /><br />இதை மனதில் நிறுத்தி இனிமேலாவது தன் பாத்திரம் என்ன என்று பார்ப்பதை நிறுத்தி, கதையையும் திரைக்கதையையும் அளந்துபார்க்கும் மனநிலையை எட்டுங்கள் நண்பர்களே என்று நான் சொல்லலாம், அவர்கள் கேட்க வேண்டுமே!</span><br /></span>சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8130572.post-72503963261198648192009-06-23T19:01:00.001+05:302009-06-23T19:03:44.113+05:30சினிமா செய்திகள்<span style="font-size:85%;">பிரபாகரன் சடலம் கண்டெடுப்பு, ராஜபக்பச சடலம் சல்லடையாகத் துளைப்பு! என்பதாக ஏதேனும் அதிரடி செய்திகள் வந்தாலே தவிர, நாமெல்லாம் விரும்பிப் படிப்பவை சினிமா செய்திகளை மட்டுந்தான். இதனால்தான் செய்தித்தாள்கள்கூட சினிமாவுக்கெனப் பக்கங்கள் ஒதுக்குவதும் தவிர்க்க இயலாததாகிப் போய்விட்டது.</span><br /><span style="font-size:85%;"><br />சலூன்களிலாகட்டும், டீக்கடைகளிலாகட்டும், பெட்டிக்கடை பெஞ்சுகளிலாகட்டும், எமது தமிழ் மறவர்கள் இனிதே கூடி விவாதிப்பது நமீதாவின் நடையழகும் நயன்தாராவின் இடையழகும் குறித்துதான் என்று நான் குற்றஞ்சாட்டினால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? இது காலத்தின் கட்டாயம். இவர்கள் இடத்தில் வேறு சிலர் முன்பு இருந்தார்கள். வேறுசிலர் பின்பு வருவார்கள். எவ்வளவு தத்துவார்த்தமான பதில்! பகவத்கீதையை சுருக்கவுருவில் கேட்டது போல இல்லை? ஆனால் இந்தத் தத்துவ போதமெல்லாம் எமக்குக் கிடைத்தது எதனால்? சினிமாவால்! பின்னே ஆளுக்காள் குருக்ஷேத்ரத்திற்குப் போய் நின்றால் பார்த்தசாரதிதான் கடுப்பாகிவிட மாட்டானா! இப்படி சினிமா செய்திகளைப் போட்டு அலசுகிறீர்களே அவற்றை உங்களுக்கு யார் சொன்னார்கள்? அல்லது நீங்களே நேரில் போய் நடிக நடிகையரின் வீட்டுக்குள் நுழைந்து சேகரித்தவையா இவை?<br /><br />ஆக, சினிமா செய்திகளை உங்கள் பின்மண்டை வரைக்கும் கொண்டு வந்து தருகிற சேவை என்பதாக ஒன்று அவசியப்படுகிறதா இல்லையா? அதற்கென ஊடகங்களின் தேவையும் உள்ளது என்பதை நீங்கள் மறுக்க முடியுமா?<br /><br />இதில் பொதுவாக சினிமா செய்திகளை வெளியிடுவதற்கும் அரசியல் செய்திகளை வெளியிடுவதற்கும் என்ன வித்தியாசம் என்று பார்த்தால், அரசியல் செய்தியில் ஓர் அரசியல்வாதியின் (அவர் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கட்டும்) அழகிய முகத்தைத் தவிர வேறொன்றையும் மிகைப்படுத்திக் காட்ட முடியாது என்பதனால் வேறு வழியில்லாமல் செய்தியைப் பெரியதாகவும் படத்தைச் சிறியதாகவும் போட்டுத் தொலைய வேண்டிய கட்டாயம் காண்கிறது. ஆனால் சினிமா செய்தி என்றால் அப்படியா? வளைவுகள், நெளிவுகள், பள்ளங்கள், மேடுகள், வசீகரமான புன்னகைகள், காமத்தைப் பிழியும் கரங்கள் என்று பார்ப்பவர் அல்லது படிப்பவரின் உள்ளத்தில் ஆசைத்தேனைக் குடம் குடமாக ஊற்றுவதற்குத்தான் எத்தனை வசதிகள் காண்கின்றன!<br /><br />இந்த நிலைப்பாட்டை முதன் முதலில் எட்டியது தினத்தந்தி என்பதாகக் கொள்ளலாம். முதல் பக்கத்தில் தலைப்புச் செய்திக்குப் பக்கத்திலேயே கவர்ச்சிப்படம் என்று டைட்டில் போட்டு நடிகைகளின் படங்களை வெளியிட்ட சாதனை தந்தியையே சாரும். ஆனால் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அந்த இடத்தில் வெளிவந்த எந்த நடிகையின் படமும் கொஞ்சமும் கவர்ச்சியே இல்லாமல் இடம்பெற்றது என்பதே அவர்களின் தந்திரமும்!<br /><br />சினிமா என்றால் பெண்ணுடல் மட்டும்தானா? ஆணுடலும்தான்! சினிமாவில் இருக்கும் ஆண்களும் பெண்களும் எப்போது எங்கே சவரம் செய்துகொள்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் தனிப்பட்ட தொடர்புகள் எத்தனை ஆழமானவை என்கிறவரைக்கும் நமக்குத் தெரிந்துகொள்ள எத்தனை எத்தனை விஷயங்கள் இருக்கின்றன என்பதை நாமேகூட பூரணமாக அறிய மாட்டோம். ஏனென்றால் சினிமாவைப் பொறுத்தவரை எல்லாமே செய்திதான்!<br />ரஜினிகாந்த் இனிமேல் பஞ்ச் வசனம் பேசக்கூடாது! இயக்குனர் அமீர் கருத்து!<br /><br />இது ஒரு செய்தி! எவ்வளவு வசீகரமான கருத்து பாருங்கள். உடனே அமீரிடம் ஒரு பத்திரிகை பேட்டி எடுக்கிறது. ரஜினிகாந்திடம் இனிமேல் பஞ்ச் வசனம் பேசக்கூடாது என்று சொன்னீர்களாமே! அது உண்மையா வதந்தியா? அதற்கு அமீர் பதில்: நீங்கள் விசாரிப்பது உண்மைதான்! அவரைப் பார்த்து இப்போது போகிறவர் வருகிறவர் எல்லாம் பஞ்ச் வசனம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் பஞ்ச் வசனத்துக்கு ஒரு மரியாதையே இல்லாமல் போய்விட்டது. அதனால்தான் அவர் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று சொன்னேன்.<br />இப்போது நீங்கள் ஒரு சினிமா செய்தியைப் படித்துவிட்டீர்கள். இதை ஏற்கனவே ஊடகங்களில் நீங்கள் படித்திருக்கவில்லையானால் இப்போது ஒரு சினிமா செய்தியை எழுதியவனாக என்னையும் ஆக்கிவிட்டீர்கள். அட அமீர் அப்படியா சொன்னார்? என்று உங்களுக்குள் ஒரு வியப்பு மேலிட்டிருக்கும். அதைத் தொடர்ந்து கொஞ்சநேரம் ஓடுகிற சிந்தனைகள் உங்களின் சொந்தப் பிரச்சினைகளிலிருந்து உங்களைச் சற்றுநேரம் சாந்தப்படுத்தியிருக்கும்.<br />இதேபோல்தான் நானும் இந்த செய்தியைப் படிக்கிறேன். என் புத்தி தெரிந்ததுதானே! அது வழக்கம்போல குறுக்கே ஓடுகிறது. அமீர் உண்மையில் என்னதான் சொல்கிறார்? இது கரிசனையோடு சொல்லப்படுவதுபோலத் தெரிந்தாலும் இதில் கள்ளத்தனமான எண்ணம் ஏதோ இருக்கிறது போலிருக்கிறதே! இவர் சொல்வதைக் கேட்டு ரஜினிகாந்த் பஞ்ச் வசனம் பேசமாட்டேன் என்று சொன்னால் அப்புறம் அவர், பேச்சுத்திறன் இல்லாதவராக அல்லவா நடிக்க வேண்டிவரும்! ஏனென்றால் பஞ்ச் வசனம் பேசக்கூடாதென்றால் அப்புறம் ரஜினிகாந்த் வேறென்ன வசனம்தான் பேசமுடியும்?<br /><br />இது ஏதோ நக்கல்மாதிரி உங்களுக்குத் தெரிகிறதா? அதெல்லாம் ஒரு கிக்கலும் இல்லை. ரஜினிகாந்த்துக்கு சில பல வருடங்களாகவே எவ்விதமான வேடங்கள் கிடைக்கின்றன என்று பாருங்கள்! சவால் விடுவது, சவால் விடப்படுவது, தூண்டப்படுவது, கொதித்தெழுவது என்று பேகிரவுண்ட் ஸ்கோருக்கும், பஞ்ச் வசனத்துக்கும் மட்டுமே வாய்ப்பளிக்கிற வேடங்களையே அவர் தொடர்ந்து தாங்கிவருகிறார். இடையீடாக ஓரிரு காமெடிச் செருகல்களும் தவிர்க்க இயலாதவையே! இப்படியொரு பாத்திரத்தில் நடிக்கிற நடிகர் குழலினிது யாழினிது என்று தொடங்கி ஐந்தரைப்பக்கக் காதல் வசனத்தையா உருப்போட்டுப் பேச முடியும்? நா ஒருதடவ சொன்னா, கொசுதா(ன்) படையா வரும்! பல்லி தனியாதா வரும்! இந்தமாதிரி ஏதாவது சொன்னால்தானே குழந்தைகள் முதல் குதூகலிக்க வாய்ப்பாக இருக்கிறது!<br /><br />ரஜினிகாந்த்தும் பஞ்ச் வசனமும் இணைந்தது உண்மையில் ஒரு விபத்து என்பதாகவே தோன்றுகிறது. அவருக்கான முதல் பஞ்ச் வசனம், அதுவொரு பஞ்ச் வசனம் என்பதாக அறியப்படாமலே எழுதப்பட்டது. அது, 16 வயதினிலே படத்தில் உச்சரிக்கப்பட்ட, ''இது எப்டி இருக்கு?'' -இதன் இமாலய வெற்றிதான் இன்றைக்கு இயக்குனர் ஷங்கர் படம் பூரா பஞ்ச் வசனம்தான் என்று சொல்கிற அளவுக்குக் கொண்டுபோயிருக்கிறது. இடையில் ஒரு நிலைப்பாடு இருந்தது. அப்போது ரஜினிகாந்த் எதைச் சொன்னாலும் அது பஞ்ச் வசனம் என்பதைப் போன்ற தோற்றம் காணப்பட்டது. விடுதலை படத்தில் ஜூஜூபி என்று அர்த்தமேயில்லாமல் அவர் உச்சரித்த சொல் பஞ்ச் வசனமாகி வெகுபிரபல்யமடைந்தது. இப்போதும்கூட மாறும் சந்ததியின் மொழியைத் திருடி சிவாஜியில் கூல் என்கிறார் ரஜினி! நன்றாகத்தானே இருக்கிறது.<br /><br />இதனால் நான் அமீருக்கு சொல்வது இதுதான், ''இதெல்லாம் ஜூஜூபி மேட்டர்.<br />கூல் பேபி, கூல்!''<br /><br />பாருங்கள், ஒரு பத்திரிகையில் வெளிவந்த எட்டு வார்த்தைச் செய்தி எத்தனை எண்ணக் கதவுகளைத் திறந்து விடுகிறது! நான் முன்பே சொன்னமாதிரி, மூலபவுத்திரமோ, பன்றிக் காய்ச்சலோ எனக்கு இருக்குமானால் அதன் உபாதையைக் கொஞ்சநேரம் உணராமல் போகிற அளவுக்கு ஒரு செய்தி எனக்கு ஆறுதல் வழங்கியிருக்கிறது என்பதுதானே உண்மை! இந்தச் செய்திகளால்தான் எத்தனை நன்மை!<br /><br />திடீரென்று இந்த வாரம் நானோ நீங்களோ லண்டனுக்கோ, பாரீசுக்கோ போய் நிற்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கேயுள்ளவர்கள் கேட்கிறார்கள். சமீபத்தில் உங்கள் நாட்டில் என்ன விசேஷம்? இதற்கு பதில் உங்களாலோ என்னாலோ சொல்லப்படுகிறது, சமீபத்தில் தமிழ்நாட்டில் இரண்டு பெரிய விஷயங்கள் நிகழ்ந்தன. அவற்றில் முதலாவது, ரஜினிகாந்த்தின் பஞ்சாயத்து தோற்றது!<br /><br />இரண்டாவது நயன்தாராவின் காதல் வென்றது! அவ்வளவுதானா? வேறு செய்திகள் இல்லையா? ஏன் இல்லை? சன்டீவி சினிமா தயாரிக்கிறது! அது ஒரு நல்ல செய்தி இல்லையா?<br />சரி. ஏதாவது அரசியல் செய்திகள்? ஏன் இல்லாமல், தன் மகனை துணை முதல்வராக்கிய வகையில் தமிழகத்தின் பாதுகாப்பை அவர் பார்த்துக்கொள்வார் என்கிற நம்பிக்கையோடு எங்களது முதல்வரும் மூத்த கலைஞருமானவர் அடுத்த படத்துக்கு வசனம் எழுத ஆரம்பித்துவிட்டார். இதனால் நாங்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதோடு புதிய கலா அனுபவங்களிலும் திளைக்கப்போகிறோம்.<br /><br />ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுப்பதன் வாயிலாக சோறும் போட்டு சினிமாவும் காட்டும் ஒரே அரசாங்கம் எங்களுடையதுதான்!<br /><br />ஏதாவது அரசியல் கிசுகிசு? பிரஜாராஜ்யம் என்று ஒற்றை ஆளாக மேடையில் நின்று பெரும் கூட்டத்தைத் திரட்டிய சிரஞ்சீவி, தேர்தலில் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்ததிலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் இளைய தளபதி விஜய் வரைக்கும் குலைநடுங்கிப்போய்க் கிடக்கிறார்கள். இதனால் தேர்தல் கமிஷன் மிகுந்த சந்தோஷத்தில் மிதப்பதாகத் தெரிகிறது.<br />வட்டாரச் செய்திகள்? ஊட்டியில் இயக்குனர் மணிரத்னத்தின் ராவணா ஷூட்டிங்கில் பயன்படுத்தப்பட்ட மூன்று காரவன்கள் பிடிபட்டன. அவற்றில் ஒன்று ஒரே பதிவெண்ணை சென்னையிலிருந்த வேறொரு காரவனோடு பகிர்ந்துகொண்டுள்ளதாக போக்குவரத்துத் துறையும் காவல்துறையும் தெரிவிக்கின்றன. இதனால் இரண்டு பெரிய துறைகள் ஒன்றோடொன்று பகைமை பாராட்டிக்கொள்ளாமல் கைகோர்த்திருப்பது தேசத்தின் ஆரோக்யத்திற்கு மிகவும் நல்லது என்பதாக ஓய்வுபெற்ற நீதிபதியொருவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.<br /><br />வர்த்தகச் செய்திகள்? அதே மணிரத்னத்தின் திரைக்கதையில் அவருக்கே திருப்தியில்லாததால் திருத்தியமைக்கப்பட்டு படம் ரீ-ஷூட் செய்யப்படுகிற வகையில் இன்னும் ஒரு வருட தாமதம் நேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒரு வருடத்திற்கு டெக்னீஷியன்கள் முதல் நடிகர்கள் வரைக்கும் எக்ஸ்ட்ரா பணம் தரப்படுமா என்கிற கேள்வி எழுந்த வகையில் இது நியாயமான வர்த்தகம் அல்ல என்று ஒருசிலர் ஒதுங்கிக்கொண்டனர். தற்போதுதான் உடல்நிலை பாதிக்கப்பட்டு தேறி வந்திருக்கிற அந்த இயக்குனர் இதனால் தளர்ந்துபோய்விடக்கூடாது என்பதாக முண்டக்கண்ணியம்மன் கோவிலில் கூழ் ஊற்றப்பட்டது.<br /><br />விளையாட்டுச் செய்திகள்? லிட்டில் சூப்பர் ஸ்டாரான சிம்பு எனும் சிலம்பரசன் பொதுவாக கிரிக்கெட்டைத்தான் விரும்பி வந்தார். இப்போதோ ரோமில்நடந்த ஃபுட்பால் மேட்ச்சை ஆசையோடு பார்வையிட்டு வந்திருக்கிறார் என்பதனால் அவரது ரசிகர்கள் கிரிக்கெட் விளையாடினால்கூட இனிமேல்ஃபுட்பாலைத்தான் பயன்படுத்துவார்கள் என்பதாகத் தெரிகிறது.<br /><br />உலகச் செய்திகள்? உலக நாயகன் கமலஹாசன் அடுத்த படத்தில் களறிப்பயிற்று ஆசானாக வருவதனால் விரைவில் (அதாவது ஒரே வாரத்தில்) களரிக் கலையை முழுமையாகப் பயில உள்ளார். ஏஞ்சலினா ஜோலி வெங்கட் பிரபுவின் படத்தில் நடிக்க கேட்ட சம்பளம் படத்தை விடவும் பல மடங்கு அதிகம் என்பதனால் ஒரு ஹாலிவுட் நடிகையையே நிராகரிக்கும் அளவுக்கு தமிழ் சினிமா உயர்ந்து நிற்கிறது.<br /><br />சரி, ஏதாவது சினிமா செய்திகள்? சினிமா செய்தியா? அப்படி தனியாக ஏதாவது இருக்கிறதா என்ன!</span><br /></span>சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8130572.post-4009673152249544632009-06-23T18:57:00.000+05:302009-06-23T18:59:12.694+05:30சினிமா நாகரிகம்<span style="font-size:85%;">அடிப்படையில் நாகரிகம் என்பதே இயற்கைக்கு நேரெதிரானதுதான். மனிதனின் வளர்ச்சிநிலையில் ஓர் அங்கமாகவே நாகரிகம் என்பதும் வளர்ந்து வந்திருக்கிறது. கூச்சமும், மதமும், ஆசையும், கர்வமும், திறமையும் மனிதனை நாகரிகத்தை உற்பத்தி செய்ய வைத்திருக்கின்றன. நிகழ்த்துகலைகள் பொதுவாக நாகரிகத்தை பிரதிபலிக்கவே செய்தன. அவை நாகரிகத்தை உருவாக்கியிருக்கவில்லை. ஒரு நாவலில் எழுதப்பட்டதன் வாயிலாகவும் ஒரு நாகரிகம் உருவாகியிருக்கவில்லை. பெரும்பாலான மனங்கள் ஏற்றுக்கொள்கிற ஒரு புதுமையோ ஒரு பழமையோ நாகரிகமாக உருவாகிவிடுகிறது. அதன் சிறு பங்கு உண்மையைப் போலவே நிகழ்த்திக் காட்டப்படும் சினிமாவுக்கும் இருக்கலாம். ஆனால் நாகரிகம் என்பது ஓரளவுக்கு மனிதனுக்குத் தேவைப்படுகிற நன்மைகளை நிகழ்த்தி வந்திருக்கிறது என்றபோதும் பெரும்பாலும் அழிவை நோக்கிய பயணமாகவே இருந்துவருகிறது. இதில் சினிமாவின் பங்களிப்பும் இயல்பானதே.<br /><br />சிந்து சமவெளி நாகரிகம் போன்றதல்ல சினிமா நாகரிகம். சிந்துவில் மனிதனின் புத்தியும் தேவையும் இணைந்து வீதிகள், சாக்கடைகள், சுடுமண் கலாச்சாரம் என்று ஒரு நாகரிகம் விரிந்ததைப் பாடபுத்தகங்களில் நாம் படித்திருக்கிறோம். ஆனால் சினிமாவின் நாகரிகம் குறித்து வாசித்தறிய நாம் எங்கே போவது?<br /><br />அடிப்படையில் சினிமா என்பதை இருவகைப்பட்ட நாகரிக வளர்ச்சியாகக் கருதலாம். தயாரிக்கப்படுமளவில் தனக்கேயுரித்தானதொரு நாகரிகத்தையும், பார்க்கப்படுமளவில் சமுதாயத்தின் மத்தியில் எழும் நாகரித்தையுமே சினிமா கோருகிறது. இது அடிப்படை விளக்கம்.<br /><br />தயாரிக்கப்படுமளவில் சினிமா எவ்விதமான நாகரிகத்தைக் கைக்கொள்கிறது என்று பார்த்தால், ஒருவருக்கொருவர் எவ்விதமான சம்பந்தமும் இல்லாதவர்களின் கூட்டு முனைப்பு, பணத்தைப் போற்றுதல், புகழைத் தொழுதல், உழைப்பை அங்கீகரித்தல், கலையைக் கடைத்தேற்றல், திறமையைக் கண்டுகொள்ளல், அதைத் திருடுதல், உழைப்பவர்களுக்கு அன்னமிடுதல், நீதி சொல்லல், நிஜமே போல நிகழ்த்திக் காட்டுவதன் வாயிலாக சொல்ல வருவதை நிறுவுதல் என்று நீள்கிறது பட்டியல்.<br /><br />பார்வையாளனின் பார்வையில் பார்க்கும்போது, பொழுதுபோக்கல், நாயக விசுவாசம் கொள்ளல், காம குரோத வடிகாலாகக் கொள்ளல், நடையுடை பாவனைகளைப் பின்தொடர்தல், சினிமாவைப் பற்றிய எவ்விதமான அக்கறையும் இல்லாமல், திரையரங்கின் இருளை நம்பி தள்ளிக்கொண்டு போதல் என்று இதற்கும் ஒரு பட்டியல் உண்டு.<br /><br />முதல் பட்டியலில் உள்ள புகழைத் தொழுதல் எனும் பதமும் இரண்டாம் பட்டியலில் உள்ள நாயக விசுவாசம் எனும் பதமும் எத்தனை மோசமான நாகரிகத்தை சமூகத்தின் மத்தியில் நிகழ்த்திக் காட்டின என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அடுக்குத் தமிழில் வசனம் எழுதுவதன் வாயிலாக அநியாயத்தைத் தட்டிக் கேட்பவர்களும், ரோஜாவண்ண புஜத்தை முறுக்கி, பிழையாளர்களை வன்மையால் திருத்தும் வேடமேற்றவர்களும் நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்ற அவலம் உலகிலேயே தமிழ்நாட்டில்தானே முதலில் நிகழ்ந்தது!<br /><br />கிருஷ்ணபரமாத்மாவாக நடித்தால் தேவுடு, வில்லனாக நடித்தால் கெட்டவன், சிரிப்பு நடிகராக நடித்தால் ஜோக்கர், நாயகியாக நடித்தால் மனைவி, தங்கையாக நடித்தால் சகோதரி, தாயாக நடித்தால் அம்மா என்று பாத்திரங்களை அப்படியே உள்வாங்கிக்கொள்ளவே அறிந்திருந்த இந்த சமூகத்தை சினிமா மிகப் பிழையான நாகரிகத்திற்குள்ளேயே தள்ளிய குற்றத்தைத் தொடர்ந்து செய்து வந்திருக்கிறது. நம்பியார் இந்தப் படத்துல நல்லவனா நடிச்சிருக்கான்ப்பா என்று ஆச்சரியப்படுமளவுக்கு மனம் மயங்கிக்கிடப்பவர்களே இங்கே அனேகம். நம்பியாருக்கு பதிலாக பிரகாஷ்ராஜ் என்று மாற்றிப் போட்டுக்கொள்வதன் வாயிலாக இந்த இயல்பின் நீட்சியைக் கடத்திக்கொண்டு வருகிறோமே தவிர வேறென்ன சாதித்துவிட்டோம்?<br /><br />இதே மாதிரிதான் சினிமா, சமூகத்துக்கு நீதி சொல்ல முனைவதும். சினிமா எதைச் சொன்னாலும் ஏற்கிற நாகரிகத்தையே எட்டியிருக்கும் சமூகத்தால் சினிமா திரும்பத் திரும்ப தெரிவிக்கும் நல்லவன் வாழ்வான் தீயவன் ஒழிவான் என்கிற பதமும் உள்வாங்கப்பட்டிருக்கத்தானே வேண்டும்!<br /><br />ஆனால் அப்படி நடக்கவேயில்லையே! பதினாலு கொலை செய்தவன், சினிமாவைப் பார்த்துத்தான் துணிந்தேன் என்று சொன்ன வரலாறு தமிழகத்தில் உண்டு. ஆனால் பரோபகாரம் செய்த ஒரு மனிதன் சினிமாவைப் பார்த்துத்தான் செய்தேன் என்று சொன்ன சம்பவம் இதுவரைக்கும் நிகழ்ந்திருக்கிறதா?<br /><br />இது எதைக் காட்டுகிறது? சினிமாவில் நல்லவன் வாழ்வான் தீயவன் அழிவான் என்கிற கருத்து படம் நெடுக்க சொல்லப்படுவதில்லை என்பதையே இது உணர்த்துகிறது. படத்தின் க்ளைமாக்ஸில் மட்டுமே நிகழ்த்தப்படும் ஒரு செய்கை இது. மற்றபடி படம் பூரா வசதியாகவும், பெண்களின் அணைப்பிலும், பொதிப்பிலும் மிக சுகமாக வாழ்கிறான் வில்லன். நாயகனோ அவலங்களையே எதிர்கொள்பவனாகவும் அதையும் மீறி, கொஞ்சம் காதலையும் பெறுபவனாகவும் மட்டுமே சித்தரிக்கப்படுகிறான். அவலம் என்பது பிரச்சினை என்பதாக வேண்டுமானால் சில படங்களில் திருத்தப்பட்டிருக்கலாம். படம் பார்ப்பவனுக்கோ சந்தோஷம் மட்டுமே மண்டைக்குள் நுழைகிறது. இப்படியெல்லாம் இருக்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்தையே அவனுக்குள் முகிழ்க்க வைக்கிறது சினிமா. இதனால்தான் அவன் சினிமாவிலிருந்து நீதியை எடுத்துக்கொள்வதேயில்லை. படிப்பறிவில்லாத பெண்டாட்டி புத்தி சொல்ல நேர்ந்தால் அதைத் தூக்கி வீசிவிட்டு சந்தோஷத்தை மட்டும் நீ கொடுத்தால் போதும் மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று மறுதலிக்கிற மனோபாவத்தையே பார்வையாளன் எட்டியிருக்கிறான்.<br /><br />இத்தகைய சூழலில் உண்மையிலேயே வாழ்வை உரித்துக்காட்டும் ஓர் உன்னத சினிமா திடீரென்று வந்துவிட்டாலும் அதில் தான் அனுபவிக்க என்ன இருக்கிறது என்பதையே தேடக்கூடிய மனோநிலையிலேயே பார்வையாளன் இருக்கிறான். அதாவது நல்லது தீயது என்பதாகப் பகுத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமேதுமில்லை. எது சந்தோஷத்தைத் தருகிறதோ அதுவே தேவையானது என்கிற நிலையையே அவன் எட்டியிருக்கிறான். முழுக்க முழுக்க அவலத்தை மட்டுமே காட்டும் தத்ரூப சினிமாவொன்றை அசல் கலைஞன் என்பதாக ஒருவன் வந்தாலும் எடுத்துக்கொடுக்கத்<br /><br />துணியாத நிலைப்பாடே இதனால் நேர்ந்திருக்கிறது. தமிழில் நல்ல படங்கள் முனையப்படாததன் அடிப்படைக் காரணம் இதுதான்.<br /><br />இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் வந்த முதல் பட்டியலில் மிகவும் ஆச்சரியமானதாக நான் கருதுவது அன்னமிடுதல். இதன் அடிப்படைக் காரணம் என்ன என்பதே எனது முதல் வியப்பாக இருந்தது. பள்ளிக்கூடங்களில் சத்துணவு இடப்படுவதைப்போல வேறெந்தத் தொழில் துறைகளிலும் இல்லாதபடி வேலை செய்பவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுவது இங்கே மட்டும்தான். பரோபகாரியானதொரு ப்ரொடியூசர் இவ்விதமாக ஆரம்பித்து வைத்து இன்னும் தொடர்கிறதா? இல்லை, காலையிலிருந்து வேலை நடந்துகொண்டிருக்கும்போது பாதியில் உணவு இடைவேளை என்று ஒன்றை விட்டு அவனவனை வீட்டுக்கு அனுப்பினால் பெண்டாட்டி மோதியதாலோ பேருந்து மோதியதாலோ திரும்ப வராமல் போய்விட்டால் அவன் வேலையை எவன் செய்வது என்கிற கொத்தடிமை மனோபாவத்தாலா? இதைக் கூர்ந்து நோக்கினால் இன்றைக்கு பிபீவோ கலாச்சாரத்திலும் இந்த முறை பின்பற்றப்படுவதன் பின்னணியும் வெட்டென விளங்கும்.<br /><br />காரணம் எதுவோ, இதன் வாயிலாக சினிமா கண்டேத்திய நாகரிகம் யாதென்றால், சோறு கிடைக்க வேண்டுமானால் ஷூட்டிங்கில் இடம்பெறவேண்டும் என்கிற கொடூரமான நிலைப்பாட்டுக்கு சினிமாவின் சில துறையாளர்கள் தள்ளப்பட்டதுதான். திருப்பதியில் ஆறு மணிநேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்தால்தான் அன்னதான டோக்கன் கிடைக்கும் என்பதைப் போன்றதே இது. எவ்வளவோ விஷயம் இருக்க, இதைப்போய் பிரஸ்தாபித்துக்கொண்டிருக்கிறாயே என்று நினைக்காதீர்கள். காமராஜர், பள்ளிக்குக் குழந்தைகள் வரவேண்டுமானால் இந்த ஏழைநாட்டில் சோற்றால் அடித்தால்தான் ஆகும் என்று தீர்மானித்ததைப் போலத்தான் ஒரு துறையின் பணியாளர்கள் மிகக் கேவலமாகவும் அதேநேரத்தில் நுட்பமாகவும் அவமானப்படுத்தப்படுகிற செய்கையே இது என்பதே எனது வாதம்.<br /><br />ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரு பத்திரிகையாளரோ, டெக்னீஷியனின் நண்பரோ போய் நின்றால் முதலில் கேட்கப்படுவது சாப்பிடுகிறீர்களா என்பதாகத்தான். இது நல்ல குணம்தானே என்று நினைக்க வேண்டாம். நிஜமான சமூகத்தில் உள்ள கரிசனை இந்த அன்னமிடலில் இருக்கிறதா? தமிழக கிராமங்களில் யார் வீட்டுக்குப் போனாலும் முதலில் ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிற நாகரிகம் இன்றும் பேணப்பட்டு வருகிறது. இந்த அன்னமிடுதலைவிடவும் மிகுந்த அன்பு நிறைந்த செய்கை அது.<br /><br />இதனால்தான் சோற்றால் அடிப்பது என்கிற பதத்தை உபயோகிக்கிறேன். இதனால் சினிமா எட்டியுள்ள நாகரிகம் என்ன? நக்கிப்பிழைக்கும் கலாச்சாரத்தை வளர்ப்பதுதானோ! இதைத் தொடர்ந்துதான் கேரவனுக்கு உள்ளே உட்கார்ந்து சாப்பிடுபவன், வெளியே உட்கார்ந்து சாப்பிடுபவன் என்கிற கலாச்சாரமும் இன்று நிலவுகிறது. இதனாலேயே சினிமா என்பது புகழ், அந்தஸ்து, பதவி ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்களைப் பகுக்கும் இனவாத குணத்தைப் பேணிக்காப்பதாகவே இருக்கிறது என்பதே எனது குற்றச்சாட்டு. பல பெரிய படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் உலகில் உள்ள அத்தனை மாமிசமும் ஒவ்வொருநாளும் சமைக்கப்படுவதுண்டு. ஆனாலும் நாயகனோ, நாயகியோ தன் வீட்டிலிருந்து கொண்டுவந்திருக்கும் உணவை மட்டுமே உண்ணுகிற சுதந்திரத்தையும் பெற்றிருக்கவே செய்கிறார்கள். ஒருபக்கம் ஆப்பிள் ஜூஸ் அத்திப்பழ ஜூஸ் என்று இம்சை தருகிறார்கள் என்பதைப்போல ரிப்போர்ட்டர்கள் செய்தி வெளியிட்டு வெளியிட்டு இம்மாதிரியானதொரு பார்வை உண்டு என்பதையும்கூட நமது போதத்தில் பொங்கிவிடாதவாறு பார்த்துக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதே உண்மை.<br /><br />இந்தப் போக்கின் உச்சக்கட்ட ஆட்டமே சமீபத்தில் ஒரு திரைப்படத்தைப் பார்க்கப் போனவர்களுக்கு பிரியாணிப் பொட்டலம் இலவசமாக வழங்கப்பட்டது! சம்பந்தப்பட்டவர் வேறு எம்ப்பியாகிவிட்ட வகையில் எழுதவே பயமாக இருக்கிறது. இருந்தாலும், இவ்விதமாக சினிமா இலவசக் கலாச்சாரத்தைத் தூண்டுவதாகவும் தான் சார்ந்த மொழியினரை பிச்சை எடுக்கத் துணிபவர்களாகவும் மாற்றுகிற அவலத்தைத்தானே கோருகிறது. அரசியல் பிழைப்பார்க்கு அறம் கூற்றென்றால், திரைப்படம் பிழைப்பார்க்கு இதுதானா கூற்று?<br /><br />சினிமா ஒரு தொழில் என்கிற அடிப்படையிலேயே, 'ஒருவருக்கொருவர் எவ்விதமான சம்பந்தமும் இல்லாதவர்களின் கூட்டு முனைப்பு, பணத்தைப் போற்றுதல், புகழைத் தொழுதல், உழைப்பை அங்கீகரித்தல், கலையைக் கடைத்தேற்றல், திறமையைக் கண்டுகொள்ளல்' ஆகிய பதங்களெல்லாம் காண்கின்றன என்பதனால் இதைப் பெரிதாகப் பாராட்டுவதன் வாயிலாக நம் நேரத்தை நாம் வீணடித்துக்கொள்ள வேண்டாம் என்றே தோன்றுகிறது. கெட்டது நிறைய இருக்குமிடத்து நல்லதும் சில இருந்துதானே தீரும்.<br /><br />பார்வையாளனைப் பொறுத்தவரைக்கும், சினிமா அவனுக்கு நன்றாக ஆடையுடுத்தக் கற்றுக்கொடுத்தால் அது நல்லதுதானே! சாலையில் எதிர்ப்படுபவர்கள் எல்லாம் நல்ல முறையில் ஆடையுடுத்தி, நவீன ரக வாகனங்களில் பயணம் செய்து, அவர்களுக்கருகாக நாம் நகரும்போது நறுமணம் வீச நடமாடினால் நமக்கும் நல்லதுதானே!<br /><br />ஒரு சினிமாவைப் பார்ப்பதன் வாயிலாக ஒரு மனிதனின் காம வெறியோ, கொலை வெறியோ தணிந்துபோய் பசித்த சிங்கம் போல அரங்கினுள் நுழைந்தவன், பசுமாட்டைப்போல வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தால் குடும்பத்தினில் காணும் உயிர்களுக்கும் பாதுகாப்புத்தானே!<br /><br />என்ன நான் சொல்வது? </span>சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8130572.post-17515942957070552612009-06-12T09:50:00.002+05:302009-06-12T09:57:35.025+05:30சமூகத்தை சினிமா சீர்குலைக்கிறதா?<span style="font-size:85%;">சமுதாயத்தை சீர்குலைக்கிற வேலையை சினிமா வெகுகாலமாகச் செய்து வந்தது உண்மைதான். ஆனால் இப்போதோ அந்தக் குற்றச்சாட்டு செல்லாது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் காண்கின்றன. முதலாவது அந்த வேலையை இப்போது செய்துகொண்டிருப்பது தொலைக்காட்சிப் பெட்டி. இரண்டாவதும் மிக முக்கியமானதுமான காரணம், சினிமா என்னதான் முனைந்து இன்றைய சமுதாயத்தை சீர்குலைக்கவோ மாற்றவோ முயன்றாலும் முடியாதவாறு சமுதாயம் அதைவிட வேகமாகமாற்றம் அல்லது சீர்குலைவை, தானே முன்வந்து ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதுதான்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">சும்மா திடீரென்று உனக்குத் தமிழ் சினிமா மேல் பாசம் வந்தால் இப்படி ஒரேயடியாக உளறாதே என்று நீங்கள் கேட்கமாட்டீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. அதனால் இந்தக் கூற்றுகளை விளக்கமுடியுமா என்று பார்க்கிறேன்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">பாகவதர் படக்காலங்களில் தொப்புளுக்கு ரெண்டு இன்ச் மேலே கொசுவம் வைத்த பதினாறு கஜ சேலை கட்டிக்கொண்டுதான் பெண்கள் நடித்தார்கள். அப்போது பெண்கள் நடிக்கக் கிடைப்பதே துர்லபமாக இருந்தது என்பதனால் கிடைத்த மூஞ்சிகள்தான் வெல்லம். இந்த லக்ஷணத்தில் கஜத்தையோ இன்ச்சையோ குறைப்பதெல்லாம் சாத்தியமேயில்லாமல் இருந்தது என்பதாகவெல்லாம் வாதாடக்கூடாது. அப்போதைய ஆணின் மனம் பெண்ணை அவ்வாறு பார்ப்பதையே விரும்பியது. இப்போதும் தங்கள் வீட்டுப் பெண்கள் என்றால் மட்டும் இறுக்கமான உடையணிந்து வீதியுலா வரக்கூடாது என்று கண்டிக்க முடிகிறதோ இல்லையோ, மனதிற்குள் அவாவுறும் ஆணுள்ளங்கள்தானே பெரும்பாலும்!</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">பாகவதர் வீதியில் பாடிக்கொண்டு போகையில் பெண்கள் தெறித்து ஓடுவதைப் பற்றிய விளக்கமொன்றை ஏற்கனவே எழுதியிருந்தேன். அதுகூட சமுதாயத்தை சீர்குலைக்கக்கூடிய வேலை என்பதாக எனக்கு இந்தக் கட்டுரை எழுதும் வேளையில் தோன்றவில்லை. பெண்களின் மனக்கிடக்கையில் சுதந்திரம் குறித்த ஆசை எத்தனை உயரத்துக்குத் தத்தளித்துக்கொண்டிருக்கிறது என்பதை பள்ளியறைகளிலேனும் புரிந்துகொள்ள இயலாத நிலையில் அன்றைய ஆண் மனம் இருந்திருக்க முடியாது அல்லவா!</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">ஏன் இந்த உதாரணத்தில் ஆரம்பிக்கிறேன் என்று சொன்னால் சமுதாயச் சீர்குலைவு என்பது முதலில் பெண்களின் சீர்குலைவு என்பதையே வெகுகாலம் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தது. இப்போதுதான் கண் காது மூக்கு என்று நவதுவாரமும் திறந்துகொண்டு பிள்ளைகளின் சீர்குலைவே சமுதாயத்தின் சீர்குலைவுக்கான அச்சாணி என்பதை ஆணுள்ளங்கள் கண்டு தெளிந்து வருகின்றன.சினிமா பார்த்தால் பெண்கள் கெட்டுப் போவார்கள் என்பதாக நம்பிய அந்தக்கால சமூகம், அதே சினிமாவில் பெண்களைப் பார்ப்பதையும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு விரும்பியது. ஊரில் தெருவில் கரகாட்டம் என்றாலோ, ரெக்கார்ட் டான்ஸ் என்றாலோ வெட்கமில்லாமல் வெகண்டை பேசிக்கொண்டும் விசிலடித்துக்கொண்டும் கூட்டமாகப் போய் அம்மியது.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">பத்திரகாளி படத்தில் ஒரு காட்சி. பிராமணக் குடும்பம். கணவன் ரெகார்ட் டேன்ஸ் பார்ப்பதில் ஆர்வம் கொண்டுள்ளதை அறிந்த மனைவி வீட்டுக் கதவை சாத்திவிட்டு மடிசார் சகிதம் ஒரு ரெகார்ட் டேன்ஸ் ஆடிக் காட்டுகிறாள். போதுமா என்று கேட்கிறாள். அவன் பரம திருப்தி என்று தெரிவிக்கிறான். தமிழ் சினிமாவில் அப்போதெல்லாம் அவ்வளவுதான் காட்ட முடிந்தது பாவம். இப்போதானால் ஒரு மடிசார் ஸ்ட்ரிப்டீஸ் சகஜமாக நம்மால் எதிர்கொள்ள முடியும். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நான் ஆளான தாமர என்று ஷோபனாவை வைத்து மிக ஆச்சாரமான உடை என்பதாக பிராமணர்கள் கருதும் மடிசாரையே கவர்ச்சியுடையாக்கிக் காட்டிய பாக்கியராஜையும் இந்த நேரத்தில் நாம் பெருமிதத்தோடு நினைவுகூரவேண்டியதுதான்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">உண்மையில் தமிழகப் பெண்கள் அணியும் ஆடைகளிலேயே மிகவும் கவர்ச்சிகரமானது புடவைதான் என்பதை நுட்பமாகப் புரிந்துகொண்ட வகையிலேயே தமிழ் சினிமா பல உன்னதமான காட்சிகளை நாசூக்காகத் திணித்து வந்திருக்கிறது. பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால்கூட கேரளத்தில் முண்டும் ரவிக்கையும் அணிந்த பெண்களை வீதியில் பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கோ, ரோசாப்பூ ரவிக்கை முழுசாகவும் பருத்த முலைகளின் பிதுங்கல் கனிசமாகவும் தெரியக்கூடிய நிலைமை வந்துவிட்டால் அத்தனை விசிலடிச்சான்குஞ்சுகளுக்கும் உறக்கம் போயே போய்விடுகிற நிலைமையே வெகுகாலம் இருந்தது (அந்தக் குஞ்சுகளுக்கு சம்சாரம் என்பதாக வேறு ஒருத்தி இருந்தால் அவளுக்கும் உறக்கம் போயிருக்கும் என்பது வெறும் செயின் ரியாக்ஷன்!).</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இப்போதோ கேரளத்திலேயே அவ்விதமான உடையணிய ஒருத்தரும் தயாரில்லை. அந்த உடை சரியானதா தவறானதா என்பதைக்குறித்து ஏஷியா நெட்டில் விவாதித்து விவாதித்து முடித்தே விட்டார்கள். ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்தால் போதும், விவேகமான காமெடியன்கள் வாயிலாக மும்தாஜ் முதல், எனக்குப் பெயர் தெரியாத போலீஸ் இன்ஸ்பெக்டரை கொச்சச்சன் என்று ஆசையோடு விளிக்கிற கும்மென்ற இளம் நடிகை வரைக்கும் கேரள முண்டு கலாச்சாரத்தை தமிழ் நாட்டில் நிறுவிவருகிறார்கள். உண்மையில் அப்படியொரு கனத்த இளம்பெண் அந்த ரவிக்கை உடையோடு இன்றைய சென்னை வீதியில் நடந்துபோனால் என்ன நடக்கும்? டைட்டான ஜீன்சும் தொப்புள் தெரிய இறுக்கமான டீஷர்ட்டும் அணிந்து செல்லும் பெண்களுக்கு மத்தியில் உண்மையான கவர்ச்சியுடை எது என்பது வெட்டென விளங்கும். நானும் எவ்வளவு நேரம்தான் என் எமோஷன கன்ட்ரோல் பண்றது என்று விவேக் கேட்டதுபோலத்தான் ஆகும்!</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">சினிமா நிகழ்த்தும் சீர்கேடுகளில் மிகவும் நுட்பமானது இந்த வகைதான். ஆனால் இந்த சீர்கேட்டை ஸிங்கிள் விண்டோ கொண்ட சினிமா தயாரித்து, டீவியிடம் விற்றுவிடுவதனாலேயே திரும்பத் திரும்ப சிறாரிலிருந்து பெரியோர் வரைக்கும் அதைப் பார்த்துப் பார்த்து மூளையின் செதில்களைக் காமத்தின் கழிவுகளால் நிரப்பிக்கொள்கிற அவலம் நிகழ்ந்து வருகிறது.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">ஒரு மோசமான காட்சியை சினிமா எடுத்துக் கொடுக்கலாம், டீவி காட்டக்கூடாதா என்று கேட்கக்கூடாது. அதனால்தான் ஸிங்கிள் விண்டோ என்கிற பதத்தை உபயோகித்தேன். சினிமாவை காசுகொடுத்து தியேட்டரில் போய்த்தான் பார்க்க வேண்டும் என்கிற நிலைமை இருந்தவரைக்கும்தான் சினிமாவை குற்றஞ்சாட்டலாம். ஏனென்றால் திரும்பத் திரும்ப ஒரு காட்சியைப் பார்க்க விரும்பினால் திரும்பத் திரும்ப முழுப் படத்தையும் பார்த்தாக வேண்டிய சூழல் அதில் உண்டு. முழுப்படத்துக்கான டிக்கெட் கட்டணத்தையும் கொடுக்க வேண்டிய அவசியமும் அதில் உண்டு. இல்லையானால் ஆப்பரேட்டர் உங்கள் பிரண்டாக இருந்தால்தான் ஆகும். ஆனால் டீவிப்பெட்டி என்பதாக ஒன்றும் அதில் கேபிள் அல்லது டிஷ் இணைப்பு என்பதாக ஒன்றும் இருந்துவிட்டால் போதுமே போதும், வேண்டுமோ வேண்டாமோ, விண்டோ விண்டோவாகத் திறந்து அதே காட்சியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். டீவிடி ப்ளேயர் என்பதாக ஒன்று இருந்துவிட்டாலோ இன்னும் விசேஷம்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இதனால்தான் பிரச்சினை பிலிம் பெட்டியில் இல்லை, டீவிப் பெட்டியில்தான் இருக்கிறது என்று சொல்ல வேண்டி வருகிறது.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">ஆங்கில அல்லது வெஸ்டர்ன் கலாச்சாரத்தில் பார்ட்டி உடை என்பதாக ஒரு பதம் உண்டு. சாதாரண பார்ட்டிகளுக்குக்கூட அசாதாரணமான உடையணிந்து செல்வதை ஒரு கலாச்சார நடவடிக்கையாகவே அவர்கள் பயின்று வந்திருக்கிறார்கள். முலைகள் பிதுங்க வயிற்றையும் மார்பையும் இறுக்கிக் கட்டிக்கொள்வது அங்கே மிகச் சாதாரணமான செயல்பாடு. முலைகள் கண் முன் பிதுங்கினாலும் அதைத் தொடுவது நாகரிகமற்ற செய்கை என்பதாக அங்குள்ள ஆண்களின் மனத்தில் சிறுபிராயம் முதலாகவே பதிவு நிகழ்ந்திருக்கிறது என்பதனால் அங்கே இது ஒரு பிரச்சினை இல்லை.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">சில வருடங்களுக்கு முன்னால் யூட்யூப்.காமில் பிரபல நடிகை ஒருவரின் க்ளிப் ஒன்றைப் பார்த்தேன். அனேகமாக தமிழ்நாட்டிலுள்ள இணையப் பழக்கமுள்ள அத்தனைபேரும் இதைப் பார்த்திருப்பார்கள். நடிகை ஒரு கூட்ட நெரிசலில் சிக்கி பெண்மைக்குரிய அச்சம் மடம் முதலான அத்தனை பாங்குகளோடும் வெளியேற முனைகிறார். மிகுந்த கண்ணியமான தோற்றமுள்ள; போலீஸ்காரன் போல க்ராப்வெட்டிய இளைஞனொருவன் நடிகையை முன்னாலிருந்து கடக்கிறான். அவன் நடிகையின் முகத்தைக்கூட பார்க்க விரும்பாதவன் போல வேறெங்கோ பார்த்தவனாயிருக்கிறான். ஆனால் அவனது ஒரு கரம் நடிகையின் ஒரு முலையை ஒருகணம் பிசைகிறது.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இவ்வளவு அசிங்கமான ஒரு காட்சியை நீங்கள் சினிமாவில்கூட பார்த்திருக்க முடியாது. இதனால்தான் சமுதாயம் சினிமாவைவிடவும் வேகமாகக் கெட்டுக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறேன்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">சாதாரணமாக கிராமங்களில் திருவிழாக்கள் என்றால் இந்தமாதிரி மைனர்கள் நெரிசலைப் பயன்படுத்தி பெண்களின் முலைகளையும் பின்பக்கத்தையும் பிசைவதே நமது பாரம்பரிய கர்மமாக இருந்து வருவதன் நகரமயமாக்கம்தான் பேருந்துப் பிசைவுகள். பெண்ணை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தொட்டுப் பார்த்துவிட வேண்டும் என்கிற முனைப்பு அனாதி காலம் தொட்டே இருந்து வருவதுதான் என்றபோதும் ஒரு அரசனுக்குள்ள தைரியம் போல பொது இடங்களில் இவ்விதமாகத் துணிகிற செயல்பாடு எமது தேசத்தின் கறுப்புப் பக்கம். என் நண்பனொருத்தன் மிக ஆகிருதியாக இருப்பான். ஒருமுறை அவனோடு ரயில் நிலையத்துக்குப் போயிருந்தேன். அப்போதுதான் வந்த ரயிலிலிருந்து இறங்கிய கூட்டம் தூக்கக் கலக்கமும் களைப்புமாக வேகவேகமாக ஒற்றை வாசலை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. நாங்கள் எதிரில் செல்கிறோம். நண்பன் இரண்டு கைகளையும் ராஜராஜசோழன் மாதிரி இடுப்பில் வைத்துக்கொண்டான். எதிர்ப்படும் பெண்களின் முலைகளில் தன் முழங்கையால் மோதிக்கொண்டே வந்தான். நான் பத்தடி பின்தங்கிவிட்டேன். அடி வாங்க தைரியம் இல்லை. ஆனால் அவனது ஆகிருதியோ அவர்களது அவசரமோ, ஒருத்தரும் சண்டைக்கு வரவில்லை. முடிவில் இது சரியா என்று நான் கேட்டபோது அவன் சொன்னதுதான் ஆச்சரியமூட்டும் பதில். அவன் சொன்னான்,</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இது அவங்களுக்குப் புடிக்கும்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">அவர்கள் எப்போது இவனிடம் வந்து இப்படிச் சொன்னார்கள் என்பதுதான் தெரியவில்லை. இன்னொரு நண்பன் உண்டு. அவன் திரையரங்கில் திரையில் மட்டும்தான் சினிமா ஓடுகிறது என்பதில் நம்மைப்போல் நம்பிக்கை இல்லாதவன். இந்தமாதிரியான மனோபாவங்களே சமூகம் முன்னே செல்லாமல் தேங்க வைப்பவை. இந்த மனோபாவத்தை ஜீன்கள் வழங்குகின்றன அல்லது சமூக அழுத்தங்கள் நிகழ்த்துகின்றன. மற்றபடி சினிமா என்பது வெறும் நிழல்தான். </span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இணையத்தின் இருட்டுப் பக்கங்கள், பப், டிஸ்கோதே, பிபீவோ கலாச்சாரம் ஆகியவையெல்லாம் சினிமாவிலிருந்து வந்தவை அல்ல. சமூகத்திலிருந்து சினிமாவுக்குள் நுழைபவை. எந்தக் காலத்திலும் தமிழ் சினிமாவின் பிழை மிகைப்படுத்தல்தான் என்பதுதான் அதன் தவறு. முன்பெல்லாம் ஒரு பெரிய ஹீரோவின் படத்தில் கவர்ச்சியான காட்சிகள் வில்லன்களை மையமாக வைத்தே காட்டப்பட்டன. இப்போதோ தலைகீழாக மாறிவிட்டது. ரஜினிகாந்த் நடித்த வீரா படத்தில் ரோஜாவும் ரஜினியும் இணைந்து வெத்தலை என்று வருகிற பாடலொன்றில் அசிங்கமான அங்க அசைவுகளோடு ஆடியதைப் பார்த்து ஒருவிதமான கலாச்சாரக் கலவரத்தில் விழுந்தேன். அந்தப் படத்துக்குப் பின்தான் ரஜினி படங்களில் கதாநாயகிகளின் கவர்ச்சி என்கிற அஸ்திரம் கையாளப்பட்டது. ரஜினிகாந்த் மாதிரி ஒரு ஸ்டாருக்கு இது தேவையா என்று ஆச்சரியமாக இருந்தது. ரஜினியைக் காலத்தோடு இணைந்து செயல்பட வைக்கிறார்களா, அல்லது வெறும் நடிகனின் புகழை மட்டும் நம்பினால் படம் ஓடாது என்று நினைக்கிறார்களா? சுரேஷ்கிருஷ்ணாதான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">சினிமாவை வெறும் வியாபாரமாகப் பார்க்கிற போக்கின் அவலம் இது. அவர்களைப் பொறுத்தவரை சினிமா ஜெயிக்க வேண்டும். ஏனென்றால் அதன் பின்னால் பெரும் உழைப்பும் பணமும் கொட்டிக்கிடக்கிறது.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">டீவிப் பெட்டிக்கோ கிடைத்ததெல்லாம் அவல்தான். திரும்பத் திரும்ப மென்றுகொண்டே இருக்கத் தோதாக சினிமா எதைக் கொடுத்தாலும் அதை பகாசூரன் போல விழுங்கிக்கொள்ள அது தயாராக இருக்கிறது.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">கள்ளத்தனமான சமூக மனமோ தமிழ் சினிமா ரொம்பவும் பரிதாபத்துக்குரியது, அதனால் இவ்வளவுதான் காட்ட முடியும் என்று உள்ளூர நகைத்துக் கொண்டேயிருக்கிறது.</span>சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8130572.post-9088706066190530722009-06-12T09:40:00.002+05:302009-06-12T09:48:51.222+05:30எமது பரீட்சார்த்தத் திரைப்படங்கள்!!!<span style="font-size:85%;">சினிமா ஒரு பரிசோதனைக்கூடமா அல்லது அப்படியெந்த அவசியமும் சினிமாவுக்கு இல்லையா என்கிற கேள்வியே இதில் மிகவும் பிரதானமானது. இங்கே பரிசோதனை என்பது எது என்பதை சற்று எளிமையாக விளக்க முயன்றால், அரைத்த மாவையே அரைப்பது என்பதற்கு நேரெதிரான பதம்தான் இந்த 'பரிசோதனை முயற்சிகள்'என்கிற சொல்லாடல் என்கிற நிலையை எட்டலாம்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">தமிழில் ஏதாவது பரிசோதனை முயற்சிகள் நிகழ்ந்துள்ளனவா என்பதே இதில் ஆதாரமான கேள்வி! எஸ்ஸஸ்வாசனின் அவ்வையார் தமிழின் முதல் மிக பிரமாண்டமான படம். யானைகள் கோட்டை கொத்தளங்களை மோதி உடைக்கும் காட்சிகள் வரைக்கும் பல காட்சிகள் ஸ்டாக் காட்சிகளின் துணையில்லாமல் அந்தப் படத்துக்காக எடுக்கப்பட்டன. அவ்வையார் ஒரு பரிசோதனை முயற்சியா? பார்க்கலாம்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">எவ்வித முன்யோசனையும் இல்லாமல் அவ்வையார் என்கிற தமிழ்ப் பெண்கவியின் வாழ்வில் நிகழ்ந்ததாக நம்பப்பட்ட அல்லது புனையப்பட்ட காட்சிகளின் அடுக்குகளை இஷ்டத்துக்கு சுட்டுத்தள்ளிய படம். அதாவது படம் தயாரிக்கப்பட்டபோது அதற்கென்று ஸ்க்ரீன்ப்ளே என்பதாகவெல்லாம் எதுவும் இல்லை. இதில் புனையப்பட என்கிற பதம் வேறு ஏன் வருகிறது என்று கேட்டால் அவ்வையாரின் வாழ்வில் நிகழ்ந்ததாக நம் சினிமாக்கள் காட்டிய காட்சிகளின் லக்ஷணத்தைப் பாருங்கள் உங்களுக்கே தெரியும். ஒரே ஒரு சாம்ப்பிள் போதும் என்று நினைக்கிறேன், பூலோகத்தில் வசித்த அவ்வையார் திடீரென்று தேவலோகத்துக்கே நாட்டாமை போல கைலாயத்துக்கே சென்று ஈசனின் இடது தொடையில் ஜம்மென்று உட்கார்ந்திருக்கும் குமரனுக்கு புத்தி சொல்ல ஆரம்பித்துவிடுவார் என்கிற புனைவை பின்னே வேறு என்னவென்று சொல்வது? அவ்வையார் என்ன பெண்பால் நாரதரா? திரிலோக சஞ்சாரம் செய்துகொண்டிருப்பதற்கு? அல்லது நாரதர் வைணவர்களின் ஆசாமி என்பதால் சைவர்களுக்கு இவ்விதமானதோர் அம்மையாரின் தேவை நேர்ந்தது என்பதாகக் கொள்ளலாமா? இந்த மாதிரி மீயதார்த்தக் காட்சிகளெல்லாம் நம்மாட்களின் சாதனைகள் என்பதாகத்தான் நமக்குள் நகைத்துக்கொள்ள வேண்டும்!</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">அவ்வையார் பிரமாண்டப் படங்களின் தோற்றுவாயாக இருந்தது உண்மைதான். பிற்பாடு சந்திரலேகா முதலான படங்கள் இதை அடியொட்டியே பிரமாண்டமாக எடுக்கப்பட்டன. ஆனால் பிரமாண்டமாக முயலப்பட்ட முதல் படங்கள் என்பதனால் இவை பரிசோதனை முயற்சிகளாக ஆகிவிடுமா?</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">முதற்கண் பரிசோதனை முயற்சி என்பதே சினிமா ஒரு கலை என்பதன் அடிப்படையில் நிகழ்த்தப்படுவதுதான். பரிசோதனைகள் ஆய்வுக்கூடங்களுக்கு மட்டுமல்ல கலைத்துறைக்கும் மிகவும் பொருந்துபவைதான் என்பதைத்தான் நம்மாட்கள் ஒருபோதும் மனதில் போட்டு அலட்டிக்கொள்வதேயில்லையே!</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இந்த வழியில் தமிழின் இன்னொரு முக்கியமான பரிசோதனைப் படம் நவராத்திரி. சிவாஜி என்பதாக ஒரு நடிகன் எத்தனை பாத்திரம் கொடுத்தாலும் தாங்கறான்டா, ரொம்ப நல்லவன்டா என்பது மாதிரியான நம்பிக்கையில் இந்தப் படம் எடுக்கப்பட்டது. ஒரே ஆள் ஒன்பது பாத்திரங்கள் ஏற்று நடிக்க வேண்டும் என்பதே இப்படத்தின் பரிசோதனை முயற்சி. மிகப்பெரிய சாதனையான இதை முறியடிக்க இரண்டு பேர் முயன்றார்கள் ஒருவர் எம்ஜியார் மற்றவர் கமலஹாசன். ஆனால் முந்தைய சாதனையை இவர்கள் இருவரும் தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை. ஏனென்றால் எம்ஜியார் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் நீ ஒன்பது பாத்திரங்களில்தானே நடித்தாய், நான் ஒன்பது கதாநாயகிகளோடு நடிக்கிறேன் பார் என்று நவரத்தினம் என்று ஒரு அசத்தலான பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டார். கமலஹாசனோ மேக்கப் மற்றும் கிராஃபிக்ஸ் என்று பலவிதமான லேயர்களை நம்பியே பாத்திரங்களை ஏற்றார். என்னவொரு கலைநுணுக்கம் பாருங்கள்!அதேபோல் தமிழின் இன்னொரு மிக ஆச்சரியமான பரிசோதனை முயற்சி ராஜ்கமல் தயாரிப்பில் வெளிவந்த விக்ரம். இந்தக் கதைவிவாதத்தில் அடிப்படையில் ஓர் எழுத்தாளரான சுஜாதாவும் இருந்த வகையில் அந்த விவாத லூட்டிகள் சிலவற்றை அவர் அந்தப் படம் குறித்த தொடர் ஒன்றில் எழுதினார். படம், தமிழில் ஜேம்ஸ்பாண்ட் படம் தயாரிக்கும் முயற்சியே தவிர வேறில்லை. டிஸ்கஷன் இவ்வாறு இருக்கிறது, வறண்ட பிரதேசம். ஒரு வேலி மட்டும் முடிவில்லாமல் நீண்டு கிடக்கிறது. அதில் ஒரு இரும்பு கேட். அருகில் ஓர் அழுக்கான போர்ட். அதில் அன்னியர் உள்ளே பிரவேசிக்கக்கூடாது என்பதாக வாசகம். அந்த போர்டின் மீது ஒரு பறவை உட்கார்ந்திருக்கிறது, என்று சுஜாதா ஸ்க்ரீன்ப்ளே எழுதுகிறார். அது எந்த வகைப் பறவையோ அதையே அங்கே உட்கார வைப்பதாக இயக்குனர் ராஜசேகர் உறுதி கூறுகிறார். அடுத்தபடியாக கமலஹாசன் சொல்கிறார், இந்தப் படத்தில் கண்டிப்பாக ஒரு கார் ஆற்றில் விழ வேண்டும் என்று! ஆமாம் ஸ்கை டைவிங்கூட வேண்டும் என்பதாக அடுத்த கோரிக்கை வைக்கப்படுகிறது. இதற்கப்புறம்தான் சலாமியா, ஆங்கோர் இளவரசி, ஜெய்ப்பூர் எலிக்கோவிலை வேறுதேச மாளிகையாகக் காட்டலாம், ஜேம்ஸ்பாண்ட் படங்கள் மட்டுமல்ல, ப்ரூஸ்லீ படங்களிலிருந்தும் காட்சிகள் சுடலாம் என்பதாகவெல்லாம் சுஜாதா வெளியிடாத தகவல்கள் ஆலோசிக்கப்படுகின்றன.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இதன் உச்சக்கட்டமாக, இந்தப் படம் ஒரு வாரப் பத்திரிகையில் தொடர்கதையாக சுஜாதாவால் எழுதப்படுகிறது. அதில் சுஜாதா ஒரு வசனம் எழுதுகிறார். கம்ப்யூட்டர் நிபுணியான நாயகி, நாயகனிடம் ஆண்கள் செய்கிற எந்தக் காரியத்தையும் பெண்களாலும் செய்ய முடியும் என்பதாக சவால் விடுகிறாள். பெண்டாட்டி செத்துப்போன துக்கத்தில் விரக்தியின் விளிம்பில் காணும் ஸ்வாஸ்நெகரின் கமாண்டோ ரக நாயகன் அவளிடம் கேட்கிறான், நாங்கள் சுவரில் ஒன்னுக்கு அடிப்போம், உங்களால் முடியுமா? என்று. படத்தில் இந்த வசனம் இவ்விதமாக இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக, புழுக்கமாக இருந்தால் நான் சட்டையை அவிழ்த்துவிட்டு வாக்கிங் போவேன். நீ போவாயா? என்று அது மாற்றப்படுகிறது.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">தமிழில் ஜேம்ஸ்பாண்ட் படம், போர்டில் ஒரு குறிப்பிட்ட வகைக் குருவி, ஆற்றுக்குள் வீழும் கார், ஸ்கை டைவிங், மூத்திரம், ஆத்திரம் என்று எத்தனை எத்தனை பரிசோதனைகள் இந்தப் படத்தில் முயலப்படுகின்றன பாருங்கள்! இதெல்லாம் உங்களால் ஆகுமா, என்னால் ஆகுமா? தமிழன்னைக்குத்தான் எத்தனை பூரிப்பு!</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இதேமாதிரிதான் பாலச்சந்தர் ஒரு சோதனை முயற்சியில் ஈடுபடுகிறார். அதுகாறும் சீரியசான நாயகனாகவே நடித்து வந்த ரஜினிகாந்த்தை காமடி நடிகராக நடிக்க வைத்தால் என்ன என்று! அதற்கென்று சொந்தமாக ஸ்க்ரிப்ட் எதையும் முயலாமல் ஹிந்தியில் அமோல் பலேகர் நடித்து வெளியாகியிருந்த கோல்மால் என்கிற படத்தை அப்படியே தமிழில் எடுக்கிறார். இந்த சோதனை முயற்சி பெரிய வெற்றியைப் பெறுகிறது. அதாவது ரஜினிக்கு காமெடி பிரமாதமாக வருகிறது என்பது இதன்வாயிலாக மற்றவர்களுக்கும் தெரிய வருகிறது. இதற்கு பல வருடங்கள் கழித்தே ராஜசேகர் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் காமெடி கலந்த பாத்திரத்தில் ரஜினியைக் கொண்டுவருகிறார். இதைத் தொடர்ந்தே ரஜினி என்றால் கண்டிப்பாக காமெடி பண்ணித்தான் ஆகவேண்டும் என்கிற நிலைப்பாட்டை அவருக்கான கதாசிரியர்கள் எட்டுகிறார்கள். இந்தச் சூழலில் காமெடியே பண்ணாத ரஜினியை ஏன் திரும்பவும் முயலக்கூடாது என்று சுரேஷ் கிருஷ்ணா பாட்ஷா என்று ஒரு பரிசோதனை முயற்சி செய்து வெற்றி காண்கிறார்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">தமிழின் இன்னொரு மிக முக்கியமான பரிசோதனை முயற்சி விஜயடீராஜேந்தர் செய்தது. ஒரே ஆள் ஒன்பது வேடத்தில் நடிக்க முடியுமானால் ஒரே ஆள் ஒரு படத்தில் ஒன்பது வேலைகளை ஏன் செய்ய முடியாது என்கிற கேள்வியை அவர் பார்வையாளனை நோக்கி வீசுகிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, நடிப்பு, இயக்கம் என்று சகலவிதமான பணிகளையும் அவரே செய்து அசத்துகிறார். தாடியை எடுக்க விருப்பமில்லாததால்தான் அவரது பரிசோதனைகள் நீள்கின்றன. சோ ஒருமுறை சொன்னார். உனக்கு எது தெரியாதோ அதில்தான் நீ பெரிய ஆளாக முடியும் என்று. அது இப்போது ஞாபகம் வருவதற்கும் விடிஆருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">அவரது அடுத்த அவதாரமாக வருகிறார் எஸ்ஜேசூர்யா! ஆறு வயது பாலகன் வாலிபன் போன்ற தோற்றத்தை அடைந்துவிட்டால் என்ன நடக்கும் என்று அவர் யோசிக்கிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு மிக முக்கியமான ஒற்றுமை உண்டு. அடிப்படையில் தங்களை அவர்கள் இயக்குனர்கள் என்பதாக நம்புவதனாலோ என்னவோ, தாங்கள் நடிக்கும் ஒவ்வொரு காட்சியிலும், கோர்ட்டில் யுவர்ஆனர் என்று அவ்வப்போது ஜட்ஜைப் பார்த்துக்கொள்ளும் வக்கீல் போல இவர்கள் தவறாமல் கேமராவைப் பார்ப்பார்கள். தங்கள் பரிசோதனை சரியாகத்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறதா என்கிற ஐயப்பாடோ ஏதோ!</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">தமிழில் பரிசோதனை முயற்சி என்று ஆரம்பித்துவிட்டு இந்தமாதிரி ரகளை பண்ணிக்கொண்டிருக்கிறாயே என்று உங்கள் ஆன்மா இப்போது ஒரு கேள்வி கேட்குமானால் நான் இதோடு இந்தப் பட்டியலை நிறுத்திக்கொள்கிறேன். என்ன செய்வது? எம் மொழியில் இவைதான் பரிசோதனைகள்!</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">பாடலே இல்லாத படம் என்பதுகூட ஆபத்தானதொரு பரிசோதனை என்பதாகவே எமது மொழியில் காண்கிறது. ஙே என்று இருக்கும் உதவி இயக்குனரை ஹீரோவாக்கலாம் என்று யோசிப்பதுகூட ஒரு பரிசோதனைதான் எமது இயக்குனர்களுக்கு! பாவாடையின் உயரத்தை எவ்வளவு உயர்த்தலாம் என்பதாகக்கூட இங்கே பரிசோதனைகள் நிகழ்ந்தவண்ணமே இருக்கின்றன. கவர்ச்சி நடிகையை கண்ணியமான அண்ணியாக நடிக்க வைப்பதோ மிகப்பெரிய பரிசோதனையாகப் புகழப்படுகிறது. இப்படித்தான் கமலஹாசன்கூட மைக்கேல் மதனகாமராசன் படத்தில் மலையாள ஜெயபாரதியை அம்மாவாக நடிக்க வைத்து ஒரு பரிசோதனை செய்து பார்த்தார். பயங்கரமான ஃபெய்லியராக அது முடிந்துவிட்டது. ஏனென்றால் பார்வையாளனுக்கு ஜெயபாரதியை அம்மா வேஷத்தில் பார்த்தால்கூட ஆசையாகத்தான் இருக்கிறது. அவரது வாளிப்பான உடலமைப்பு அத்தனை அலாதியானது. இதனால்தான் அவர் பிற்பாடு வந்த எந்தத் தமிழ்ப்படத்திலும் அம்மாவாக அகப்படவேயில்லை.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">பரிசோதனை என்றால் உண்மையில் என்ன? இந்தத் தொடரில் முன்பே ஒருமுறை சொன்னதுபோல எம்மெஃப் உசேனின் கஜகாமினி ஒரு பரிசோதனை முயற்சி. கன்னடத்தில் கிரீஷ் கார்னாட்டின் நாகமண்டலம் ஒரு பரிசோதனை முயற்சி.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">கிராமப்புற பழமரபுக்கதையிலிருந்து உருவான நாகமண்டலம் மிக ஆச்சரியமான பரிசோதனை. திருமணம் செய்து கொண்டு வந்த பெண்ணை வீட்டிலேயே அடைத்து வைக்கிறான் கணவன். அவள் நாக தெய்வத்தை வேண்டுகிறாள். நாகமோ அவளது கணவனது ரூபத்தை எடுத்து அவளை ஆட்கொள்கிறது என்று போகிறது கதை. இந்தமாதிரி நமது புராணங்களிலும் இதிகாசங்களிலும் எத்தனையெத்தனை கதைகள் காண்கின்றன! புதிதாக ஒன்றை யோசிக்க வேண்டாம். இருக்கிற பொக்கிஷத்திலிருந்து ஒன்றை எடுக்கக்கூடவா தெரியவில்லை உங்களுக்கு? அடப்பாவிகளா.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">மலையாள இயக்குனர்களில் நான் பெரிதும் மதிக்கும் பத்மராஜனின் கடைசிப்படம் ‘ஞான் கந்தர்வன்’. நான் கந்தர்வன் என்பது அர்த்தம். கந்தர்வர்கள் குறித்த புராண நம்பிக்கையிலிருந்து இந்தப் படத்தை அவர் எழுதுகிறார். கந்தர்வர்கள் கல்யாணமாகாத கன்னிப் பெண்களை மயக்கி முயங்கிவிட்டு காணாமல் போய்விடுவார்கள் என்பது பாட்டிகள் பேத்திகளுக்குச் சொல்லும் பொதுவான எச்சரிக்கைக் கதை. கன்னிப்பெண்கள் தனியாக இருக்கக்கூடாது. இரவில் வெளியே போகக்கூடாது என்பதாகவெல்லாம் கந்தவர்களைக் காட்டியே எச்சரிக்கப்படுகிறார்கள். இந்த மாதிரி கதைகள் கேட்டு வாழும் ஒரு தற்கால இளம்பெண்ணின் வாழ்வில் கந்தர்வன் நுழைகிறான். அவளைக் காதலித்து அவளைப் புணர்ந்துவிட்டு சென்றுவிடுகிறான். இவ்வாறு நிகழ்ந்ததெல்லாம் அந்தப்பெண்களுக்கு அப்புறம் நினைவிராது என்பதே பாட்டி கதையின் சூத்திரமும்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">உண்மையில் கந்தர்வர்கள் என்றால் யார்? கந்தர்வர்கள் தேவலோகத்தின் அடிமைகள். இசை நாட்டியம் என்று தேவர்களை மகிழ்விப்பதே அவர்களின் வேலை. தேவர்களுக்கு எதிராக இவர்கள் ஏதேனும் செய்ய முற்பட்டால் இவர்கள் சபிக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்படுவார்கள். சாபம் விமோசனமாகவேண்டுமானால் அவர்கள் ஒரு பூலோகத்துக் கன்னிப் பெண்ணை மயக்கி வசப்படுத்தவேண்டும். இது கந்தர்வனின் பிரச்சினை. இந்தப் படத்தில் கந்தர்வன் வேடத்துக்கு பத்மராஜன் தேர்ந்தெடுத்தது, தூர்தர்ஷனில் வந்த மகாபாரதத்தில் கிருஷ்ணனாக வந்த நிதீஷ் பரத்வாஜை!</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">நவயுகத்தில் கந்தர்வனின் விசிட் எவ்விதமாக இருக்கும் என்கிற அவரது கற்பனைமிக நுட்பமான ஒரு பரிசோதனை. அந்த மாதிரி மேதைகளை எமது மொழியில் எங்கேபோய்த் தேட?</span>சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8130572.post-87543044933040203802009-05-26T13:49:00.002+05:302009-05-26T13:55:45.366+05:30எது சினிமாவுக்கான கதை?<span style="font-size:85%;">முதற்கண் இந்தக் கேள்வியை எதிர்கொள்ளும்போதே ஒரு முக்கியமான விஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. சினிமா என்பதற்கு கதை என்பது அத்யாவசியமானது என்பதே அது! இல்லையானால் இந்தத் தலைப்பு எது சினிமா என்பதாக இருந்துவிடும். ஆனால் சினிமாவுக்குக் கதை என்பதாக ஒன்று அவசியம் என்பதை பெரும்பாலும் எமது சினிமாக்கள் ஏற்றுக்கொள்வதேயில்லை என்பதே கொடுமை!</span><br /><br /><span style="font-size:85%;">பெரும்பாலான எம்ஜியார் படங்கள் ஒரே கதையிலானவை. பெரும்பாலான ரஜினிகாந்த்தின் படங்கள் ஒரே கதையிலானவை. பெரும்பாலான தமிழ் சினிமாவின் முக்கியஸ்தர்களின் கதைகள் இவ்விதம் ஒரேவிதமானவை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இயக்குனர் ஷங்கரையே எடுத்துக்கொண்டால், தவறு நிகழ்கிறது. தட்டிக்கேட்க ஒரு அவதார புருஷன் வருகிறான். அனைவரும் அவனைக்கண்டு அஞ்சி திருந்துகிறார்கள் என்பதுமாதிரியான அமைப்பில் கிட்டத்தட்ட ஐந்து படங்கள் கொடுத்துவிட்டார் அவர். இதைத்தான் ஒரே கதை என்று சொல்கிறேன். முதல்வன் படத்தில் முதல்வனாவது கதை, இந்தியன் படத்தில்கிழவன் நீதி வழங்குவது கதை, சிவாஜி படத்தில் 'ஆஃபீஸ் ரூமுக்கு' கூட்டிப்போய்த் திருத்துவது கதை என்று கதையைப் பார்க்கக்கூடாது. இப்படிப் பார்க்கிற பழக்கம் நமக்கு இருப்பதனால்தான் இவ்விதமாக ஒரே கதையை திரும்பத் திரும்ப நாம் எதிர்கொள்ள வேண்டியிருப்பதும், ஒரே விதமாக இயக்குனர்கள் எடுக்கத் துணிவதும் சாத்தியமாகிறது.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">ஒரு சினிமா என்றால் தனியாக அதற்குக் கதை என்பதாக ஒன்று வேண்டாமா? அவ்வாறல்லாமல் வெறும் காட்சிகளின் அடுக்குதான் சினிமாவா? இந்தக் கேள்விகளை நமக்குள் கேட்டுக்கொள்ளலாம். சாதாரணமாகவே அடிப்படையான புரிதல் ஒன்று அங்குமிங்குமாக அலைகிறது. சினிமாவுக்கு எதற்குப் போக வேண்டும்?பொழுது போவதற்கு. அப்படியானால் நல்லவிதமாகப் பொழுதைப் போக்கிக் கொடுப்பது நல்ல சினிமாதானே! -இந்தப் புரிதல்தான் சினிமா கேடுகெட்டுப் போவதற்கான அஸ்திவாரம். சினிமா என்ன டைம்பாஸ் கடலையா? வாணலியில் கொஞ்சம் மண்ணைப் போட்டு நாலுதிருப்பு திருப்பினால் சாப்பிடுகிற அளவுக்கு கரகரப்பாக ரெடியாவதற்கு? சினிமா என்பது பெரும் உழைப்பு! அதை வெறும் பொழுபோக்கு சாதனமாகப் பார்க்க நினைப்பது அதற்கு நாம் செய்யும் அப்பட்டமான துரோகம்!</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">மேற்கண்ட கண்ணோட்டமே சினிமா வெறும் காட்சி அடுக்குகளாக சிந்திக்கப்படுவதன் அஸ்திவாரமாக இருக்கிறது. சினிமாவில் கதையைக் காட்சியாகவே வெளிப்படுத்த முடியும் என்பதனாலேயே சினிமாவில் காட்சிகள் அமைக்கப்படவேண்டுமே தவிர, வெறும் ரஸமான காட்சிகளை அடுக்கினால் அது நல்ல சினிமாவாக மாறிவிடும் என்று கனவிலும் எண்ணுவது கயமைத்தனம்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">சரி, சினிமாவுக்கான கதை எது? இதற்கான விடை மிகவும் சுலபமானது. நான்கு சண்டைக் காட்சிகள், மூன்று சேஸிங் காட்சிகள், ஐந்து பாடல் காட்சிகள் -அதில் ஒன்று குத்தாட்டம், மற்றது ரீ மிக்ஸ் என்பதாக எது வழிவிட்டுத் தருகிறதோ அதுதான் நல்ல சினிமாவுக்கான கதை!</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இன்றைக்கும் நடைமுறையில் உள்ள இந்தக் கூற்றை உங்கள் அந்தராத்மாவிலிருந்து உங்களால் ஒப்புக்கொள்ள முடியுமா?</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">சினிமாவுக்கான கதை என்பது இது அல்ல. ஏன், இது கதையே அல்ல. ஏனென்றால் சினிமாவுக்கான கதை என்பதாக இந்த உலகில் தனியாக எதுவும் இல்லை. எல்லாமே சினிமாவுக்கான கதைதான்! அது எவ்விதமாகத் திரைக்கதையாக்கம் பெறுகிறது என்பதே சினிமாவின் விதியை நிர்ணயிக்கக்கூடியதாக இருக்கிறது.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">பொதுவாகக் கதை என்பது இந்தப் பரந்த வெளியெங்கும் கொட்டிக் கிடக்கிறது. வெறும் எழுத்தில் அந்தக் கதையை வார்க்கும்போது அது சிறுகதையாகவோ நாவலாகவோ ஆகிறது. காட்சி ரூபமாக ஒன்றைச் செதுக்கிக் காட்டும்போது அது நாடகமாகவோ சினிமாவாகவோ மாறிவிடுகிறது. ஒரு சினிமாவின் கதை நன்றாக இருக்கிறதா மோசமாக இருக்கிறதா என்பது ஒரு பிரச்சனையே அல்ல. ஏனென்றால் பார்வையாளனின் பார்வையில் ஒரேவிதமான கண்ணோட்டம் ஒருபோதும் சாத்தியமே அல்ல. பார்வையாளன் ஒவ்வொருவனும், மத இன மொழி பிராந்திய தேசியப் பாகுபாடுகளோடுதான் தன் மனத்தை உருவாக்கி வைத்திருக்கிறான். அது சொல்வதே அவனுக்கு வேதம். ஒரு படத்தின் இயக்குனர் சொல்வதை அவன் பெரும்பாலும் பொருட்படுத்துவதேயில்லை.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இப்படியெல்லாம் நடக்குமா என்று கேள்வியெழுப்பப்படும் கதையொன்றும், ரொம்ப பிராக்டிகலான கதையாக இருக்கிறது என்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் கதையொன்றும் வேறு வேறு அல்ல. ஏனென்றால் ஒவ்வொரு கதையும் அதனளவில் ஒரு சாத்தியத்தை முன்னிறுத்துகிறது. திரைக்கதையே செய்ய முடியாத கதை என்பதாக ஒன்று இந்த உலகில் இல்லவே இல்லை.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">ஒரு நல்ல கதை என்பது, நாயகனையோ நாயகியையோ காமெடியனையோ வில்லனையோ பாட்டையோ ஆட்டத்தையோ பொருதலையோ கோருவதேயில்லை. அது ஒரு சாத்தியத்தையே கோருகிறது. அந்த சாத்தியத்தின் முனைப்பில் ஊடாடுபவையாக இவற்றில் சில இருக்கலாம், சில இல்லாமல் போகலாம்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">ஒரு தப்பெண்ணம் கூட கதையாக இருக்கலாம்; ஒரு தறுதலை மனோபாவம் கூட ஒரு கதையாக இருக்கலாம்; ஒரு விரக்தியோ ஒரு இழப்போகூட கதையாக மாறலாம். அதற்கென்று தனியாக எந்த வரையறையும் கிடையாது. ஆனால் அது நிஜமான ஒன்றாக இருந்தால்தான் அது பார்வையாளனின் நெஞ்சில்போய்த் தைக்கும் என்பதை மட்டும் மறந்துவிடக்கூடாது.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் பரதன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்த காற்றத்தே கிளிக்கூடு என்கிற படத்தின் கதை ஒரு தப்பெண்ணம்! சந்தோஷமான ஒரு குடும்பம். கல்லூரி ஃபுரபசரான பரத்கோபியும் ஸ்ரீவித்யாவும் தம்பதிகள். அவர்களின் சந்தோஷ வாழ்க்கைக்கு சாட்சியாக மூன்று பெண் குழந்தைகள், கடைசியாக ஓர் ஆண் குழந்தை. பக்கத்து வீட்டுக்கு ஒரு பெண் வந்து சேர்கிறாள். அது ரேவதி. அவள் பரத் கோபியின் கல்லூரியில் யூஜியில் சேர்கிறாள். பரத்கோபியிடம் ட்யூஷனிலும் சேர்கிறாள். பரத்கோபியின் வீட்டை, தன் காதலனும் அதே கல்லூரியில் ஃபிசிகல் டைரக்டராக இருப்பவனுமான மோகன்லாலை சந்திக்க உபயோகித்துக்கொள்கிறாள். அடிக்கடி ஸ்ரீவித்யாவை வந்து சந்திக்கும் மோகன்லால் மனத்தில் என்னதான் இருக்கிறது என்பதாக ஒரு தவிப்பு நமக்கு ஏற்படும்போது அவளைத் தன் இறந்துபோன அன்னையைப்போலப் பார்ப்பதாக அவன் தன்னிலை விளக்கம் அளிக்கிறான்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">ஆனால் அவர்களின் அன்னியோன்னியம் குறித்த எதிர்மறையான எண்ணம் ரேவதியின் மனத்தில் எழுகிறது. இதுவரைக்கும் கதை நமது பக்கத்து வீட்டுக் கதையாக இருக்கிறது. கல்லூரி வாசலில் மோகன்லாலைக் கோபத்தோடு தவிர்த்துவிட்டு பரத் கோபியின் காரில் லிஃப்ட் கேட்கிறாள் ரேவதி. வழியெல்லாம் அழுதுகொண்டே வருபவளிடம் கோபி காரணம் கேட்கிறார். அவள் கோபியிடம் மோகன்லாலுக்கும் ஸ்ரீவித்யாவுக்கும் உள்ளதாக அவள் நம்பும் கள்ள உறவைப்பற்றி சொல்லப்போகிறாள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அவள் சொல்கிறாள், கோபியோடு தான் பழகுவதும் அவன் வீட்டுக்கு டியூஷனுக்கு வருவதும் மோகன்லாலுக்குப் பிடிக்கவில்லை என்பதாக! அதைத் தொடர்ந்து அவள் சொல்கிறாள், என்னைவிட கோபி முக்கியமா என்று அவன் கேட்டபோது நான் ஆமாம் என்று சொன்னேன், ஏனென்றால் நான் உங்களைக் காதலிக்கிறேன் என்று!</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">முதலில் இது சிறுபிள்ளைத்தனமானது என்று நினைக்கும் பரத்கோபி கொஞ்சம் கொஞ்சமாக அவளது பேச்சை நம்பி அவளோடு பீச், ரெஸ்டாரண்ட் என்று சுற்ற ஆரம்பிக்கிறார். உண்மையில் அவள் ஒரு சிறுமி, தன் காதலனைப் பழிவாங்க நினைத்து தன்னிடம் ஆபத்தை உணராமல் இவ்விதமாகப் பழகிக்கொண்டிருக்கிறாள் என்பது கோபிக்குப் புரிவதேயில்லை. கோபியின் மாற்றம் வீட்டில் புயலை வீச வைக்கிறது. படத்தின் டைட்டில் இங்குதான் பொருந்துகிறது, காற்றில் ஒரு கிளிக்கூடு! காற்று என்பது புயலுமல்ல, தென்றலுமல்ல, சும்மா ஒரு போக்குக் காற்று!</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">தன் குடும்பத்தோடு பிணங்கி லாட்ஜ் அறையில் தங்கியிருக்கிறார் புரபசர் கோபி. குழந்தைகளோடு ஃபோன் செய்து பேசுகிறார். மனைவி மக்கள் என்று எல்லோரும் இருந்தும் தானோர் அனாதை போல மாறிவிட்டதை அப்போது அவர் உணர்கிறார். மனைவியின் அவசியம் அவருக்குப் புரிகிறது. இதைத் தொடர்ந்து புரபசர் மனைவியைத் தேடிப் போவார் என்பதாக நீங்கள் எதிர்பார்க்கலாம். அவரோ ரேவதியை அறைக்குக் கூட்டி வருகிறார். எனக்குத் துணை வேண்டும் என்று அவள் கையைப் பிடிக்கிறார்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இப்போது ஆபத்தின் மெல்லிய கோடொன்று ரேவதிக்குப் புரிபடுகிறது. அவள் எதையும் செய்துவிடுமுன்பாக மோகன்லால் அங்கு வந்துவிடுகிறான். கோபியின் முன்னிலையில் அவளை அடிக்கிறான். அவள், கோபியின் மனைவிக்கும் உனக்கும் உள்ள பந்தம் மட்டும் நியாயமா என்று கேட்கிறாள். இப்போது இடி விழுவது கோபியின் தலையில். அது உண்மையல்ல என்றதும் காதலர்கள் இயல்பாகவே ஒன்று சேர்ந்துவிடுகிறார்கள். அன்றிரவு தன் முட்டாள்தனத்தை நொந்துகொண்டு நன்றாகக் குடித்து போதையில் இருக்கும் கோபியை அவனது வீட்டில் கொண்டு சேர்க்கிறான் மோகன்லால். கிளிக்கூடு போக்குக் காற்றிலிருந்து தப்பிவிடுகிறது.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இப்படியாக ஒரு சிறுமியின் தப்பெண்ணம் இந்தக் கதையாக மாறுகிறது. இதில் கேரக்டர் என்பதன் அவசியம் பிரதான பங்கு வகிக்கிறது. கதை, பாத்திரங்கள் இவையே இந்தப் படத்தின் முக்கிய அம்சங்களாகக் காண்கின்றன. ஒரு ஹீரோவையோ, ஹீரோயினையோ வில்லனையோ காமெடியனையோ இந்தக் கதை கோரவில்லை. மலையாளத்தில் பெரும் வெற்றியைப் பெற்ற படம் இது. ஒரு நல்ல நாவலைப் படித்த உணர்வையே இந்தப் படம் பார்வையாளனின் நெஞ்சில் விதைக்கிறது. இந்த மாதிரி கதையை நேர்மையாக எடுத்துக் கொடுத்த படங்கள் தமிழ் சினிமாவில் எத்தனை காண்கின்றன என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">மகேந்திரனின் உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் ஆகிய படங்கள் நாவலைத் திரைக்கதையாக்கம் செய்யப்பட்டவை என்பதனால் நேர்மையாகவே அவற்றில் கதை என்பதாக ஒன்று மைய இழையாக இருக்க நேர்ந்தது. அதோடு கதையோடு பாத்திரங்களின் சித்தரிப்பும் முக்கியத்துவம் பெறும்போது ஹீரோயிசம் என்பதாக ஒன்றின் அவசியம் இந்தப் படங்களில் இல்லாமல் போயிற்று. தங்கப்பதக்கம் எனும் 'சினிமா'வுக்கு வசனம் எழுதும்போது ஹீரோவுக்கான வசனங்களையே எழுத நேர்ந்த மகேந்திரன், நல்ல நாவலைத் திரைப்படமாக்கும்போது தன் நிஜமான தரத்தை நமக்குக் காட்டினார். இதற்குக் காரணம் மகேந்திரன் முதலானவர்கள் தரமான உலக சினிமா இயக்குனர்களின் பார்வையில் சினிமாவைப் பார்த்தவர்கள். சத்யஜித்ரேயின் வெற்றிக்குப் பின்னாலும் நாவல்களிலிருந்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களே உள்ளன என்பதை நாம் மறந்துவிடலாகாது.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இதனால் நாவலிலிருந்துதான் சினிமா உருவாகவேண்டும் என்பதாக நான் சொல்வதாகஎடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. உங்களுக்குக் கதைப் பஞ்சம் இருந்தால் உங்கள் மொழியில் ஏதாவது நல்ல நாவல்கள் இருக்கின்றனவா என்று வாசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்று வேண்டுமானால் நான் சொல்லலாம். காப்பியடிப்பதற்கல்ல, ஒரிஜினல் ரைட்டரின் அனுமதியோடு திரையாக்கம் செய்வதற்கு. அதற்கும் உங்களுக்கு விருப்பமில்லையானாலும் பாதகமில்லை. நல்ல நாவல்களைப் படிக்கும் வகையில் நல்ல கதை என்பது எப்படியிருக்கும் என்கிற போதத்தையாவது நீங்கள் எட்ட முடியுமல்லவா, அதன் வாயிலாக நீங்களே நல்ல கதைகளை எழுத முடியாது என்பதுதான் என்ன நிச்சயம்?</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">திரும்பத்திரும்ப ஒரே மாதிரியாக வந்துகொண்டிருக்கும் சினிமாக்களைப் பார்ப்பதன் வாயிலாகவும் உலக சினிமாக்களை டிவீடியில் போட்டு காட்சிகளையும் ஷாட்டுகளையும் சுடுவதன் வாயிலாகவும் நீங்கள் வாழும் துறையின் அந்தராத்மாவை நசுக்கிக்கொண்டிருக்கும் அவலத்திலிருந்தாவது உங்களுக்கு ஒரு நல்ல விடியலாவது கிடைத்துவிடாதா என்ன!</span>சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8130572.post-40217052786751861882009-05-20T16:05:00.002+05:302009-05-20T16:08:56.895+05:30நாடகமும் சினிமாவும் லேயர்களும்<span style="font-size:85%;"></span><br /><p><span style="font-size:85%;">சில வருடங்களுக்கு முன்பு கேரளத்திலிருந்து வந்த நாடகக்குழுவொன்று கோவையில் சில நாடகங்களை நிகழ்த்தியது. நம்மூரில் ஆரெஸ் மனோகர் கையாண்டதைவிடவும் அதிகமான தொழில்நுட்ப சாத்தியங்களை அந்தக் குழு கையாண்டது. அந்த நாடகங்கள் அனைத்தும் மாயாஜாலங்கள் நிறைந்தவை என்பதனால் அவற்றில் ஆச்சரியமான காட்சிகள் பலவும் நிறைந்திருந்தன. எதிர்பாராத விதமாக மேடையில் ஒரு விமானம் தரையிறங்கும், கார் வந்து நிற்கும், பதினைந்தடி உயர பூதம் தோன்றும். இது எல்லாம்கூடப் பரவாயில்லை, மேடையின் இடது மூலையில் நாயகியோடு பேசிக்கொண்டிருக்கும் நாயகன் ஒரே ஒரு வினாடி விளக்கணைந்து எரிந்ததும் வலது மூலையில் வேறொரு காஸ்ட்யூமில் வேறொருவரோடு காணப்படுவான். இப்படி ஏகப்பட்ட ரகளைகள்!</span></p><p><span style="font-size:85%;">சாதாரணமாக நாடகம் என்பதை சிங்கிள் லேயர் என்றுதான் குறிப்பிடலாம் என்றபோதும் இந்தமாதிரியான அவசியங்களும் உழைப்பும் உள்ள நாடகங்கள் சிங்கிள் லேயரில் சாத்தியப்படுவதில்லை. மேடையிலேயே திரையின் அவசியமும் ஏற்படும்போது இரண்டாவது லேயர் தானாகவே நுழைந்துவிடுகிறது. மூன்று அரங்கங்கள் கொண்ட ரிவால்விங் ஸ்டேஜ்கூட பல நாடகங்களில் பயன்படுத்தப்பட்ட உத்தி. இந்த உத்தியில் விளக்கணைந்து எரிவதற்குள் மேடை சுழன்று அடுத்த செட்டை அந்தக் காட்சிக்கான நடிகர்களோடு முன்னால் கொண்டுவந்து நிறுத்திவிடும். இருந்தாலும் நாயகன் இந்தக் கடைசியிலிருந்து வேறு ஒரு காஸ்ட்யூமில் அந்தக் கடைசியில் நிற்பது எவ்விதம் சாத்தியம்? இது எப்படி என்று கட்டுரை முடியும் வரைக்கும் யோசித்துக்கொண்டிருங்கள் என்று சுஜாதா மாதிரி அபத்தமாக நான் சொல்லப்போவதில்லை. உடனடியாகக் கடைசியில் போய்ப் படித்துவிடுவீர்கள் என்பதனால் அந்த உத்தியை இங்கேயே விளக்கிவிடுகிறேன்.</span></p><p><span style="font-size:85%;">கதையின் நாயகனாக நடித்தது ஒருவர் அல்ல, ஒரே மாதிரியான தோற்றமுடைய இரட்டைச்சகோதரர்கள். ஷங்கர் படம் பார்ப்பதுமாதிரி நாடகம் பார்த்து முடியும் வரைக்கும் மேடையில் விரியும் ஆச்சரியங்களுக்கு மத்தியில் நம்மால் இதை ஊகிக்கவே முடியாது என்பதே நாடகத்தின் வெற்றி. சரி, அதற்கென்ன இப்போது என்கிறீர்களா? சரி, விஷயத்துக்கு வருவோம்!</span></p><p><span style="font-size:85%;">நாடகத்தைப்போலவே சினிமாவும் வெகுகாலம் சிங்கிள் லேயரில்தான் எடுக்கப்பட்டு வந்தது. சிங்கிள் லேயரில் மட்டுமல்ல, சிங்கள் ஆங்கிளில் முடிகிற காட்சிகளாகவே ஆரம்பகாலத்துத் தமிழ்ப் படம் எடுக்கப்பட்டது. என்னுடைய தந்தை என்னெஸ்கேயிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிவர். பணம் படத்தின் ஷூட்டிங்கின்போது என்னெஸ்கே காமராமேனுக்கு நல்கிய கட்டளையொன்றை அவர் வெகுகாலம் சொல்லிக்கொண்டிருந்தார். கேமராமேன் இந்த ஷாட்டை பேன் செய்யலாமா என்று கேட்டால் என்னெஸ்கே சொல்வது இதுதான், "கேமராவுக்கு இந்தப்பக்கம் ஒரு ஆணி அடி, அந்தப்பக்கம் ஒரு ஆணி அடி! அப்படி இப்படி நகரக்கூடாது! ஆமாம்!" கேமராவைத் திருப்புவதற்கே இத்தனை தடைகள் என்றால், பிற்காலத்தில் சினிமா லேயர்களால் நிறையப்போகிறது என்பதை என்னெஸ்கே எப்படி அறிந்திருப்பார்?</span></p><p><span style="font-size:85%;">சரி, அது என்ன லேயர்கள் என்று கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். கிராமங்களில் வருஷா வருஷம் பொங்கல் வந்தால் போதும், வீட்டுக்கு சுண்ணாம்பு பூசி விடுவார்கள். வீட்டின் சுவர் எத்தனை பொங்கலைப் பார்த்ததோ அத்தனை லேயர் சுண்ணாம்பு அதன்மீது படிந்திருக்கும். சுரண்டிப்பார்த்தால் அடுக்கடுக்காக வந்துகொண்டேயிருக்கும். இந்த லேயரையா நான் சொல்கிறேன்? அல்லது காய்ச்சிய பாலின் மீது படிகிறதே ஆடை, அதுவும்கூட ஒரு லேயர்தானே, அதையா நாம் பேசுகிறோம்? ஸ்ட்ரிப்டீஸ் என்பதாக ஒவ்வொரு ஆடையாக அவிழ்த்துப்போடுகிறாளே ஆட்டக்காரி, அந்த ஒவ்வொரு ஆடையும்கூட ஒவ்வொரு லேயர்தானே? அதைப்பற்றிக்கூட விவாதிக்கலாமே!\</span></p><p><span style="font-size:85%;">இப்படி பல வகையான லேயர்கள் உலவினாலும், கம்ப்யூட்டர் வந்த பிறகு லேயர் என்பது பல பயன்பாடுகளிலும் முக்கியத்துவம் வகிக்கும் தவிர்க்க இயலாத தொழில்நுட்ப வசதி. ஓவியனொருவன் கையால் திரைச்சீலையில் படம் வரையும்போது ஒவ்வொரு வண்ணமாக வரைந்துகொண்டு வருகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவைதனித்தனி லேயர்கள். ஆனால் கையால் வரையும் ஓவியத்தில் லேயர்கள் பிரித்தெடுக்க முடியாதவை. மென்பொருள் கொண்டு வரையும் ஓவியத்தில் லேயர்கள் தனித்தனியே இருக்கின்றன. இதனால் பிற்பாடு வேண்டாததை மறைத்துக்கொள்ளக்கூடிய வசதி உண்டாகிறது.</span></p><p><span style="font-size:85%;">இசையில் ஆதிகாலத்தில் ஸ்பூலில் ஒரே ட்ராக்காகப் பதிவு செய்ததெல்லாம் போயே போய், மல்டிபிள் ட்ராக்குகளில் தனித்தனியே பதிவு செய்யப்பட்டு, இசை பிற்பாடு கோர்க்கப்படுவதைப்போல, ஆவிட் முதல் எஃப்சிபீ வரையிலான எடிட்டிங் முறைகள் நுழைந்த வகையில் சினிமா எடிட்டிங் நான்லீனியரானபோது ஆப்டிகல் எஃபக்ட்ஸ் என்பதன் அந்திமக் காலம் தோன்றி லேயர்களின் துவக்கம் ஏற்படத் தொடங்கியது. லேயர்கள் மட்டும் இல்லையென்றால் டைட்டானிக் படத்தின் கப்பல் புறப்படும் காட்சியை எடுப்பதற்கு இன்னும் பல கோடிகள் செலவு செய்திருக்கவேண்டும் என்பதாக ஜேம்ஸ்காமரூன் கண்டிப்பாக ஏதாவதொரு பேட்டியில் சொல்லியிருப்பார்.</span></p><p><span style="font-size:85%;">டைட்டானிக் முதலான பீரியட் படங்கள், ஸ்டார் வார்ஸ் முதலான ஸயன்ஸ் ஃபிக்ஷன் படங்கள் என்று மிகைப்படுத்தப்படவேண்டிய காட்சிகளுக்காக உபயோகிக்கப்பட்ட இந்த லேயர்கள் இப்போது பல காரணங்களுக்காகவும் அவசியப்படுவனவாகவே உள்ளன.</span></p><p><span style="font-size:85%;">சாதாரணமாக தமிழ் சினிமாவில் இரட்டை வேடக் காட்சி வருகிறது என்று சொன்னால் ஆப்டிகல் எஃபக்ட் எனும் பழைய முறையில் இரண்டு பேருக்கும் நடுவில் அணுகமுடியாத இடைவெளி இருந்தே தீர வேண்டிய கட்டாயம் இருந்தது. அதை இந்த லேயர்களே உடைத்தெறிந்தன. தமிழில் இரட்டை வேடத்துக்காக முதன்முறையாக லேயர்உபயோகிக்கப்பட்டது ஷங்கரின் ஜீன்ஸ் படத்தில்தான் என்று நினைக்கிறேன். ஜீன்ஸ், இந்தியன் ஆகிய படங்களுக்குப் பிறகுதான் இரட்டை வேடத்தில் நடிக்கும் நாயகர்கள் இருவராகவே தோன்ற ஆரம்பித்தார்கள். கையைக் குலுக்கிக்கொள்ளவும், கட்டிப்பிடித்துக்கொள்ளவும் அவர்களுக்கு வாய்ப்பு பெருகியது. இதன் அதிகபட்ச ரகளையாகத்தான் வெள்ளை ரஜினி என்று சிவாஜியிலும் பத்து கமல்கள் என்று தசாவதாரத்திலும் லேயர்களின் அதிகபட்ச ஆட்டமும் ஆடப்பட்டது. (வெறும் ஆப்டிகல் எஃபக்டில் நவராத்திரியில் இருந்த பர்ஃபெக்ஷன் தசாவதாரத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளில் இல்லாமற்போனதே ஆச்சரியமான கொடுமை!)</span></p><p><span style="font-size:85%;">இந்த லேயர்களின் எதிர்காலம் இரண்டு முக்கிய ஆர்ட்டிஸ்டுகளின் கால்ஷீட் ஒருமித்துக் கிடைக்காத நிலைமை ஏற்படும்போது பிரேக்டவுனுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கக்கூடும். உதாரணமாக அவள் அப்படித்தான் என்று ருத்ரையா இயக்கிய படத்தை எங்காவது கிடைத்தால் பாருங்கள், படத்தில் பெரும்பாலான ரஜினி கமல் காம்பினேஷன் காட்சிகள் தனித்தனி க்ளோசப்களாக எடுக்கப்பட்டு எடிட்டிங்கில் ஒட்டப்பட்டிருப்பதை அப்பட்டமாகக் கண்டுபிடிக்கலாம். அந்தக் காலத்தில் இந்த அயோக்கியத்தனம் ரொம்பவுமே பிரபல்யம். பார்வையாளனால் கண்டுபிடிக்க முடியாது என்கிற தீர்மானம் தருகிற தைரியம்!</span></p><p><span style="font-size:85%;">அப்போதைய சாத்தியம் அவ்வளவுதான், இப்போதோ லேயர்கள் வந்துவிட்டன. இதன் காரணமாக எதிர்காலத்தில் பத்துப் படங்களில் ஒருமித்து படுக்கையறைக் காட்சிகளில்கூட நடித்த ஒரு நடிகரும் நடிகையும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக்கொண்டதேயில்லை என்கிற நிலைப்பாடுகூட நேரலாம்.</span></p><p><span style="font-size:85%;">இது நல்லதற்கா கெட்டதற்கா என்று கேட்டால் கண்டிப்பாக கெட்டதற்குத்தான். தொழில்நுட்ப வளர்ச்சியைக் கலை உபயோகித்துக்கொள்வது தவறு என்று சொல்லவில்லை. அதிலும் சினிமா என்கிற, தொழில்நுட்பம் ஊடாடும் கலைத்துறை அதன் வளர்ச்சிநிலையை தொழில்நுட்பத்தின் வளர்ச்சியோடு ஒருமித்தே எய்த முடியும். ஆனால் தொழில்நுட்பத்தை அனாவசியமான காரணங்களுக்காக கையாள நேர்வதுதான் தவிர்க்கப்படவேண்டும் என்று நான் சொல்கிறேன். கால்ஷீட் என்பது உண்மையிலேயே பெரிய பிரச்சினைதான். அதற்காக நான் மேலே சொன்னபடி ஒருநிலைமை வந்துவிடாமல் தவிர்க்கவே இயலாதா என்பதையும் நாம் ஆராயவேண்டும்.</span></p><p><span style="font-size:85%;">அடிப்படையில் தாம் சார்ந்திருக்கும் கலை மீது கலைஞர்கள் அனைவருக்கும் மரியாதை இருக்க வேண்டியது அவசியம். ஒரு நாள் ஒரு நடிகர் ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தாகவேண்டும் என்றால் அந்த இடத்தில் அந்த நேரத்தில் காலந்தவறாமல் சென்று சேர்ந்தாகவேண்டும் என்கிற முனைப்பு அந்தக் காலமாக இருந்தால் என்ன, எந்தக் காலமாக இருந்தால் என்ன, ஒருபோதும் தேய்ந்துபடக்கூடாது.</span></p><p><span style="font-size:85%;">சமீபத்தில் ஒரு பிரபல வார இதழில் புதிய இயக்குனரொருவர் தன் படத்தில் நடிக்கும் புதிய குழந்தை நடிகனைப்பற்றி பேட்டி கொடுத்திருந்தார். அவனுக்கு எல்லா பாவங்களும் கச்சிதமாக வருகின்றன. மற்ற நடிகர்களோடு அவன் நடித்த காட்சி ஒன்றை ஷூட் செய்தபோது ரீ டேக் தேவைப்பட்டது. எடுத்த காட்சியை மானிட்டரில் பார்த்துவிட்டு அவன் கேட்டான், 'நீங்கள் சொன்னபடி நான் சரியாகத்தானே செய்திருக்கிறேன், மற்றவர்கள் தவறாக நடித்தால் அதற்காக நான் ஏன் திரும்பவும் நடிக்க வேண்டும்' என்று! இது ஒரு குழந்தைத்தனமான கேள்வி என்பதாக நீங்கள் நினைக்கலாம், என்னால் அப்படி எடுத்துக்கொள்ள முடியவில்லை. இப்போது யாருக்கும் கொஞ்சமும் பொறுமையில்லை. அதிலும் குழந்தைகள் மிக அதிகமாகவே அவசரப்படுவதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த இயல்பின் நீட்சியாக ஓர் உச்ச நடிகர் இதே கேள்வியைக் கேட்டால் இயக்குனரால் என்ன செய்ய முடியும் என்பதே எனது கேள்வி!</span></p><p><span style="font-size:85%;">இது நடைமுறைக்கு வந்தால் சினிமா திரும்பவும் செட்டுக்குள் சென்று ஒளிந்துகொள்ளும். பின்னணியில் மேட் விரித்துக் கீ செய்தே அத்தனை காட்சிகளும் ஷூட் செய்யப்படும் என்றெல்லாம் நான் அச்சுறுத்த விரும்பவில்லை. ஆனால் இப்படியொரு நிலை வந்து சேராது என்பது என்ன நிச்சயம் என்பதே எனது அச்சம்!</span></p><p><span style="font-size:85%;">இந்த லேயர்களின் உதவியால் கடற்கரையில் தாஜ்மஹாலைப் பார்ப்பது எளிதாகிறது. ஐஃபில் டவருக்குப் பின்னணியில் இரண்டு நிலவுகள் உதயமாவது சாத்தியமாகிறது. அதிரப்பள்ளி அருவிக்கு முன்னால் அருவி உயரத்துக்கு புத்தர் சிலை சாத்தியமாகிறது. சண்டைக்காட்சிகளில் பறந்து பறந்து தாக்குவது சாத்தியமாகிறது. பாடல் காட்சிகளில்கூட இதன் நீட்சி நிகழ்கிறது. இதெல்லாம் நல்லதற்குத்தானே என்று கேட்டால், நல்லதற்குத்தான், கதைக்குத் தேவைப்படும் வரையிலும்! கதைக்குத் தேவைப்பட்டால் கவர்ச்சி காட்டுவேன் என்று தொன்று தொட்டு சொல்லிச் சொல்லி நமது நடிகைகள் நையாண்டி செய்யப்படுவது உங்களுக்கு நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அதற்கு உங்களுக்குள்ளே இருக்கிற மேல் சாவனிஸ்ட்தான் பொறுப்பு! நான் சொன்ன இரண்டு நிலவுகளின் உதயம் தி ஹுக் படத்தில் இடம்பெறுகிறது. இரண்டு நிலவுள்ள கிரகமொன்றைக் காட்ட வேண்டிய நிலையில் இது தேவைதான். ஆனால் ஐஃபில் டவருக்குப் பின்னால் எதனால் இதன் தேவை எழவேண்டும்? இருநாள் உணவை ஏலென்றால் ஏலாயெனும் ஒளவைக்கிழவியின் ஆதங்கம்போல, இருக்கிறது என்பதற்காகத் திணிப்பதுதான் தவறு என்று நான் சொல்கிறேன். அதாவது கதைக்குத் தேவைப்பட்டால்தான் கவர்ச்சி காட்டலாம். தேவைப்படும்போதும் காட்டாமல் இருப்பதுதான் கொடுங்குற்றம். அதாவது லேயராக இருந்தாலும் சரி, லோயர் ஹிப்பாக இருந்தாலும் சரி, கதைதான் அதைத் தீர்மானிக்க வேண்டும்.</span></p><p><span style="font-size:85%;">சினிமா என்பது வெறும் தொழில்நுட்பமல்ல, அது ஒரு கலை என்பதை ஏற்கனவே இந்தத் தொடரில் பார்த்துவிட்டோம். தொழில்நுட்பத்தின் சமீபத்திய சாத்தியமான இந்த கிராஃபிக்ஸ் எனும் படிநிலை அறிவியலின் வழக்கப்படி சினிமாவை மேலும் சிக்கலில் கொண்டு சேர்க்கவே செய்யும் என்பதாகவே தோன்றுகிறது. இதை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம், சினிமா என்பது வெறும் அனுபவத்தால் மட்டுமே செய்யக்கூடியதாக இல்லாமல் தொழில்நுட்ப வல்லுனர்களால் உருவாக்கப்படுவதாக மாறிக்கொண்டிருப்பதால் முன்போல் படிக்காத மேதைகள் சினிமா கொடுக்கும் காலம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது என்பதாக எடுத்துக்கொள்ளலாம். இது எவ்வளவு தூரம் சரி?</span></p><p><span style="font-size:85%;">படிப்பைவிட பட்டறிவுதான் பெரியது என்பது சான்றோர் கூற்று! அது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, கலைத்துறை ஏதானாலும் அதற்குத் தவறாமல் பொருந்தவே செய்கிறது. வெறும் தொழில்நுட்ப அறிவைக்கொண்டு நல்ல சினிமாவை ஒருவரால் தரக்கூடிய காலம் உருவாகும்போது சினிமா கலைவடிவமாக இல்லாமல் வெறும் லேயர்களாக மாறிவிட்டிருக்கும். முன்னாலிருக்கும் லேயரை பின்னால் தள்ளலாம், பின்னாலிருக்கும் லேயரை முன்னால் கொண்டுவரலாம், இதன்வாயிலாக தரமான படமொன்றைத் தந்துவிடமுடியும் என்று சொன்னால் சினிமா கலைவடிவம் அல்ல என்று நான் ஏற்கனவே சொன்ன கூற்று திரும்பவும் மெய்ப்படவே செய்யுமே தவிர உருப்படியாக வேறு ஒன்றும் நிகழ்ந்திராது.</span></p>சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8130572.post-57376352921776917232009-05-08T13:46:00.002+05:302009-05-08T13:55:24.351+05:30கிரிக்கெட்டின் குடியைக் கெடுத்த சினிமா!<span style="font-size:85%;">இந்தக் கட்டுரையை ஒரு ரிலாக்ஸ் கட்டுரையாக எடுத்துக்கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்தையும், பார்க்கிற பார்வையே தீர்மானிக்கிறது என்கிற அடிப்படையில் எழுதிப்பார்த்த கட்டுரை இது. தலைப்பைப் பார்த்ததுமே கிரிக்கெட்டின் குடியை சினிமா எப்படிக் கெடுக்க முடியும் என்கிற கேள்வி எழுகிறதல்லவா? அந்த ஆர்வத்தின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">முதற்கண் முதல்தர கிரிக்கெட் போட்டி ஒன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது என்றால் திரையரங்குகளில் கூட்டம் குறையும் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். அதாவது சினிமாவின் குடியைக் கெடுத்த கிரிக்கெட் என்று குற்றஞ்சாட்டுவது பொருத்தமாக இருக்கும். ஆனால் கிரிக்கெட்டின் குடியை சினிமா கெடுப்பது எப்படி சாத்தியம்? அதிலும் ஒரு முக்கிய கிரிக்கெட் மேட்ச் உள்ள நாளில் தமிழ் சினிமாவில் அதி உயரத்தில் இருப்பவரான ரஜினிகாந்த்தின் புதிய திரைப்படம், ஏன், எதிர்வரப்போகிற ரோபோ வெளிவருகிறது என்பதாகவே வைத்துக்கொள்ளுங்கள். அன்றைக்கு அவரது ரசிகர்கள் வேண்டுமானால் திரையரங்குகளில் அலைமோதுவார்களே தவிர, சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு காலரியிலும் பிருஷ்டம் மோதாமல் உட்கார இடம் கிடைக்காது என்பதுதானே நிதர்சனம். அப்படியானால் எதை வைத்து இப்படி வாதாட முடிகிறது?</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">சரி, இரண்டொரு அத்தியாயங்களுக்கு முன்பாகச் சொன்னதுமாதிரி விளையாட்டுப் போட்டிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சினிமாக்களை எடுத்துக்கொள்வோம். இந்தியில் லகான், தமிழில் சென்னை 600028 ஆகிய படங்கள் கிரிக்கெட்டை முன்னிலைப்படுத்தியவை. இந்தப் படங்கள் கிரிக்கெட்டைக் கொலை செய்தன என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்ட முயல்வதா இந்தக் கட்டுரை? லகானையும்ஆறுலட்சத்து இருபத்தெட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் லகான் ஒரு குப்பை என்பது தெரியவரும். சும்மா ரகுமான் மத்தளங்களை அடித்துக் கொடுத்தால் மட்டும் காட்டான்களுக்குக் கிரிக்கெட் வந்துவிடாது என்பதை நாம் முதலில் நம்ப வேண்டும். அப்போதுதான் புரிந்துகொள்ளவும் முடியும். இதற்கொரு உதாரணம் காட்டலாம்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">நான் கல்லூரியில் படிக்கிற காலத்தில் ஒருமுறை கல்லூரி அணியைக் கண்டுபிடிக்கும்பொருட்டு இன்டர் க்ளாஸ் கிரிக்கெட் போட்டி நடந்து தொலைத்த வகையில் நானும் விளையாட நேர்ந்தது. வெகுகாலமாக டீவியில் கிரிக்கெட் பார்த்த தினவில் கிரிக்கெட் ரூல்ஸ் எல்லாம் அத்துப்படி என்கிற காரணத்தால் எனக்கும் கிரிக்கெட் தெரியும் என்பதாக எனக்கு ஒரு நினைப்பு.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">வகுப்பில் மொத்தம் ஐம்பது பேர் என்றபோதும் அதில் பதினெட்டு பத்தொன்பதுபேர் பெண்கள் என்பதால் மீதமுள்ளவர்களில் கிரிக்கெட்ஆர்வமுள்ளவர்களை இணைத்து ஒரு லெவன்ஸ் அணி உருவாக்கப்பட்டது. உண்மையில் அந்த அணியில் நான் சேர்க்கப்படவில்லை. ஆனால் ஆர்வம் தாளாமல் மேட்ச் நடக்கும்போது நானும் போய் நின்றுகொண்டிருந்தேன். அணியின் முக்கிய வீரனான ராஜ÷ வந்து சேர்ந்திராத வகையில் வேறு வழியில்லாமல் கடைசி நேரத்தில் என்னை உள்ளே இறக்கினார்கள்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">எங்கள் அணி பௌலிங். நான் மிகப் பிரமாதமாக காட்ச்களைத் தவறவிடுவதும் கால்களுக்கிடையே பாலை நழுவி ஓட விடுவதும், நான்குக்கு ஓடும் பந்தைத் துரத்திப் பிடித்து, பத்தே அடி தூரத்திற்கு த்ரோ செய்த வகையில் அவர்கள் ஓடியே நான்கு ரன்கள் எடுக்க விடுவதுமாய் பிரமாதப்படுத்திக்கொண்டிருந்தேன். இதனால் எதிரணியில் என்னை யாரும் மறக்க முடியாத அளவுக்கு பிரபலமாகிக்கொண்டிருந்தேன். அவர்கள் எடுத்த ரன்களைவிட நான் கொடுத்த ரன்கள்தான் அதிகம்!</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இதற்கிடையில் ராஜø வந்துவிட்டான். அவன் உட்பட எங்கள் வகுப்பு மாணவர்கள் வேறு சிலரும் ஃபீல்டுக்குள் நடைபோட்டுக்கொண்டிருந்த காரணத்தால் உண்மையான லெவன்ஸ் அணி இதுதான் என்று எதிரணி மனதில் பதிய வைத்துக்கொள்ள இயலாத ஒரு நிலையை எங்கள் கேப்டன் உருவாக்கி வைத்திருந்தான். இந்தக் குழப்பத்தை சாக்கிட்டு பேட்டிங்கின்போது இரண்டாவது டவுனாக ராஜøவை இறக்கியும்விட்டான். எதிரணி இதை உணராமல் தேமே என்று பால் போட்டுக்கொண்டிருந்தது. அவனும் ஒருவழியாக தன் பங்களிப்பை முடித்துவிட்டு அவுட்டாகி வந்துவிட்டான்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">ஒவ்வொரு விக்கட்டாக விழுந்துகொண்டிருந்தது. என்னை உள்ளே இறக்குவதாக கேப்டனுக்கு உத்தேசமே இல்லை. இதனால் பத்து விக்கட்டுகளும் விழுந்து எங்கள் அணி தோல்வியைத் தழுவியது. எதிரணி வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அப்போதுதான் அந்த முக்கிய திருப்பம் நிகழ்ந்தது.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">கேப்டன் என் கையில் பேட்டைக் கொடுத்து உள்ளே போகச் சொன்னான். நாம் தோற்றுவிட்டோம் என்று நான் சொன்னேன். இந்த நியாயமெல்லாம் கல்லூரிக் கிரிக்கெட்டில் செல்லாது என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எல்லோருமாக சேர்ந்து என்னை உள்ளே பிடித்துத் தள்ளிய வகையில் தேர்ந்த வீரன் போல பேட்டை சுழற்றிக்கொண்டு நான் களத்தில் இறங்கினேன்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருந்தவர்கள் குழப்பமடைந்தார்கள். பத்து விக்கட்டும் போய்விட்டது என்பதை அவர்களால் நிரூபிக்க முடியும். ஆனால் அந்த ஆட்டத்தின் புகழ்பெற்ற ஆட்டக்காரனான நான் இதுவரை பேட் செய்யவில்லை என்பதை கவனிக்காதது அவர்களது குற்றம்தான் என்று வாதாடப்பட்டது. ரகசியமாக உள்ளே வந்துபோனவன் ராஜøதான் என்பதைக்கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் என்னை அனுமதிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார்கள்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இதைத் தொடர்ந்து அவர்களது அணியின் கீ பௌலரும் காலேஜ் அணிக்குத் தேர்வாகி யூனிவர்சிடி அணி வரைக்கும் போனவனுமான கணேஷ், அந்த ஓவரில் மீதமிருந்த மூன்று பால்களைப் போட வந்தான்.<br /></span><br /><span style="font-size:85%;">அந்த மேட்ச் எப்படிப்பட்டது என்று சொன்னால் பிட்ச்சுக்கு பதிலாக மேட்டை விரித்து கிரிக்கெட் பாலைக் கொண்டு விளையாடுவது. இவர்கள் எனக்குக் கொடுத்த நெருக்கடியில் காலில் பேட்சைக்கூடக் கட்டிக்கொள்ள நேரம் இருந்திருக்கவில்லை என்பதனால் ஆபத்தை அறியாது நான் அணியின் மானத்தைக் காக்கப்போகும் மாவீரனின் தீரத்தோடு மிடில் ஸ்டம்ப்புக்கு கிரீஸ் எடுத்தேன். பார்ரா என்றான் ஒருத்தன்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">கணேஷ் வேகப்பந்து வீச்சாளன் என்பதனால் தூரத்தில் அவன் ஓடிவருவதுதான் தெரிந்தது. ஆனால் பந்தோ எனக்கு முன்னால் பிட்ச்சாகிவிட்டது. நான் கோல்ஃப் பந்தை அடிப்பவன்போல பேட்டை சுழற்றினேன். பிட்ச்சான பந்து வழக்கமாக போலீஸ்காரர்கள் லத்தியால் அடிப்பார்களே அந்த இடத்தைப் பதம் பார்த்தது. காலில் முட்டிக்குக்கீழே உள்ள முன்பகுதி நேரடியாக எலும்பைக் கொண்டது என்பது எனக்கு அப்போதுதான் தெரிந்தது.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">ஆனாலும் களத்தில் வீழாமல் காலை நொண்டிக்கொண்டு, போர்க்களத்தில் குதிரையில் வருபவனைத் தாக்கும் முனைப்பில் தைரியத்தோடு வாளேந்தி நிற்கும் வீரன்போல் நின்றுகொண்டிருந்தேன்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">அடுத்த பந்து வந்து சேர்ந்தது. அது எப்படி வருகிறது எப்போது வருகிறது என்பதையெல்லாம் அனுமானிக்க முடியவில்லை. அந்தப் பந்தையும் நான் அதேவிதமாகத்தான் எதிர்கொண்டேன். அதுவும் என்னை அதேவிதமாகத்தான் எதிர்கொண்டது. மிகச்சரியாக முதலில் எந்த இடத்தில் அடித்தானோ அதே இடத்தில் இன்னொரு அடி!</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">மூன்றாவது பந்துக்கு அவன் தயாரானபோது வலித்த வலியில் நாங்கள் எத்தனை ரன் எடுத்தால் ஜெயிக்க முடியும் என்பதுகூட எனக்கு மறந்துபோயிருந்தது. ஆக்ஷன் ரீப்ளேயை இரண்டு தடவை காட்டியது மாதிரி மூன்றாவது பாலிலும் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் முன்னே நிகழ்ந்ததேதான் நிகழ்ந்தது.<br /></span><br /><span style="font-size:85%;">பேட்ஸ் இல்லாமல் இப்படி தர்மஅடி வாங்கினால் என்னாகும் என்பது வெகுகாலம் எனக்கு மறக்கவேயில்லை. ஏனென்றால் இரண்டு வருடங்களுக்குப் பிறகுகூட அந்த இடத்தைத் தொட்டுப்பார்த்தால் கொஞ்சம் வலி மிச்சமிருந்தது.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த மூன்று பால்களுக்குமே யெல்பிடபிள்யூ கோரப்பட்டது. அம்பயர் என் ஃபிரெண்ட் என்பதால் அவன் அவுட் கொடுக்கவில்லை. சனியன் நட்புக்கு இலக்கணம் தெரியாமல் நடந்துகொண்டானே என்று பின்னால்தான் நான் நொந்துகொண்டேன். முதல் பந்திலேயே ஒழுங்காக அவுட் கொடுத்திருந்தால் ஒரே அடியோடு தப்பித்துக்கொண்டிருக்கலாமே என்கிற ஆதங்கம்!</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">அதோடு அந்த ஓவர் முடிந்துவிட்ட வகையில் எனக்கு முன்பாகக் களமிறங்கியிருந்த மணிவண்ணன் பாட்டிங் முனைக்கு வந்தான். நான்நொண்டிக்கொண்டு எதிரில் போய் நின்றேன். ரன்னெடுக்கக்கூட ஓட முடியுமா என்பது தெரிந்திருக்கவில்லை.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">ஆனால் அப்போது ஓர் அற்புதம் நிகழ்ந்தது. முதல் பந்திலேயே மணிவண்ணன் அவுட்டானான். இதனால் நான் நாட்டௌட் பேட்ஸ்மேன் என்கிற பெருமையோடு பேட்டைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு வெளியே வந்தேன். இதற்குப் பிறகு நான் கிரிக்கெட்டில் அம்ப்பயராக மட்டுமே பணியாற்றினேன் என்கிற வகையில் ஒருத்தராலும் அவுட் செய்ய முடியாத ஒரே பேட்ஸ்மேன் இந்த உலகத்திலேயே நான் மட்டும்தான் என்கிற பெருமையையும் அடைந்தேன்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் டீவியில் பார்க்கிற கிரிக்கெட்டும் களத்தில் எதிர்கொள்கிற கிரிக்கெட்டும் வேறு வேறு என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. என் மாமா ஒருத்தர் பயங்கர கிரிக்கெட் அபிமானி. அதாவது டீவி கிரிக்கெட் பார்ட்டி. காமிரா ஆங்கிளில் பால் ஃபீல்டருக்கு மிக அருகில் போவதுபோல் தெரியும்போதெல்லாம் இதைக்கூட பிடிக்கத் துப்பில்லாதவர்கள் என்பதாக அவர் இந்திய அணியை சபிப்பார். டாப் ஆங்கிளில் பார்த்தால்தானே அவனிருக்கும் இடத்திலிருந்து பதினைந்தடி தூரத்தில் அது கடக்கிறது என்பது தெரியும்!</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இந்தமாதிரிதான் லகான் என்பதாக ஒரு படம் ஹிந்தியில் வந்தது. சரியான குப்பைப் படம். அதைப்போய் ஆஸ்காருக்கு அனுப்பினார்கள். ஆனால் சென்னை ஆறுலட்சத்துஇருபத்தெட்டு அப்படியாப்பட்ட படமல்ல. சுஜாதாவின் நிலாநிழல் என்கிற நாவலில் வருவதைப் போல லோக்கல் கிரிக்கெட் சம்பந்தப்பட்டது. அது மிகத் தெளிவாகவும் அந்தப் படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் இந்த இரண்டு படங்களைவிடவும் மிகச் சிறப்பாக கிரிக்கெட்டைக் காட்டியது வேறொன்று. அது, ப்ராட்மேனின் வாழ்க்கையைச் சொன்ன பாடிலைன்என்கிற தொலைக்காட்சித் தொடர். அதன் கச்சிதம் இந்த இரண்டு படங்களிலும் கண்டிப்பாக இல்லை என்பதை, பார்த்தவர்கள் நன்றாகவே உணர்வார்கள்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">ஆனாலும் இந்த இரண்டு படங்களுமே பெரும் வசூல் செய்த வகையிலும் கிரிக்கெட்டின் குடியை வாழ வைத்தவை என்பதையும் மறுப்பதற்கில்லை. கிரிக்கெட்தான் இந்தப் படங்களின் மையம் என்பதால் உண்மையில் கிரிக்கெட்தான் சினிமாவின் குடியை வாழவைத்தது என்பதும் சரியான பார்வைதான்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">அப்படியிருக்க, கிரிக்கெட்டின் குடியைக் கெடுத்த சினிமா என்கிற தலைப்பு ஏன் வருகிறது என்று கேட்டால், அது வேறென்றுமில்லை.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">உண்மையில் கிரிக்கெட் என்பது என்ன? ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் மேட்ச். அதுதான் நிஜ கிரிக்கெட் என்பதை உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் நன்றாகவே அறிவார்கள். அது ஒருநாள் பந்தயமாக ஐம்பது ஓவர்களுக்குச் சுருங்கியபோது பெரும் எதிர்ப்பு கிளம்பி அப்புறம் அடங்கிப் போனது. இப்போது டீடொன்டி வந்துவிட்டது.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">உலக அளவில் இந்த மாதிரி ஒரு ஐடியா வந்தது ஓர் இந்தியனுக்குத்தான் என்பதைத்தான் நாம் கவனிக்க வேண்டும். இது லலித் மோடியின் மண்டையில்தான் தோன்றியதா இல்லை வேறு ஏதாவது மதராஸியின் மண்டையில் தோன்றியதா என்பது தெரியவில்லை. ஆனால் கிரிக்கெட்டை வெறும் பொழுதுபோக்காக மாற்றிவிட்ட விஷயமே அன்றி இது வேறெதுவும் இல்லை.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">என் குற்றச்சாட்டு இதுதான், உலக அளவில் ஒன்றரை மணிநேரம்தான் ஒரு சினிமாவுக்கான கால அளவு! இந்தியாவிலோ இரண்டேகால் முதல் மூன்று மணிநேர அளவு தேவைப்படுகிறது. அதாவது இந்தியன் அல்லது தமிழனுக்கு மூன்று மணிநேரத்தில் எது முடிகிறதோ அதுதான் நல்ல பொழுதுபோக்கு!</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இந்தக் காரணத்தால்தான் டீடொன்டி என்கிற கபடம் அகில உலகிலேயே ஓர் இந்திய மண்டையில்தான் உதித்தது என்பதாக நான் குற்றம் சாட்டுகிறேன். இப்படித்தான் சினிமா கிரிக்கெட்டின் குடியையும் கெடுத்துவிட்டது.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">உங்களுக்கும் தெரிந்த ஒரு பழைய ஜோக் உண்டு. ஒரு மாணவன், தென்னை மரம் தன் வரலாறு கூறுதல் என்கிற கட்டுரையை மனப்பாடம் செய்துகொண்டு போனான். பரீட்சையில் பசுமாடு தன் வரலாறு கூறுதல் என்று கேள்வி வந்துவிட்டது. பையன் பார்த்தான். தான் மனப்பாடம் செய்துகொண்டு வந்த கட்டுரையை அப்படியே எழுதினான். அதன் முடிவில் ஒரு புதிய வரியைச் சேர்த்தான்.</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">’இப்படியாப்பட்ட தென்னை மரத்தில்தான் பசுமாட்டைக் கட்டுவார்கள்!’</span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">இந்தக் கதைக்கும் நீங்கள் வாசித்து முடிக்கும் கட்டுரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.</span>சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8130572.post-23765932313316623922009-04-23T21:00:00.002+05:302009-04-23T21:04:51.221+05:30சினிமா கலை வடிவம் அல்ல!<span style="font-size:85%;"></span><br /><p><span style="font-size:85%;">பொத்தாம்பொதுவாக சினிமா என்பது கலைவடிவம் அல்ல என்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டால் உலகில் உலவும் அத்தனை மொழிகளிலிருந்தும் வசைமாரி பொழிந்துவிடுவார்கள். ஆனால் தமிழர்களுக்கு மட்டும் அந்த யோக்கியதை இல்லை. ஏனென்றால் தமிழ் சினிமாவில் கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் கலைதான் இல்லை.<br /></span><span style="font-size:85%;"></span></p><p><span style="font-size:85%;">நடிகன் என்பவன் நிகழ்த்துகலைஞன். ஆனால் அவன் நடிப்பைக் கற்றுக்கொண்டு வந்தால்தான் வாய்ப்பு என்பதாக தமிழ் சினிமா கோருவதில்லை. பொதுவாகவே தமிழ் சினிமா அது ஒரு கூட்டு முயற்சி என்றபோதும் இயக்குனரின் திறமையை சற்றே அதிகமாகவே நம்புவதாகவே இருக்கிறது. ஓர் இயக்குனர் நினைத்தால் திருவிழாவில் காருக்குள் தலையை நுழைத்து வணக்கம் போட்டவன்கூட ஹீரோவாக ஆகிவிட முடிகிறது. இந்த இடத்தில் திரும்பவும் பாரதிராஜாவை வம்புக்கிழுக்க வேண்டியிருக்கிறது. அவர் தன் படத்தின் நாயகர்களை பெரும்பாலும் இவ்விதமாகத்தான் கண்டெடுத்தார். நாட்டியமாடத் தெரியாத பெண்ணை நாயகியாக்கிவிட்டு தவித்த சுரேஷ் கிருஷ்ணாவைப்போல நடிக்கத் தெரியாத இளைஞனை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்து நடிகனாக்கிக் காட்டுகிறேன் என்று அவர் படுத்திய இம்சைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒருவர் நல்ல இயக்குனர் என்பதற்காக நடிக்கவே தெரியாத ஒருவரை நடிகராக்கிவிடலாம் என்கிற கொடுமை உலகின் வேறு எந்தெந்த மொழிகளில் எல்லாம் நடக்கிறதோ தெரியவில்லை.<br /></span></p><p><span style="font-size:85%;">சினிமா என்பது பல கலைகளின் கூட்டுத் தயாரிப்பு என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் பல கலைஞர்களும் தங்கள் மூளையைக் கசக்கிப் பிழிந்து, வியர்வையை ஆறாய் ஓடவிட்டு தயாரித்துக் கொடுக்கும் கடைசிப் பண்டமான சினிமா உண்மையில் கலைவடிவமாகத்தான் இருக்கிறதா என்பதாக நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். பதிலை நான் சொல்ல வேண்டியதில்லை.<br /></span></p><p><span style="font-size:85%;">ஏதோ மகேந்திரன் ஒரு சில படங்கள் கொடுத்தார். எப்போதோ ஒரு மணிரத்னம், அமீர், கேபிடல் சசிகுமார், ராம் என்று ஒருசிலர் வருகிறார்கள் (இந்தக் கட்டுரைத் தொடரில் திரும்பத் திரும்ப இவர்களின் பெயர்களையே சொல்ல நேர்வதிலிருந்தே இங்கே காணும் வறட்சியைப் புரிந்துகொள்ளலாம். மற்றபடி இவர்கள் எனக்கு மாமன்மார்களோ மச்சான்மார்களோ இல்லை. அல்லது இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு என்னைக் கதாநாயகனாக்கி எதிர்காலத்தில் ஆட்சிப்பொறுப்பையும் ஒப்படைக்கப்போகிறார்கள் என்பதாகவும் நான் அபத்தமாக யோசிப்பதில்லை). நான் சொல்ல வருவதை மற்றவர்கள் சரிவர உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதே எனது கோரிக்கை.<br /></span></p><p><span style="font-size:85%;">முன்பே சொன்னதுபோல நடிகர் நடிகை தவிர வேறு யாராவது சினிமாவில் அனுபவம் அல்லது திறமை இல்லாமல் பணியாற்றிவிட முடிகிறதா? அதோடு சினிமாவில் பணியாற்றும் அத்தனைபேரும் கலைஞர்களா? உண்மையில் பல கலைஞர்களும் தொழில் நுட்ப வல்லுனர்களும் தொழிலாளர்களும் இணைந்து உருவாக்குவதே சினிமாவாக இருக்கிறது. அப்படிப் பார்த்தால் சினிமா கலைவடிவமாகவும் சொல்லப்படலாம், தொழில்நுட்ப சாத்தியமாகவும் அறியப்படலாம், உற்பத்தி செய்யப்பட்ட விற்பனைப் பொருளாகவும் சந்தைப்படுத்தப்படலாம் என்பதுதானே உண்மை! இங்கேதான் வம்பே இருக்கிறது!<br /></span></p><p><span style="font-size:85%;">ஒரு சினிமா எடுக்க, பல கலைஞர்களை ஒருங்கிணைக்க வேண்டியிருக்கிறது. பல மூளைகள் ஒரே இடத்தில் செயல்படும்போது எதிர்கொள்ளப்படும் அத்தனை பிரச்சினைகளும் வெல்லப்படவேண்டிய கட்டாயம் இருக்கிறது. தொழில்நுட்ப விற்பன்னர்கள் பலரின் பின்னாலும் அலைய வேண்டியிருக்கிறது. அந்த சினிமாவுக்குத் தேவைப்படும் அத்தனை தொழில்நுட்ப வடிவங்களையும் வகுத்துத்தருவது அவர்களது கடமையாக இருந்தபோதும், ஓர் இயக்குனர் தன் மனத்தில் வரைந்துவைத்திருக்கும் சினிமாவை அதேவிதமாக வடிவமைத்துத்தர அவர்களிடம் மன்றாட வேண்டியதிருக்கிறது. அதேபோல்தான் பல தொழிலாளிகளும் ஒரே இடத்தில் கூட்டப்பட்டு அவரவர் வேலையை செவ்வனே செய்யவைக்கப்பட வேண்டியதிருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டமெல்லாம் முடிந்துதான் சினிமா என்பது நமது பார்வைக்கு வந்து சேர்கிறது. ப்ரீ ப்ரொடக்ஷன், ப்ரொடக்ஷன், போஸ்ட் ப்ரொடக்ஷன், ப்ரீ ரிலீஸ், ரிலீஸ், போஸ்ட் ரிலீஸ் என்று பல கட்டங்களை சினிமா கடந்து வருகிறது. இது ஒரு தொழில்நுட்பக் கண்ணோட்டம்.<br /></span></p><p><span style="font-size:85%;">ஆனால் இந்தக் கண்ணோட்டமே கலைவடிவத்துக்கான எமனாகவும் இருந்துதொலைக்கிறது. சினிமாவின் அத்தனை விஷயங்களையும் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு பெரும்பாலும் இயக்குனரின் தலையிலேயே விழுகிற அவலம் தமிழ் சினிமாவில் வெகுகாலமாக நிகழ்ந்துவருகிறது. கிட்டத்தட்ட ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் சீயீவோ போல இயக்குனர் செயல்படவேண்டுமானால் அவர் கொடுப்பது ஒரு வெற்றிகரமான பண்டமாகத்தான் இருக்குமே தவிர எப்படி கலைவடிவமாக இருக்க முடியும்?<br /></span></p><p><span style="font-size:85%;">மற்றக் கலைகள் அனைத்திலும் கலைக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஓவியன் தனியாகத்தான் ஓவியம் வரைகிறான். அவனது சுதந்திரத்தை அவன் ஒருபோதும் இழந்துபோவதில்லை. வரைந்து முடிக்கிறவரைக்கும் அவனுக்கும் கலைக்கும் ஊடாக நிகழும் புணர்ச்சியின் பூரணத்துவமே வரைந்து முடிக்கும் ஓவியமாக இருக்கிறது. கவிஞன் மற்றும் எழுத்தாளர்களின் நிலைமையும் இதேவிதமானதுதான்.<br /></span></p><p><span style="font-size:85%;">பாடகன் பக்க வாத்தியக்காரர்களோடு இணைந்துகொள்கிறான். மேடையில் ஏறுமுன்பாக எத்தனையெத்தனையோ ஒத்திகைகளை அவர்கள் கூடி நிகழ்த்திவிட்டுத்தான் வந்திருக்கிறார்கள். இயைந்து செயல்படக்கூடிய வல்லமையை அவர்கள் கற்றிருக்கும் இசையறிவு கொடுக்கிறது. ஒரே லயத்தில் ஐந்தாறு வாத்தியங்கள் இணைவதை இது சாத்தியமாக்குகிறது. இதற்கு பதிலாக எல்லா வாத்தியங்களையும் பாடகனே வாசிக்க முனைந்தால் அல்லது திருத்தங்கள் சொல்லிக்கொண்டிருந்தால் கச்சேரி கச்சேரியாகவா இருக்கும்?<br /></span></p><p><span style="font-size:85%;">சினிமா கலைஞர்களால் மட்டும் உருவாக்கப்படுவதில்லை என்பதனாலேயே இயக்குனர் என்பவனது பார்வை 360 டிகிரி சுழலவேண்டியதாயிருக்கிறது. இது எல்லாம் போதாது என்று சினிமாவின் வெற்றி தோல்வி என்கிற இரண்டு நிலைப்பாடுகளைத் தீர்மானிப்பவன் என்பதாகவும் இயக்குனனே அறியப்படுகிறான். ஒரு சினிமாவின் தோல்வி அல்லது வெற்றி முதலில் பாதிப்பது அவனைத்தான். அல்லது தார்மீகப் பொறுப்பேற்பவன் அவன்தான். இந்தக் கருத்தாக்கமும் திரைப்பட உருவாக்கத்தில் கலையின் போதாமையைத் திணிக்கிறது.<br /></span></p><p><span style="font-size:85%;">தமிழ் சினிமாவைப் பிடித்துள்ள இன்னொரு மிகப்பெரிய கொடுமை, கலைக்காக சினிமாவுக்கு வருபவர்கள்கூட காசுக்காகத்தான் சினிமா என்கிற நிலைப்பாட்டை மிக விரைவில் எட்டிவிடுவதுதான்! ஓர் இளம் நடிகை, தன் இளமை உள்ளவரைக்கும்தான் சினிமாவில் சம்பாதிக்க முடியும் என்கிற அவசரத்தோடு செயல்படுவதைப்போல கிட்டத்தட்ட சினிமாவின் அத்தனை கலைஞர்களும் ஒருவிதமான அவசரகதியிலேயே செயல்படக்கூடிய சூழலே இன்று உருவாகியிருப்பது! சினிமா ஒரு தொழில் எனக் கொண்டு வாழும் தொழிலாளர்களாலும் தொழில்நுட்பக் கலைஞர்களாலும்தான் கொஞ்சம் நிதானமாகச் செயல்பட முடிகிறது. ஏனென்றால் அவர்களின் மீது லைம்லைட்டின் வெளிச்சம் விழாது. சினிமாவின் வெற்றி தோல்வி நேரடியாக அவர்களை பாதிக்கவும் செய்யாது. ஆனால் இயக்குனர்களின் நிலையோ பரிதாபத்துக்குரியது.<br /></span></p><p><span style="font-size:85%;">ஒரு கதை கதாசிரியரால் எழுதப்பட்ட பிறகு அந்தக் கதையின் திரை வடிவம் குறித்த விவாதம் என்பதாக ஒன்று நிகழ்ந்து அதில் இயக்குனர் தன் பங்களிப்பைச் செலுத்துவது என்பது நேர்மையான நிகழ்வு. ஆனால் இயக்குனரே கதையைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இங்கே இருக்கிறது. அதாவது கதை விவாதம் என்பது கதையைப் பண்படுத்துவதாக இல்லாமல் கதையைக் கண்டுபிடிப்பதாக இங்கே இருக்கிறது. ஏற்கனவே வெளிவந்த படங்கள், அதில் வென்ற படங்கள், தோற்ற படங்கள், அதற்கான காரணங்கள் இவையே கதை விவாதங்களின் முக்கிய வாக்குவாதங்களாக இருக்கின்றன. இதற்குப் பிறகே கதை விவாதிக்கப்படுகிறது. இவ்விதமாக விவாதிக்கப்படும் கதை, கலை என்பதன் வாசனையைக்கூட மோந்து பார்க்கத் துப்பில்லாததாகவே இருக்க முடியும். திரைப்படத்தின் ஆதாரமாகிய கதையிலேயே கலை என்கிற வகைமை கோரப்படாதபோது திரைப்படம் ஆரம்பத்திலேயே 'கலை' இழந்து வியாபாரத்தை நோக்கியே நகர்வதாக ஆகிவிடுகிறது.<br /></span></p><p><span style="font-size:85%;">இந்தப் போக்கு மாறவேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?<br /></span></p><p><span style="font-size:85%;">பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. இயக்குனரை கலையைக் குறித்து மட்டும் யோசிக்க வைக்கப்பட்டால் போதும். சினிமாவின் பல்வேறு பிரிவுகளும் அதற்கதற்கான விற்பன்னர்களைக் கொண்டே இயக்கப்படுகின்றன. முக்கியமாக நிதி, லொக்கேஷன், கால்ஷீட் என்கிற இம்சைகளை எக்ஸிக்யூட்டிவ் ப்ரொட்யூசர், ப்ரொடக்ஷன் மேனேஜர் ஆகியோர் பார்த்துக்கொள்கிறார்கள். அந்த வேலைகளையும் இயக்குனர்களே செய்யவேண்டிய பல சூழல்களும் தமிழில் நிலவுகின்றன. இதனால் ஒரு படம் எடுக்கப்படுவதன் பின்னணியில் உள்ள அத்தனை பிரச்சினைகளையும் இயக்குனரே எதிர்கொள்ள வேண்டும் என்கிற நிலைமை மாறவேண்டியதே முதல் தேவை. இயக்குனர் கதையை உள்வாங்கிக்கொள்வது. அதன் திரைவடிவத்தை அனுமானிப்பது, அதற்குத் தேவையான கலைஞர்களைக் கோருவது (தீர்மானிப்பதல்ல, தீர்மானித்தால் அதில் தலையிட வேண்டியிருக்கும்) ஆகியவற்றோடு தன் முதல்கட்ட வேலையை முடித்துக்கொள்ள முடியும் என்றால் அவரது மண்டையில் கலையின் ஊற்று தவிர வேறொன்றும் பெருக வாய்ப்பில்லாது போகும். இது முதல்கட்ட தேவை. அடுத்தகட்ட தேவை அவர் கோருவதையெல்லாம் அவர் கோரியபடியே கச்சிதமாகக் கொண்டுவந்து சேர்க்கும் நகுலபாண்டியர்களின் சேவை.</span></p><p><span style="font-size:85%;">அது சரியாக அமையவில்லையானால் - ஓவியன் ஓவியத்தை வரைய ஆரம்பித்த பிறகு மஞ்சள் நிறம் மட்டும் இல்லை என்றால் என்ன செய்வான்? அதுமாதிரிதான் ஆகிவிடும். சினிமா என்பது கூட்டுச் செய்கை என்பதனால் நினைத்தபடியே எல்லாம் நடந்து முடியவேண்டும் என்று ஒரு டைம்ஃப்ரேமுக்குள் வேலை செய்ய முனைவது அபத்தமானதுதான் என்பதை மறுப்பதற்கில்லை. அப்படித் தடைகள் வரும்போது காம்ப்ரமைஸ் காலத்தை நீட்டுவதாக அமையவேண்டுமே தவிர கலையை விட்டுக்கொடுப்பதாக அமையக்கூடாது. எத்தனையோ காரணங்களுக்காக வீண் செலவு செய்யப்படும் சினிமாவில் கலைக்காகக் கொஞ்சம் காசை விட்டுக்கொடுப்பதால் என்ன குறைந்துவிடப்போகிறது?<br /></span></p><p><span style="font-size:85%;">இன்று பல இயக்குனர்களும் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் சினிமா இயக்குகிற அவலம் வேறு நிகழ்கிறது. இந்த அடிப்படையில் உருவாகும் திரைப்படம் இயக்குனருக்கு மிகுந்த சுதந்திரத்தைத் தருவதைப்போலக் காணப்பட்டாலும், அது ஒரு நிதி நெருக்கடியையே உண்மையில் ஏற்படுத்துகிறது. இதனாலேயே இந்த வகையில் தயாரிக்கப்படும் எந்தப் படமும் கலைவடிவமாக இருக்கவே முடிவதில்லை.<br /></span></p><p><span style="font-size:85%;">சமீபத்தில் ஒரு புதிய இயக்குனரிடம் ஒரு புதிய தயாரிப்பாளர் என்னிடம் சொன்ன கதையை அப்படியே சினிமாவாக்கிக் கொடுங்கள். செலவைப்பற்றிக் கவலைப்படவேண்டியது நான்; நீங்களல்ல! என்று சொன்னதாக ஊடகச் செய்தியொன்று பார்த்திருப்பீர்கள். இந்த உத்திரவாதம்தான் ஒரு நல்ல படத்தை ஓர் இயக்குனர் கொடுப்பதற்கான அஸ்திவாரம்.<br /></span></p><p><span style="font-size:85%;">இந்தமாதிரி ப்ரொடியூசர்கள் எத்தனை இயக்குனர்களுக்கு வாய்க்கிறார்கள்? பாரதி, நான் தமிழ்க் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன். எப்படியாப்பட்ட மேலான காரியம் அது! இதற்கிடையில் உப்புக்கும் புளிக்கும் பருப்புக்கும் அல்லல்படவேண்டிய கவலைகளை எப்படி என் மண்டைக்குள் செலுத்தலாம் என்று தமிழன்னையைக் கடிந்துகொண்டதுதான் ஞாபகம் வருகிறது.</span></p>சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8130572.post-13256729476398781842009-04-21T19:04:00.001+05:302009-04-21T19:07:39.809+05:30ஒரு ரூபா சினிமாவும் 100 கோடி சினிமாவும்!<span style="font-size:85%;">சினிமா என்றாலே கோடிகள் என்பதாக ஆகிவிட்ட இன்றைய சூழலில் உண்மையாகவே சினிமாவின் அத்தனை செலவை எவையெவையெல்லாம் தீர்மானிக்கின்றன என்கிற விழிப்புணர்வு சினிமாக்காரர்களுக்காவது இருக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை.<br /></span><br /><span style="font-size:85%;">சினிமாவுக்கு வெளியே இருந்து சினிமாவைப் பார்த்து ரசித்துக்கொண்டு அல்லது சபித்துக்கொண்டு இருப்பவர்களாகட்டும், விமர்சித்துக்கொண்டிருப்பவர்களாகட்டும், சினிமாவுக்குள்ளிருந்து அதை இன்ச் இன்ச்சாக உருவாக்குகிற பணியில் இருப்பவர்களின் கருத்துகளோடு நேரதிராக மோதுகிறார்கள். எந்தவொரு தொழிலிலும் உள்ளே நுழைந்து பார்த்திருப்பவர்களின் கருத்து வேறாகவும் வெளியே இருந்து பார்ப்பவர்களின் கருத்து வேறாகவும் இருக்க நேர்வது உலக நியதிதானே! ஞாயிற்றுக்கிழமையானால் மட்டன் எடு என்று புறப்படுகிறவர்களில் எத்தனை பேருக்கு ஆட்டுத்தொட்டிகளில் ஆடு எவ்விதமாகக் கொல்லப்படுகிறது என்பது தெரியும்? ஆடு கொல்லப்படுவதற்கும், மாடு கொல்லப்படுவதற்கும், பன்றி கொல்லப்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்கள் எப்படி அறிவார்கள்? அதுமாதிரிதான் கிரிடிக் மற்றும் பார்வையாளர்களின் பார்வையில் உள்ள சினிமா வேறு, சினிமாக்காரர்களின் பார்வையில் உள்ள சினிமா முற்றிலும் வேறு!<br /></span><br /><span style="font-size:85%;">ஒரு சினிமாவை மதுரைப்பக்கம் ஒருமாதிரி ரசிக்கிறார்கள், கோயமுத்தூர்ப் பக்கம் வேறுமாதிரி ரசிக்கிறார்கள், ராமநாதபுரத்தில் வேறுவிதமான ரசனை காண்கிறது. ஒருத்தருக்கு அரிவாள் எடுத்தால் பிடிக்கிறது, இன்னொருத்தருக்கு அணைத்துக்கொண்டால் பிடிக்கிறது. தமிழ் சினிமா தொடக்க காலம் தொட்டே மசாலா என்கிற தன்மைக்குள்ளேயே யோசிக்கப்படுவதனால் வந்து சேர்ந்த வன்கொடுமைதான் இப்போதைய எமது சினிமாவுக்கான செலவையெல்லாம் தீர்மானித்துத் தொலைக்கிறது.<br /></span><br /><span style="font-size:85%;">உருப்படியாகக் கதைகூட இல்லாமல் பலகோடி செலவில் குப்பையாக ஒரு படத்தை மிகப்பெரிய இயக்குனர் மிகப்பெரிய நடிக நடிகையரை இயக்கிக் கொடுக்கிறார் என்பதற்காகத் தியேட்டர்களில் டிக்கெட்டுகளின் விலையை உயர்த்திக்கொள்ளலாம் என்பதுதான் சினிமாவால் உயர்ந்து அரசோச்சும் எமது அரசியல்வாதிகளுக்கும் நியாயமாகப் படுகிறது. தமிழில் பெயர் வைத்தால் வரிநீக்கம் என்ற அறிவிப்பிலும்கூட, நீக்கப்பட்ட வரிச்சலுகை யாருக்குப் போய்ச் சேருகிறது என்கிற பிரக்ஞையை எழுப்ப ஒரு என்ஜிஜிஓ கூட இல்லாத நிலையில், கஷ்டப்பட்டு படம் தயாரிக்கும் தயாரிப்பாளனுக்கோ, பார்வையாளனுக்கோ இல்லாமல் விவசாயியின் வயிற்றில் வியாபாரி அடிப்பதைப்போல நான்குவேளைக் கொள்ளையாக நடந்துகொண்டிருக்கிறது.<br /></span><br /><span style="font-size:85%;">நட்சத்திர அந்தஸ்து என்பது தமிழில் மட்டுமல்ல, ஹாலிவுட்டிலும்கூட உண்டு. ஆனால் நட்சத்திரத்தை மட்டுமே நம்பி அங்கே படம் எடுக்கப்படுவதில்லை. நட்சத்திரத்திற்குள் ஒரு நடிகன் உண்டு என்பதும் அவர்களது பிரக்ஞையின் இன்னொரு முக்கிய அம்சம். அவனை வேலை வாங்குவதற்கான கதைக்களமும் பார்வையாளனை உட்காரவைப்பதற்கான திரைக்கதை வடிவமும்தான் பிரதானமாக அங்கே கருதப்படுகின்றன. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்னால் ரொமான்சிங் தி ஸ்டோன் என்று ஒரு சூப்பர் ஹிட் ஹாலிவுட் படம் வெளிவந்தது. அது ஒரு அட்வென்சர் காமெடி வகைப்படம். மைக்கேல் டக்ளஸ் மற்றும் காத்தலீன் டர்னர் நாயகன் மற்றும் நாயகியாக நடித்த ஹாலிவுட் கமர்ஷியல் படம். அருமையான என்டர்டெய்னர். கொலம்பியாவின் மழைக் காடுகளில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். அதன் இரண்டாவது பாகம்கூட அதே நடிகர்களோடு ஜ்வெல் ஆஃப் தி நைல் என்று வெளிவந்து சக்கைப்போடு போட்டது. இந்தப்படங்களில் ஒரு காமெடி வில்லன் பாத்திரத்தில் டேனி டீ விட்டோ நடித்திருப்பார். குள்ளமான தோற்றமும் சொட்டைத் தலையும் கொண்ட அவர் அந்தப் பாத்திரத்துக்கு வெகு பொருத்தமாக இருப்பார். ஆனால் இந்தப் படங்களைத் தொடர்ந்து வார் ஆஃப் தி ரோஸஸ் என்று ஒரு படம் அதே மைக்கேல் டக்ளஸ், காத்தலீன் டர்னர், டானி டீ விட்டோ நடித்து வெளிவந்தது. இந்தப்படத்தை இயக்கியது டேனி டீ விட்டோ. இந்தப்படம் ஒரு காதலைச் சொல்லி, அவர்கள் கல்யாணம் செய்துகொள்வதைச் சொல்லி, பிள்ளைகள் பிறந்து வளர்ந்து காலப்போக்கில் அவர்களுக்குள் விரிசல் எழுந்து ஒருத்தரை ஒருத்தர் கொலை செய்யவிரும்புகிற வரைக்கும் சென்று முடிகிறது. அட்வென்சர் கிடையாது, கமர்ஷியலாக எதுவும் கிடையாது. நம் ஊரில் இப்படி ஒரு வெற்றிக்கூட்டணி அமைந்தால் திரும்பவும் ஓர் அட்வென்சர் படம் தவிர வேறொன்றை எதிர்பார்க்க முடியுமா? முன்னால் போகிற கழுதை கதைதான்!<br /></span><br /><span style="font-size:85%;">ஒரு படத்தின் வெற்றி அல்லது தோல்வி என்பது அந்தப் படத்தில் சம்பந்தப்பட்டவர்களைத்தான் பாதிக்கவேண்டுமே தவிர, ஒட்டுமொத்த திரை உலகத்தையே பாதிப்பது எவ்விதத்தில் நியாயம்? இதற்குக் காரணம் ஒன்றைப் பார்த்தே மற்றது எடுக்கப்படுவதுதான். தனது ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு மாதிரி எடுக்க ஆரம்பித்த வகையில்தான் ராம்கோபால் வர்மா தற்போதைய தன் உயர்ந்த நிலைக்கு வந்து சேர்ந்தார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதேபோல்தான் மணிரத்னமும். என்னதான் அவருக்கென்று ஒரு ஸ்டைல் உள்ளது என்றபோதும், அவரது ஒரு படம் அவரது இன்னொரு படம்போல இல்லாமல் இருப்பதே அவரது வெற்றியின் சூத்திரம். பல்லவி அனுபல்லவி, உணரு, பகல்நிலவு, மௌனராகம், நாயகன், கீதாஞ்சலி, அக்னிநட்சத்திரம், அஞ்சலி என்று அவரது துவக்கத்தைக் கவனித்துப் பாருங்கள். அதே நேரத்தில் இப்போதைய மற்ற இயக்குனர்களின் படங்களையும் பட்டியலிட்டுப் பாருங்கள். வித்தியாசம் தெரியும். செல்வராகவன், அமீர், மிஷ்கின் ஆகியவர்கள் இந்தக் குற்றச்சாட்டிலிருந்து மீள்பவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.<br /></span><br /><span style="font-size:85%;">இவர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் வெற்றிகரமாக உள்ள அத்தனை இயக்குனர்களும் அவரவர் ஃபார்முலாவையும் அவ்வப்போது உருவாகும் சினிமாவின் புதிய டிரெண்டையும் மட்டுமே நம்பி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஃபார்முலாவானாலும் சரி, யாரோ ஒருவர் கொண்டுவந்த ட்ரெண்டாக இருந்தாலும் சரி, அது செலவு வைப்பதுதான். நீரில் பல உயிர்களும் வாழ்கின்றன என்பதற்காக எல்லோரும் தண்ணீருக்குள் வீடு கட்ட முனைந்தால் என்ன நடக்குமோ அதுதான் நடக்கிறது. நீரிலும் தரையிலும் வாழ முயற்லும்போதோ சொந்த அடையாளம் இழந்து தவளைகளாகிப்போவதே நேர்ந்துவிடுகிறது.<br /></span><br /><span style="font-size:85%;">அமீர் பருத்தி வீரன் எடுத்தார். உலகத்தரத்தில் இருக்கிறது என்று எல்லோரும் கொண்டாடுகிறோம். ஆனால் அவர் சொல்கிறார், தான் உலகப் படங்களைப் பார்த்ததே இல்லை என்பதாக. மிஷ்கின் அஞ்சாதே என்கிற விறுவிறுப்பான படத்தைக் கொடுக்கிறார். அதில் அகிரா குரோசோவாவின் படத்திலிருந்து தான் கற்றுக்கொண்ட ஷாட்டை உபயோகிக்கிறார். நீங்கள் உலகத்திடமிருந்து கற்றுக்கொள்கிறீர்களா இல்லை உங்களிடம் இருப்பதை உலகுக்குக் கொடுக்கிறீர்களா என்பதல்ல முக்கியம். நீங்கள் உண்மையிலேயே அக்கறையுடன் செயல்படுகிறீர்களா இல்லையா என்பதுதான் முக்கியம்! பாட்டு, நடனம், சண்டை என்று பாதிப் படத்தை நிரப்பி, மீதிப்படத்தை எதையாவது வசனத்தை எழுதி முடித்துவிடலாம் என்கிற மாயமான சூழல் ரொம்பகாலம் தாங்காது.<br /></span><br /><span style="font-size:85%;">ஆஃப்லைன் என்றொரு ஈரானியப்படம். ஃபுட்பால், பேஸ்பால், ஸ்கேட்டிங், ஒலிம்பிக்ஸ் என்று எத்தனையோ படங்கள் விளையாட்டை மையமாகக் கொண்டு உலகெங்கும் வந்திருக்கின்றன. ஹிந்தியில் லகான், தமிழில் சென்னை 600 028, வெண்ணிலா கபடிக்குழு என்று ஒருசில படங்களும் சமீபத்தில் வந்தன. இந்தப் படங்களில் மிகவும் முக்கியமானது ஃபுட்பாலையும் போர்க்கைதிகளையும் கலந்துகட்டி சில்வஸ்டர் ஸ்டாலோன், ஃப்ர்ஸ்ட் ப்ளட் படத்துக்கும் முன்னால் நடித்த படமான எஸ்கேப் டு விக்டரி. அந்தப் படம்கூட இந்த ஆஃப்லைனுக்கு ஈடாகாது. ஏனென்றால் இந்தப்படம் ஒரு ஃபுட்பால் மேட்சை உள்ளடக்கியிருக்கிறது. மேட்ச் ஆரம்பிப்பதிலிருந்து முடிவதோடு படமும் முடிந்துவிடுகிறது. ஆனால் படத்தில் ஃபுட்பால் மேட்ச் மருந்துக்கும் காட்டப்படுவதில்லை.<br /></span><br /><span style="font-size:85%;">கிட்டத்தட்ட இதே விதமானதுதான் வெங்கட் பிரபுவின் இரண்டாவது படமும்! ஹைதராபாத்தில் நடக்க இருக்கும் கிரிக்கெட் மேட்ச்சைப் பார்க்க நண்பர்கள் போகிறார்கள். வழி தவறுகிறார்கள். வழியில் கார் நின்றுவிடுகிறது. அங்கே ஒரு கடத்தல் கும்பலை எதிர்கொள்கிறார்கள் என்று கிரிக்கெட்டைக் காட்டாமலே முடிந்துவிடுகிறது. ஆனால் இந்தப்படத்தின் கதையில் கிரிக்கெட் இல்லை. ஆனால் ஆஃப்லைனில் ஃபுட்பால் இருக்கிறது. ஈரானில் ஈரானியப் பெண்கள் ஓபன் ஸ்டேடியத்தில் ஆண்களோடு சமமாக உட்கார்ந்து விளையாட்டு பார்க்க அனுமதியில்லை. ஆண் வேடமிட்டு உள்ளே நுழைய முயல்கிற பெண்கள் சிலரை போலீஸ் பிடித்து ஸ்டேடியத்திலேயே ஒரு இடத்தில் விளையாட்டைப் பார்க்க இயலாத வகையில் அடைத்துவைக்கிறது. படம் முழுக்க விளையாட்டின் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு போலீஸ்காரன் காமென்ட் சொல்கிறான். இந்த அளவு உயிர்த்துடிப்புள்ள ஒரு ஸ்க்ரிப்ட் தமிழில் உருவாகவேண்டுமானால் இன்னும் எனர்ஜி உள்ள தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் உருவாகவேண்டும்.<br /></span><br /><span style="font-size:85%;">மலையாளத்தில் தன் அம்ம அறியான் படத்தை எடுப்பதற்காக ஜான் ஆபிரகாம் பொதுமக்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு ரூபாய் நன்கொடை வாங்கினார். அந்தப் பணத்தைக் கொண்டே அவர் அந்தப் படத்தை எடுத்தும் முடித்தார். பணம் கொடுத்தவர்களுக்கு அவர்களின் ஊரில் அதைக் கொண்டுபோய் போட்டுக்காட்டினார். அவர்கள்தான் அதற்கான பணத்தை ஏற்கனவே கொடுத்துவிட்டார்களே! இந்தமாதிரி ஒரு சம்பவத்தை நம்மால் இப்போது கற்பனை செய்ய முடியுமா? இது என்ன ஈரானிலா நடந்தது? நமக்கு அடுத்த மாநிலத்தில், அதுவும் நம் மாநிலத்தில் அதிகம் பயணித்த ஒரு நண்பன் சாதித்துக் காட்டியதல்லவா இந்த அற்புதம்! ஜான் ஆபிரகாம் மட்டும் பட முதலாளிகளின் பின்னால் அலைந்துகொண்டிருந்திருந்தால் ஒன்றேனும் படம் எடுத்திருக்கமாட்டார். அல்லேல் நாலு ஃபைட் ரெண்டு குத்துப்பாட்டு என்று எதையாவது எடுக்கவேண்டிய கட்டாயத்தில் காணாமல் போயிருப்பார்.<br /></span><br /><span style="font-size:85%;">ஜான் ஆபிரகாமுக்கு நேரெதிராக இயக்குனர் ஷங்கர் மெகா இயக்குனராக இன்று அறியப்படுகிறார். தமிழின் மிக அதிக செலவாகும் படத்தை இப்போது அவர் இயக்கிவருகிறார். அவரது ஆரம்பப் படங்களில் காதலன் மட்டும் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த படமல்ல, அதில் ஒருசில பகுதிகள்! ஒருவிதமான கவித்துவமான காதல் காட்சிகள் அந்தப் படத்தில் காணும். கவர்னர் மகளை கான்ஸ்டபிள் மகன்... என்கிற அவரது கதையை விட்டுத் தள்ளுங்கள், அவளுக்கு அவன் உணவு தயாரித்துத் தரும் இடம் ஒன்று உண்டு. அப்போது நான் நினைத்தேன். இந்த ஷங்கரால் பொருட்செலவில்லாத அழகான காதல் கதை ஒன்றை கட்டாயம் தர முடியும் என்று. ஆனால் அவரது பாதை முற்றிலும் திரும்பிவிட்டது. ஒரு தயாரிப்பாளராக இப்போது அவர் செய்ய முனைவதெல்லாம் அவரது மனத்தில் உள்ள அந்த அழகான ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் வேலைதான் என்றே தோன்றுகிறது. இருந்தாலும் ஷங்கர் ஒரு விஷயத்தைக் கொஞ்சம் சீரியசாகவே யோசிக்கலாம். ராம்கோபால் வர்மா வளர்ந்துவரும் காலத்தில் மணிரத்னம்தான் எனது மானசீக குருநாதர் என்பதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். ஷங்கர் மணிரத்னத்தைக் காப்பியடிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அவர் கொஞ்சம் கமர்ஷியல் என்பதற்கும் வெளியே ஏன் யோசிக்கக்கூடாது என்பதே எனது கேள்வி! அவரால் முடியாமல் இருந்தால் பரவாயில்லை. அவரால் அது முடியும் என்கிறபோது ஏன் முயலக்கூடாது?<br /></span><br /><span style="font-size:85%;">ரஜினிகாந்த் கால்ஷீட் கிடைக்கிறது என்று சொன்னால் ரஜினிகாந்த்தை எத்தனை காஸ்ட்யூமில் காட்டலாம், எத்தனை லொக்கேஷன்களில் காட்டலாம், எத்தனை நாயகிகளுடன் காட்டலாம், எவ்வளவு கிராஃபிக்ஸ் பண்ணலாம் என்பதாக யோசிப்பதை விட்டுவிட்டு, ரஜினிகாந்த்தின் இதுவரை வெளிவராத முகத்தைக் காட்டலாம், இதுவரை வெளிவந்ததை விட அதிகமான நடிப்பாற்றலைக் கோரும் பாத்திரத்தைக் கொடுக்கலாம், ஹாலிவுட் படங்களைப்போல புத்தம்புதிதான விறுவிறுப்பான ஸ்க்ப்ட்டை ரஜினிகாந்த்தின் தலையில் ஏற்றலாம் என்பதாகவெல்லாம் அவர் யோசித்தால், ஒரே காஸ்ட்யூமில் ஒரே லொக்கேஷனில்கூட ரஜினிகாந்த் ஒரு சூப்பர் படத்தைக் கொடுத்துவிடுவார்.<br /></span><br /><span style="font-size:85%;">சுஜாதா மாதிரி ஓர் எழுத்தாளரையும் கையில் கொடுத்து, ஷங்கர் படத்துக்கு ஆகிற பணத்தையும் செலவு செய்ய ஒருத்தர் தயாராக இருந்தால் இப்போது ஷங்கர் இயக்கும் படங்களைப் போன்ற படங்களை சுந்தர்.சி கூட இயக்கிவிடுவார் என்பதே உண்மை. இந்த உண்மையை இன்னுமா யாரும் ஷங்கரிடம் சொல்லவில்லை?</span>சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8130572.post-70663255186762614232009-04-17T13:23:00.001+05:302009-04-17T13:27:24.872+05:30அன்பார்ந்த உதவி இயக்குனர்களே!<span style="font-size:85%;"></span><br /><p><span style="font-size:85%;">அன்பார்ந்த வாசகரே, உங்களுக்கு எத்தனையோ பேர் எத்தனையோ விஷயங்களில் உதவியிருப்பார்கள். ஆனால் அவர்களின் பெயர்களையெல்லாம் எழுதியா வைத்திருக்கிறீர்கள்? கல்வெட்டு வேண்டாம், ஒரு நாற்பது பக்க ரூல்டு நோட்டிலோ பழைய டைரியிலோவாவது எழுதிவைத்திருக்கிறீர்களா? ஏன் எழுதவில்லை? உங்கள் தலை சாய்ந்த பிறகு சொத்தில் பங்குக்கு வந்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறீர்களா?<br /></span><span style="font-size:85%;"></span></p><p><span style="font-size:85%;">ஆனால் சினிமா உங்களளவு மோசமானதல்ல. நீங்களே பாருங்கள், டைட்டில் கார்டு என்பதாக ஒன்று ஆதியிலும் அந்தத்திலும் அனுசரணையாக அத்தனை படங்களிலும் ஓடுகிறது. அதில் உதவியவர்களுக்கும் ஒரு பட்டியல் உண்டு. நான் சொல்ல வருகிற உதவி, நன்றி என்கிற தலைப்பில், ஊட்டி தாவரவியல் பூங்கா மேலாளர், அமிர்தசரஸ் ஓட்டல் உரிமையாளர், முட்டம் இறைத்தூதராலய போதகர், ஏர்வாடி தர்கா காவல்காரர் என்று எந்தப் பொருத்தமுமில்லாத ஒரு பட்டியல் படத்தின் பெயர் வருமுன்பாக வருகிறதே அதையல்ல! ஆர்ட் டைரக்டர், இசையமைப்பாளர், எடிட்டர், காமிராமேன், இயக்குனர் ஆகியவர்களுக்கு உதவியவர்களின் பட்டியலொன்று காண்கிறதே, அதை உண்மையில் இவர்கள் இல்லையென்றால் சினிமா என்பதாக ஒன்று கிடையாது என்பதை நீங்கள் முதலில் அறிந்துகொள்ளுங்கள். வீட்டில் முள்ளங்கி சாம்பார் தயாரிக்க வேண்டுமானால் ஒரே ஆளே நல்ல சிவப்பு முள்ளங்கியாக வாங்கி வந்து, நறுக்கி, வெங்காயத்தை உரித்து, பருப்பையும் தக்காளியையும் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து, புளியை ஊறவைத்து, மிளகாய் வற்றல், தனியா, அரிசி, மிளகு, தேங்காய் என்று அரைத்து, கடுகையும் வெந்தயத்தையும் தாளித்து, வெங்காயத்தை வதக்கி சாம்பாராக அவற்றை மாற்றிவிட முடியும்.<br /></span></p><p><span style="font-size:85%;">இப்படி அரைப் பாராவில் உருவாகிற சாம்பார் ஒரு வீட்டுக்கு வேண்டுமானால் போதுமானதாக இருக்கும். ஆனால் ஒரு விருந்துக்கு சமைக்க வேண்டுமானால் ஒற்றை ஆள் அதைச் செய்ய முடியுமா? இந்த மாயாபஜார் வித்தை யாராலாகும்! அப்படித்தான் சினிமாவும்!<br />அதிலும் தமிழ் சினிமாவில் இந்த உதவியாளர்கள் என்கிற பட்டியலில் உதவி இயக்குனர்கள் என்பதாக ஒரு தனி இனமே வாழ்ந்து வருவது வருத்தத்துக்கும் வேதனைக்கும் இடைப்பட்ட செய்தி. நானும் அந்த வேலையைச் செய்தவன் என்கிற சகோதர பாவத்தோடே நல்லது கெட்டது இரண்டையும் முன்வைக்க விரும்புகிறேன். அடிக்க வருவதாயிருந்தால் இரண்டு நாட்கள் முன்னதாகச் சொல்லிவிட்டு வரவும். ஏனென்றால் இந்த நடுவுநிலைமை என்பதெல்லாம் திருவள்ளுவர் காலத்திற்கு சரிப்பட்டு வந்திருக்கலாம். அப்போதெல்லாம் பெயிலபிள் நான்-பெயிலபிள் என்கிற பதங்கள் கிடையாது பாருங்கள்!<br /></span></p><p><span style="font-size:85%;">பழைய படங்களின் டைட்டில் கார்டுகளைப் பார்க்கும்போது எனக்குள் ஓராச்சரியம் ஓடும். ஒவ்வொரு படத்திலும் மூன்றிலிருந்து கிட்டத்தட்ட பத்துப் பேர் வரைக்கும் உதவி இயக்குனர்கள் என்பதாகக் காண்கிறார்களே, இவர்களெல்லாம் ஏன் இயக்குனராகவில்லை? இந்தக் கேள்விக்கான பதில், என் பெயரும் அந்தப் பட்டியலில் வந்தபோதுதான் தெரிந்தது.<br /></span></p><p><span style="font-size:85%;">அதை சற்று விரிவாகப் பார்க்கலாம். ஏனென்றால் எந்த ஒரு விஷயத்துக்கும் ஒரே ஒரு காரணம் மட்டும் இருக்க முடியாது. ஒருகோடிப்பேர் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தில் ஓராயிரம் கோடி காரணங்கள் கொட்டிக் கிடக்கக்கூடும்.<br />முதற்கண், உதவி இயக்குனராக வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் இயக்குனராகவேண்டும் என்கிற கனவோடுதான் சினிமாவுக்கு வந்தார்கள் என்று நாம் நம்புவது நமது அறியாமையையே உலகுக்கு உணர்த்தும். இன்றைக்கு பாலச்சந்தரும் பாரதிராஜாவும் எதற்காக நடிகர்களாக மாறினார்கள் என்பதைக் கூர்ந்து நோக்குங்கள். இத்தனை காலம் அவர்கள் கொடுத்த சினிமாக்கள் எல்லாம் அவர்கள் திருப்தியாக எடுத்த படங்கள் அல்ல என்பது நன்றாகவே விளங்கும். அவர்கள் சினிமாக்களை இயக்கியதெல்லாம் நடிகனாக முடியவில்லையே என்கிற ஆதங்கத்தினால்தான்! உண்மை துவர்க்கும்தான் என்ன செய்வது!<br /></span></p><p><span style="font-size:85%;">பாக்கியராஜையே எடுத்துக்கொள்ளுங்கள், அவர் ஒரு நல்ல திரைக்கதாசிரியர், அடுத்தபடியாக ஒரு நடிகர். ஆனால் அவர் இயக்குனராகவேண்டிய காலக்கட்டாயம் இருந்தது. இருந்தாலும் அவருக்கு நடிக்கவும் வாய்த்த வகையில் வாய்ப்புகளை அவர் கொண்டாடத் தொடங்கினார். எஸ்யேசந்திரசேகரின் உதவியாளராக இருந்த இயக்குனர் ஷங்கர் எத்தனை படங்களில் காமெடியனாக அபிநயித்திருக்கிறார் என்பதை உங்களில் பலரும் அறிந்திருக்கவே செய்வீர்கள். செல்வி என்பதாக ஒரு படத்தில் அவர் முழுநீள காமெடியன் என்பதாக ஞாபகம்.<br /></span></p><p><span style="font-size:85%;">இவர்கள் உணர்த்தும் உதாரணம் முதன்மையான வகை. டைட்டில் கார்டில் காணும் உதவி இயக்குனர்கள் என்கிற பட்டியலில் இந்த வகைமையைப் பொருத்திப் பார்த்தால் தொண்ணூறு சதமான பெயர்கள் காணாமல் போய்விடும். இவர்களில் பலரும் குடும்பப் பிரச்சினைகள், காத்திருக்கும் மாமன் மகள் என்கிற அடிப்படைக் காரணங்களுக்காக ஓரிரு படங்களில் அட்மாஸ்ஃபியரில் தலையைக் காட்டிய திருப்தியோடோ, டைட்டிலில் கார்டு வந்தது என்கிற சப்பைக்கட்டோடோ, அல்லது அதுகூட இல்லாமல் ஞாபகங்களில் தேங்கியிருக்கும் பொற்காலத்தை ஒரு மிலிட்டிரிக்காரன் போல வாழ்நாள் முழுக்க சொல்லிக்கொண்டிருக்கலாம் என்கிற வேதனையோடோ விலகிப் போயிருப்பார்கள்.<br /></span></p><p><span style="font-size:85%;">இந்த வம்பை இளைஞர் மனத்தில் வலியச் செலுத்திய பிழை பாரதிராஜா செய்தது என்பதாகவே நான் நினைக்கிறேன். ஏனென்றால் பாரதிராஜாக்கூட்டத்தில்தான் உதவி இயக்குனர்கள் சிறு காட்சிகளில் தலைகாட்டுவது அதிகமாகக் காணப்பட்டது. அந்தப் பரம்பரையிலிருந்துதான், பாக்கியராஜ், மணிவண்ணன், பொன்வண்ணன், லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், பார்த்திபன் என்று பெரும் அபிநயப் பட்டியல் புறப்பட்டது.<br /></span></p><p><span style="font-size:85%;">ஆக, சினிமாவில் உதவி இயக்குனராக இருந்தால் நடிகனாகிவிடலாம் என்கிற அபத்தமான காரணம்தான் டைட்டில் கார்டுகளின் பெரும் இடத்தை நிரப்பிவிடுகின்றன. ஏனென்றால் சினிமாவுக்கு வந்த பிறகே சினிமா என்றால் என்ன என்று தெரிந்துகொள்கிற கூட்டம்தான் இங்கே அதிகம்.<br />அப்படியில்லாமல் உண்மையிலேயே நல்ல சினிமாவுக்கு ஆசைப்பட்டு, தாங்கள் பணியாற்றும் சூழலில் அது சாத்தியமேயில்லை என்கிற நிலைப்பாட்டைத் தெளிந்து வேறு தொழில்கள் தெரிந்த வகையில் இயக்குனர் என்பதாக டைட்டில் கார்டு வராமலே சென்னையிலிருந்து புறப்பட்டுவிட்டவர்களும் சொற்பம்பேர் உண்டு. இந்தப் பட்டியலில் தற்கொலை செய்துகொண்டவர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அவர்களையெல்லாம் காப்பாற்றிக்கொள்ள முடிந்திருந்தால் எமது சினிமா எப்போதோ உய்ந்திருக்கும்.<br /></span></p><p><span style="font-size:85%;">நிதர்சனத்தை உணர்ந்தபோதும் இழந்த இளமையும், பழகிய வறுமையுமாக வேறு வழியில்லாமல், கன்னிமை போன புண்ணியவதி பழக்கத்தின் நிர்ப்பந்தத்தால் பரத்தையாகிப்போவதுபோல குமைந்துகொண்டு சென்னையின் சூட்டையெல்லாம் உடம்பில் வாங்கிக்கொண்டு புழுங்கிக்கொண்டிருக்கும் நண்பர்கள் பலரும் உண்டு. இவர்களின் நிலைமைதான் உண்மையிலேயே துக்ககரமானது. ஏனென்றால் இவர்களுக்கு வேறு தொழில்களும் தெரியாது. அதோடு சினிமாவில் வேலை பார்த்தவன் என்று சொன்னால் ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தவன் என்பதைப்போல இவர்களின் சமூகம் இவர்களைப் பார்க்கக்கூடும். ஜெயிலுக்குக் போவதைவிடவும் சினிமாவுக்குப் போவது கொடுமையானது என்பதாகவும் ஓர் எண்ணப்பெருக்கு உண்டு. ஏனென்றால் ஜெயிலுக்குப் போனவன் திருந்தி வருவான், சினிமாவுக்குப் போனவன் கெட்டு வருவான் என்கிற எண்ணப் பதிவை ஒரு சந்ததியின் அத்தனை மூளைகளிலிருந்தும் அகற்றுவது அத்தனை சுலபமானதல்ல.<br /></span></p><p><span style="font-size:85%;">இப்போது எம்பியே படித்த மணிரத்தினம் எம்பியே படித்தவர்களை மட்டும்தான் உதவி இயக்குனர்களாக வைத்துக்கொள்கிறார் என்பதாகச் சொல்கிறார்கள். அப்படிப் பார்த்தால் டாக்டர் ராமதாஸ் இயக்குனரானால் எம்பிபியெஸ் படித்தவர்களை மட்டும்தான் உதவிக்கு வைத்துக்கொள்வார் என்பதாகவே தெரிகிறது. இப்படியெல்லாம் சட்டம் போட்டிருந்தால் பாலச்சந்தரும் பாரதிராஜாவும் தனியாளாகத்தான் சாம்பார் தயாரித்திருக்க வேண்டும். எம்பியேவாவது வெறும் பியேவுக்கே அப்போது வகையில்லை. பியே படித்தால் பாங்க்கிலோ, கருவூலத்திலோ வேலை காத்திருக்கும்போது என்னத்துக்கு சினிமாவுக்கு பிள்ளையை அனுப்பவேண்டும் என்கிற நிலைப்பாடே அப்போது இருந்தது. நான் வேலை பார்த்த யூனிட்டில் எனக்கு மட்டும்தான் இங்லீஷ் தெரியும் என்பதாக மொத்த யூனிட்டே முட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருந்தது. ஒரு காலேஜ் ட்ராப் அவுட்டுக்கே அவ்வளவு மரியாதை!<br /></span></p><p><span style="font-size:85%;">இந்த வெகண்டையையெல்லாம் விட்டுவிட்டுப் பார்த்தால், இப்போது காலம் முற்றிலும் மாறிவிட்டது. இன்ஸ்ட்டிட்யூட் மாணவர்கள் என்றால் கலைப்படங்கள்தான் எடுப்பார்கள் என்பதை ஆபாவாணன் முதலானவர்கள் உடைத்துக் காட்டிய பிறகே தமிழ் சினிமாவில் டியெஃப்டி எனும் படிப்பு டைட்டில் கார்டுகளில் தென்படத் தொடங்கியது. ஆனால் அப்போதும் உதவி இயக்குனர்கள் என்கிற பட்டியலில் அந்தப் படிப்புக்கான வாசனையும் இல்லை. இப்போது அந்தச் சூழல் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கிறது.<br /></span></p><p><span style="font-size:85%;">உதாரணமாக கோவையில் எனது நண்பர் ஜீவாவின் மகன் ஆனந்த், விஷுவல் கம்யூனிகேஷன் முடித்தார். அடுத்தது சினிமாவுக்குள் இறங்கப்போகிறார் என்று பார்த்தால், சென்னை ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட்டில் ஒளிப்பதிவாளருக்கான படிப்பில் சேர்ந்தார். எனக்கு ஆச்சரியம். அதையும் முடித்துவிட்ட பிறகே, நீரவ்ஷாவிடம் தற்போது உதவி ஒளிப்பதிவாளராக இணைந்திருக்கிறார். என்னுடைய ஆச்சரியம் என்னவென்றால், ஜீவாவின் சொந்தத் தம்பி இந்தியில் முன்னணி காமிராமேன்! ஷாரூக்கானின் ஆல்டைம் ஃபேவரிட்டான மணிகண்டன்! என் சித்தப்பாவெல்லாம் இப்படி இருந்திருந்தால் நான் எஸ்ஸெஸ்ஸெல்ஸி கூட தேறியிருக்க மாட்டேன். (வாரிசு நடிகர்களைப் போல!)<br /></span></p><p><span style="font-size:85%;">ஆக, இந்த மாற்றங்கள் நல்லவையே! சென்னைக்குப் போகிற ரயிலில் ஏறினால் சினிமாவில் சேர்ந்துவிடலாம் என்பதாக இளைஞர்கள் நினைத்த காலம் இப்போது மலையேறிவிட்டது என்பதையே இது உணர்த்துகிறது. போகிற வழியில் போனால்தான் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச்சேர முடியும் என்பதோடு போகிற இடம் என்பதும் என்ன என்பது தெரிந்திருக்க வேண்டும் என்பதையும் இது வலியுறுத்துகிறது.<br /></span></p><p><span style="font-size:85%;">டூரிஸ்ட் விசாவை வைத்துக்கொண்டு மலேஷியாவில் பதுங்கி, கிடைத்த வேலையைப் பார்த்து காசு சம்பாதிக்கலாம் என்கிற மனோபாவம் போன்றதுதான் சினிமாவில் என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியாமலே சினிமாவுக்குப் போவதும். அப்படிப் போனவர்களில் பலரும்தான் உதவி இயக்குனர் என்கிற மாயமான வலையில் விழுந்து ஊரும் பேரும் சீரும் கெட்டு திசைகளின் நடுவில் திக்கித்து நின்றுகொண்டிருப்பவர்கள்.<br /></span></p><p><span style="font-size:85%;">சென்னையில் வாழும் பல உதவி இயக்குனர்களைப் பற்றியும் பொதுவாக ஒரே விதமான கருத்தே நிலவுவதும் இதனால்தான். உதாரணமாக என்னுடைய எழுத்தாள நண்பரொருவர் அடிக்கடி சொல்வார், இந்த அசிஸ்டென்ட் டைரக்டர் என்பவன் அதைச் சொன்னான் இதைச் சொன்னான் என்று என் எழுத்தைக் குறை கூறினால் கொன்னேபுடுவேன் என்று! அவர் பெயர் வேண்டாம். ஏனென்றால் இருதய நோயாளிகளை இரும்புக்கம்பியால் தாக்குவது இறையாண்மைக்கு அழகல்ல!<br /></span></p><p><span style="font-size:85%;">என் திரையுலக நண்பர்களில் பலரும் இவ்விதமான கருத்தாக்கத்தால் தாக்கப்பட்டு வருவதுண்டு. வருத்தமாகத்தான் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் எழுதிய ஸ்க்ரிப்ட்டை இன்றைக்கும் கையில் சுமந்துகொண்டு அலையும் பல நண்பர்களையும் நான் பார்த்திருக்கிறேன். ஒருவேளை உங்களுக்கு ஒரு ப்ரொட்யூசர் கிடைத்து அதைப் படமாக்கினால் அதோடு முடிந்தது உங்கள் சோலி என்று திரும்பத் திரும்ப அவர்களிடம் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். அப்போதெல்லாம் அவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பழித்ததுபோல என்னைப் பார்க்கிறார்கள். சமீபத்தில் வெளியான ராமேஸ்வரம் என்கிற படத்தை அவர்களுக்கு உதாரணமாகத் தருகிறேன். பழைய ஸ்க்ரிப்டுகளை தூசி தட்டினால் அந்தப் படத்துக்கு நேர்ந்ததுதான் உங்களுக்கும் நேரும்!<br /></span></p><p><span style="font-size:85%;">காலம் கடுமையாக மாறிக்கொண்டிருக்கிறது. படித்த இளைஞர்களோடு இப்போது நீங்கள் போட்டி போட வேண்டும். துறை சார்ந்த படிப்பு, இளமை என்கிற இரண்டு கண் துப்பாக்கியை அவர்கள் கஸாபைப்போல கையில் வைத்திருக்கிறார்கள். அவர்களோடு போட்டி போட உங்களிடம் இருப்பது அனுபவம் என்கிற பீரங்கி. ஆனால் அதனை ம்யூசியத்திலிருந்து நீங்கள் மீட்டுக்கொண்டு வந்தால்தான் காரியம் ஆகும்!</span></p>சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8130572.post-15155810133859336612009-04-17T13:20:00.002+05:302009-04-17T13:23:33.063+05:30பாட்டெழுத்துப் பாரம்பர்யம்<span style="font-size:85%;">சின்னஞ்சிறு துளியில் ஒரு உலகம் உருவாகும் என்று ஒரு பாடல் உண்டு. இந்தப் பாடல் ஒரு தமிழ் சினிமாவில் வந்ததுதான் என்றபோதும் பெரும்பாலும் யாருக்கும் நினைவிருக்க வாய்ப்பில்லை. பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தில் இந்தப் பாடல் வந்தது. ஆயினும் ஞாபகத்தில் தேங்காததற்குக் காரணம் இந்தப் பாடல் இசையமைக்கப்பட்டு அந்தப் படத்தின் பாடல் தொகுப்பில் இணைக்கப்படாததுதான்.<br />கதையின் நாயகன் சினிமாப் பாட்டெழுதும் ஆசையில் பட்டணம் வந்து கம்பெனிகம்பெனியாக ஏறி இறங்குகிறான். கடைசியாக அவனுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு தயாரிப்பாளர் அவனை பாடல் சொல்லச் சொல்கிறார். அந்தநேரத்தில் அவனுக்கு ஒரு வரியும் வந்து தொலைய மாட்டேனென்கிறது. சரி, முகத்தை கிகத்தைக் கழுவிக்கொண்டு வா, பதட்டம் தணியும் என்று அவனை குளியலறைக்குள் அனுப்புகிறார்கள். அங்கே ஷவரிலிருந்து தண்ணீர் சொட்டுச் சொட்டாக விழுந்துகொண்டிருக்கிறது. அந்தச் சொட்டுக்களிலிருந்து வெள்ளமெனப் புறப்படுகிறது அவன் மனத்தில் கவிதை. ஷவரில் நனைந்த கோலத்தில் அவன் மேற்சொன்ன வரிகளைப் பாடியவனாக அந்த அறைக்குள் பிரவேசிக்கிறான். அவ்விதமாகஅவனது கலைப்பயணம் தொடங்குகிறது.</span><br /><span style="font-size:85%;"><br />இது பாரதிராஜாத்தனமான காட்சி விஸ்தரிப்பானாலும், ஒரு பாடல் என்பதன் இன்ஸ்பிரேஷன் எங்கிருந்தெல்லாம் கிடைக்க முடியும், கவிஞனின் எவ்விதமான மனநிலை ஒரு நல்ல பாடலைக் கொடுக்க முடியும் என்பதற்கான ஒரு எளிய உதாரணமாகசொல்லப்பட வேண்டியது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.<br /><br />இப்போது ஒரு பாடலைப் பார்க்கலாம், சிறுபொன்மணி அசையும், அதில் தெறிக்கும் புது இசையும். இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்ஙு இந்த வரிகள் எந்த மாதிரியான உன்னதப் பொழுதில் கவிஞனின் மனத்தில் உதித்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இப்படியொரு வரிஎழுதிக்கொண்டிருக்கும்போது கவிஞனிடம் ஒரு கத்தியைக் காட்டினாலும் குத்திவிட்டுப் போ என்றுதான் சொல்வான் என்பதே உண்மை.சும்மாவேணும் மனத்தின் அசைக்கு ஏற்பப் பாடல் எழுதும்போதே மனம் இத்தனை உற்சாகம் கொள்ளும் என்று சொன்னால், இசையின் அசைக்கும் ஏற்ப இந்தமாதிரியானஅற்புதமான வரிகளைப் பிரசவம் செய்ய முடிகிற பொழுதுகள்தானே கவிஞனின்உச்சக்கட்ட வாழ்க்கைப் பொழுதுகளாக இருக்க முடியும்!<br /><br />சிறுபொன்மணி போன்ற பாடல் இன்றைக்கு ஏன் எழுதப்படுவதில்லை? காலமாற்றம்சினிமாக் கவிக்குள்ளும் நுழைந்து கவித்துவத்தைக் களவாடிக் கொண்டுவிட்டதா?அல்லது கவிஞன் தன் கலையுச்சம் முடிந்து கீழே இறங்க ஆரம்பித்துவிட்டானா?அப்படியானால் இன்னொரு கவிஞன் உச்சநிலையை எட்டுவது ஏன் சாத்தியமற்றுப்போயிருக்கிறது?<br /><br />சாதாரணமாகவே எல்லோரும் குறிப்பிடும் பாடலான வைரமுத்துவின் விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே, வைரமுத்துவின் உச்சம் என்றே தோன்றுகிறது. இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுது என்று சொல்லும்போது அந்த உரசலில்தான் கவிதை ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறது. பகலும் இரவும் உரசினால்தானே அந்திப்பொழுது, இரவும் பகலும் உரசுவது அதிகாலைப் பொழுதல்லவா என்றெல்லாம் லாஜிக் பேசக்கூடாது. உதாரணமாக என் முந்தைய கட்டுரையில் ஜெயமாலினியின் நடனப் பாடல் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தேன். அன்னை ஓர் ஆலயம் படத்தில் வந்த இரவு நேரம், நிலவு காயும்... என்கிற பாடல். நல்லகாலமாக திரும்பவும் அந்தப் பாடல் பார்க்கக் கிடைத்தது. என் ஞாபகத்தில் உள்ள 'லாஜிக் பேழை"யால் நேர்ந்த பிசகு அப்போதான் தெரியவந்தது.<br /><br />இரவு நேரம் நிலவு காய்வதில் என்ன கவிதை இருக்கிறது? பாடல் இவ்விதமாக இருக்கிறது, 'நிலவு நேரம், இரவு காயும்.' இதுதானே கவிஞனின் வேலை. இரவு நேரத்தில் நிலாக்காய்கிறது என்கிற லாஜிகல் மனோபாவம் அவ்விதமாகக் கவிதையைத் தவறாக மனத்தில் பதித்திருக்கிறது. கவிஞனுக்கு லாஜிக் தேவையில்லை. அது கதாசிரியனுக்கும் திரைக்கதாசிரியனுக்குமானது. அவர்கள்கூட ஒருசில காட்சிகளின் கவித்துவநிலைக்காக லாஜிக்கை தந்திரமாக மீறுவது உண்டு என்கிறபோது கவிஞனிடம் எதற்கு இந்த விதண்டாவாதம்!<br /><br />இருந்தாலும் அறிவியல்தான் வளர்ந்துகொண்டே போகிறதே தவிர, கலை தேய்ந்துகொண்டேதான் போகிறது என்கிற உலகியல் நடப்பின்படிக்கு கம்பன்,<br />இளங்கோ, பாரதி என்று வந்த வம்சம் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, பா.விஜய் என்று படிப்படியாகத் தேய்ந்துகொண்டேதான் போவது தவிர்க்க இயலாததுதான். நுகர்வாளனின் ரசனை காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே போகையில் அதன் தரமும் தேய்ந்துகொண்டே போவதுதான் கொடுமை. அதற்குக் கவிஞன் என்ன செய்வான் பாவம்!<br /><br />கோவையில் வெள்ளியங்காட்டான் என்று ஒரு கவிஞர். அவர் இறந்தபிறகு அவரதுமகளின் முனைப்பால் அவரது கவிதைகளை வெளியிட்ட பணியில் நானும் இருந்தேன்.புத்தக ஆக்கத்துக்காகத்தான் அந்தக் கவிதைகளை வாசித்தேன் என்றபோதும் பாரதியின் சாரம் அப்படியே அதில் இருந்தது கண்டு வியந்து போனேன். சிறுபிரதேசத்தில் வறுமையின் பிடியிலும் வைராக்கியத்தை இழக்காமல் கவிஞன் என்கிற அகம்பாவத்தோடு வாழ்ந்து முடித்த அந்தக் கவிஞன் சினிமாவுக்கு பாட்டெழுதியிருக்க முடியுமா?<br />சினிமாப் பாடல் என்பது சிலருக்கு மிகவும் சுலபமானது. அதைக்காட்டிலும் பல உன்னதங்களை செய்து காட்டிவிடும் சிலருக்கோ மிகவும் புதிரானது. இன்றைய திரைக் கவிஞர்கள் பொதுவாக நவீன கவிதை குறித்த பிரக்ஞையை புரியாமொழி, அனாவசியமான புதிர்மொழி என்பதாகவெல்லாம் புரிந்துகொள்ள முடியாமல் எப்படி தவிர்த்தே வருகிறார்களோ (இதற்கு நாமுத்துக்குமார் விதிவிலக்காக இருக்கக்கூடும்), அதேபோல்தான் நவீன கவிஞர்களும் சினிமாப் பாடல்களைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள்.<br />பாட்டெழுத்து பெரிய வித்தையொன்றும் இல்லை என்றபோதும் பெரும்பாலான நவீனகவிஞர்கள் சந்தம் அசை என்று ஒரு இளவும் தெரியாமல் கவிதை எழுதிக்கொண்டிருப்பதே இதற்கான காரணம். மாடர்ன் ஓவியங்கள் வரைகிற ஓர் ஓவியரை உங்கள் முகத்தை வரைந்துகொடுக்கச் சொல்வதுபோல இது. நல்ல நவீன ஓவியன் ஓவியத்தின் அடிப்படைகளும் தெரிந்தவனாகவே இருக்கிறான் என்பதால் அவனுக்கு அது இடதுகை செய்கிற வேலை. இதேபோல்தான் நவீன நாட்டியங்களை நிகழ்த்தும் கலைஞர்கள் பாரம்பர்ய நாட்டியங்களை அறிந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் நவீன கவிஞர்கள் வெண்பா எழுத வேண்டாம், குறைந்தபட்சம் சந்தம் என்றால் என்ன என்பதுகூட தெரியாமலா இருப்பது?<br /><br />சிலவருடங்களுக்கு முன்னால் மரபுக்கவிதை மற்றும் சந்தக் கவிதை மட்டுமே புனையும் நண்பரொருத்தரிடம் எழுத்தாளர் ஜெயமோகன் நவீன எழுத்தார்களை நான் அழைத்து வருகிறேன். அவர்களுக்கு செவ்விலக்கியத்தை அறிமுகம் செய்துவையுங்கள் என்று கேட்டுக்கொண்டார். கேட்டுக்கொண்டதோடு முடிந்துபோன விஷயம் அது. கட்டுச் சோத்துக்குள் பெருச்சாளியைக் கட்டிவைக்க சந்தக் கவிஞனும் விரும்பமாட்டான், தன் சுதந்திரத்தை இழந்து கட்டுச் சோத்துக்குள் பொதிந்துபோக நவீன கவிஞனும் விரும்பமாட்டான் என்பதைத்தான் காலம் அறியுமே!<br /><br />மலையாளத்தில் உள்ளதுபோல் நவீன கவிதையும் பாடத்தகுந்த சந்தக் கவிதையாகவேஇருக்க வேண்டும் என்கிற கோஷத்தோடு தமிழகம் முழுக்க வலம் வந்துகொண்டிருந்தகும்பகோணம் சிலிக்குயில் வே மு பொதியவெற்பன்தான் என் நினைவுக்குவருகிறார். ஆரண்யம் வெளிவந்துகொண்டிருந்த சமயத்தில் அவர் எங்களை வந்துசந்தித்தார். ஒருநாள் எங்களோடு தங்கியிருந்தார் (எங்கள் என்பது நானும் ஸ்ரீபதி பத்மநாபாவும் என்பதை ஒபாமா கூட அறிவார்!). அப்போது அவரது இந்தப் பிரகடனம் எனக்கு சிரிப்பையே வரவழைத்தது. நவீன கவிதை என்பது மிகவும் நுணுக்கமானது மற்றும் மிகவும் சுதந்திரமானது. சந்தக்கவிதை மற்றும் மரபுக் கவிதை என்பது சந்தம் மற்றும் மரபு என்கிற அடைப்புகளின் காரணமாகவே வேண்டாத வார்த்தைகள் நிறைந்தது என்பதாக இருந்தது என்னுடைய வாதம்.<br />பிற்பாடு சாம்பல் என்று நான் கொண்டுவந்த இதழில் நுண்கவிதை என்பதாகக்கூடஒரு வடிவத்தை முன்வைத்தேன். நேனோட்டரி (நேனோ பொயட்ரி என்பதன் சுருக்கம்)என்பதாக அதற்கொரு ஆங்கிலக் கலைச்சொல் வேறுஙு (உலக அளவில் போகும்போதுஉதவும் பாருங்கள்!) அனந்தஷங்கர், லக்ஷ்மி மணிவண்ணன், பாலைநிலவன்ஆகியவர்களின் சில கவிதைகள், நுண்கவிதைகள் என்றும், யவனிகாஸ்ரீராம்,சிபிச்செல்வன், மகுடேசுவரன் முதலானவர்களின் கவிதைகள், கவிதைகள் என்றும்அதில் வெளிவந்தன. அவற்றை வாசித்துப் பார்க்குங்கால் நான் முன்வைத்தநுண்கவிதை என்பதன் நுட்பம் புரியும். சாம்பல் நின்றதோடு இந்த அடைப்பும்முடிந்துபோய்விட்டது. நவீன கவிதை நவீன கவிதை என்று உயிரை விடுபவர்கள்இதைக்குறித்து ஒரு அறிக்கைகூட விடவில்லை என்பதே அவர்கள் கொண்டுள்ளஅக்கறைக்கான நல்லுதாரணம்!<br /><br />ஆனாலும் இந்த அனுபவங்களின் பிறகே பொதியவெற்பனின் ஆதங்கம் புரிகிற மாதிரிஇருந்தது. இப்போது தபூசங்கர், வைரமுத்து முதலானவர்கள் எழுதுகிற பாணியில் எழுத ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தும் புரியாமலும் நவீன கவிதைகளுக்குள் பிரவேசித்து, பின் மரபுக் கவிதை வெண்பா என்பனவற்றின் முக்கியத்துவத்தையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் தண்டியலங்காரத்தைக் கையில் வைத்துக்கொண்டு வெண்பா, கோமூத்ரி, எட்டாரைச் சக்கரம், நாகபந்தம் என்ற எழுதிப் பார்த்து, சில ஆல்பங்களுக்குப் பாட்டெழுதி, நவீன கவிதைகளின் பல சாத்தியங்களையும் முனைந்து பார்த்துவிட்டு திரும்பிப் பார்த்தபோது இது சரி இது தவறு என்கிற முடிவுக்குள் என்னால் வந்து சேர்ந்திருக்க முடியவில்லை.<br /><br />நாவலாசிரியர் நாஞ்சில்நாடனின் ஒரே கவிதைத் தொகுப்பான மண்ணுள்ளிப் பாம்புவெளியீட்டில் அவரது கவிதைகள் அவுட் டேட்டட் என்று குறிப்பிட்ட எனது தைரியம் இப்போது சருக்குகிறது. எது கவிதை எது கவிதையில்லை என்பதை யார் தீர்மானிப்பது? உங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. ஒன்று ஆணாயிருக்கிறது இன்னொன்று பெண்ணாயிருக்கிறது. மற்றதுதிருநங்கையாயிருக்கிறது. இதில் எது உசத்தி எது தாழ்த்தி? உங்கள்கண்ணுக்கு மூன்றும் சமானந்தானே!<br /><br />நாஞ்சில் நாடன் உட்பட சில நவீன எழுத்தார்கள், விரைவில் வெளிவரவிருக்கும் படமொன்றுக்கு இளையராஜா இசையில் தலைக்கொன்றாகப் பாட்டெழுதியிருக்கிறார்கள். என் கணிப்பில் சுலபமாக இந்த வேலையைச்செய்தவர்கள் ஜெயமோகன் மற்றும் எஸ்ராமகிருஷ்ணன் ஆகியவர்களாகத்தான் இருக்க வேண்டும். நாஞ்சில்நாடனுக்கு கண்டிப்பாக கண்ணாமுழியெல்லாம் பிதுங்கியிருக்க வேண்டும் என்பதே எனதுஅனுமானம்.<br />பொதியவெற்பன் இதைத்தான் சொல்கிறார். அவரால் கண்டிப்பாக சினிமாச் சந்தத்துக்கு சிறப்பாக பாடல் எழுதிவிட முடியும் என்பதாகவே நான் நம்புகிறேன். இளையராஜாவுக்கு யாராவது கும்பகோணத்துக்கு டிக்கெட் வாங்கித் தாருங்கள்!</span><br /></span>சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8130572.post-36203285950130441412009-04-17T13:14:00.002+05:302009-04-17T13:18:12.152+05:30குதிப்பதுவே! மிதப்பதுவே! குலுங்குவதே!<span style="font-size:85%;">இந்தக் கட்டுரைத் தொடரின் வெகுமுதல் பாராவை அலங்கரித்த ஒருசில அற்புதங்கள் பின்வருவன... </span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-size:85%;">ஜெயமாலினியின் இடுப்பு, ஜோதிலட்சுமியின் அலட்சிய ஆட்டம், சில்க் ஸ்மிதாவின் கண்கள், அனுராதாவின் தொடைகள்...<br />இந்தப் பட்டியல் இன்னும் நீளக்கூடியது. விஜயலலிதாவின் கபடம், டிஸ்கோ சாந்தியின் ஆண்மை, குயிலியின் கள்ளத்தனமான புன்னகை, பபிதாவின் பின்பக்கம், ஷர்மிலியின் முன்பக்கம், ஷகிலாவின் சதைப்பிளவுகள்...<br />எத்தனை முறை சொன்னாலும் ஆண்களின் நாக்கில் எச்சிலையும் பெண்களின் வாக்கில் எரிச்சலையும் ஊற வைக்கிற பட்டியல் இது.<br /></span><br /><span style="font-size:85%;">ஹெலன் கிலன் என்று இந்திப் படங்களைப் பார்த்துதான் தமிழிலும் இந்த மாதிரியான ஒரு வகைமை உற்பத்தி செய்யப்பட்டது. சாதாரணமாக பார்களில் நடக்கிற காபரே நடனமாகவே இவை ஆதிகாலத்தில் உற்பத்தி செய்யப்பட்டன. அதன்பிறகு விவாதக்குழுக்களின் சால்ஜாப்பு வாதங்களில் இவ்வாறு அவை திரிந்திருந்தன. அதாவது பார்கள் அல்லது காபரேக்கள் என்பது ஹீரோக்கள் போகிற இடமல்ல. அது வில்லன்கள் போகிற இடம். அந்த இடங்களில் அவிழ்த்துப் போட்டு ஆடுகிற பெண்கள் காணப்படுவது சகஜம். அப்படியானால் வில்லன்கள் இன்னும் கொஞ்சம் வசதியாகிறபோது தங்களுக்கென்று அந்தப்புரம்போல சில இடங்களை நிர்மாணித்துக்கொண்டு அந்தப் பெண்களைத் தங்கள் பங்களாவிலோ அல்லது அண்டர் கிரவுண்ட் ஃப்ளோர்களிலோ ஆட வைக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அதிலும் அகில உலக கடத்தல் மன்னர்களின் மாநாடு பகிரங்கமாக ஒரு பொதுவான பாரில் எப்படி நடக்க முடியும்? அப்படி ரகசியமாக நடக்கிற மாநாட்டில் மதுவும் மாதுவும் ஆட்டமும் பாட்டமும் இல்லாமல் எப்படி இருக்க முடியும்? இந்த நியாயமான காரணங்களால் வில்லன்களின் இருப்பிடங்களிலேயே கற்பிலாப் பெண்டிர் காலிற் சலங்கைகளும் இல்லாமல் சதிராடுவதில் என்ன தப்பு இருக்க முடியும்? </span><br /><br /><span style="font-size:85%;">இப்படியெல்லாம் யோசிக்கப்பட்டு யோசிக்கப்பட்டு காபரே பார்களிலிருந்து மாளிகை செட்டுகளுக்கு வந்து சேர்ந்தார்கள் எங்கள் கவர்ச்சிக் கன்னியராம் கனவுக்கன்னிகள்! அதன் அடுத்த டெவலப்மென்ட்டாக அவர்கள் கதையின் மற்ற பாத்திரங்களின் மீது லைவ் பாம்களாக ஏவப்பட்டார்கள். அவர்களில் ஹீரோக்கள் முதல், பணக்காரர்களான ஹீரோக்களின் அப்பாக்கள், சகோதரர்கள் என்று யாரும் விதிவிலக்கல்ல. அந்தப் பெண்களின் வேலை ஏவப்படுபவனின் உடன் இருந்து, ஆட்டமாடிப் பாட்டுப்பாடிக் காட்டக்கூடாததையெல்லாம் காட்டிக்காட்டி அவனை அப்படியே வசப்படுத்தி, குறிப்பிட்ட இடத்துக்குக் குறிப்பிட்ட நேரத்துக்குக் கூட்டிச் சென்று சேர்க்கவோ, பத்திரங்களில் கையெழுத்து வாங்கவோ, அல்லது இன்னும் அடுத்த கட்டமாக, தங்கள் கையாலேயே கொன்றுவிடவோ செய்வதுதான்!<br /></span><br /><span style="font-size:85%;">இவர்களுக்கு பிற்பாடு தவறாமல் ஒரு கடமையும் வழங்கப்பட்டது. உச்சக் காட்சியில் வில்லனும் ஹீரோவும் நேராக மோதும்போது இவர்கள் டைட்டாக கால்சராய் அணிந்துகொண்டு ஹீரோயினோடு கட்டிப் புரண்டு சண்டை போட வேண்டும். இந்த விதிக்கு ஆங்கிலப் படங்களும்கூட விலக்கல்ல.<br />அதுவும் போனால் சில நேரங்களில் இவர்கள் ஒரு அயோக்கியத்தனத்தைச் செய்துவிடுவார்கள். ஹீரோவின் நல்ல மனத்தைப் பார்த்தோ, அல்லது வில்லனிடம் அடிமையாக இருப்பது பிடிக்காமலோ, உள்குத்தாக வில்லன் அவர்களின் உறவினர்கள் யாரையாவது ஒளித்துவைத்து டபுள்கேம் ஆடுகிறான் என்பதாலோ, கடமை தவறி, ஹீரோவுக்கு வில்லன் குறித்த ரகசியங்கள் சிலவற்றைத் தெரியப்படுத்திவிடுவார்கள். இவ்வாறு அவர்கள் நடந்துகொண்டால் நாம் உடனே கொஞ்சம் வாய்க்கரிசியும் ரெண்டு லிட்டர் பாலும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.<br /></span><br /><span style="font-size:85%;">அழகு எப்போதுமே ஆபத்தானது என்பதன் அடையாளமாகவே இந்த மாதிரி பெண் பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டன என்று சினிமா சப்பைப்கட்டு கட்டக்கூடும் என்று என்னால் எழுத முடிவில்லை. அப்படி எழுதினால் அது உண்மையாகாது. ஆரம்பத்திலிருந்தே நடிகைகளை அவிழ்த்துக் காட்டுகிற ஆசையில்தான் சினிமா குறியாக இருந்தது. சாதாரணமாக வீதியில் முந்தானை விலகினால் அத்தனை கண்களும் அந்தப் பக்கம் திரும்புவதன் அடுத்த பரிமாணமே இது. ஆகவே இது மிகவும் இயல்பானதே! சினிமாக் கலைஞனின் வேலை என்ன, எது பார்வையாளனைக் கவருகிறதோ அதை அவனுக்குக் கொடுக்க வேண்டியது! முலைகள் கவர்ந்தால் முலைகளைக் கொடுத்துவிடவேண்டியதுதான்! தொப்புள் கவர்ந்தால் அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிவிடவேண்டியதுதான், அல்குல் சென்சாரால் தடை செய்யப்பட்ட பகுதி என்பதனால் அதன் குறியீடாகவே இந்தத் தொப்புள் பல படங்களிலும் செயல்பட்டு வந்திருக்கிறது.<br /></span><br /><span style="font-size:85%;">அதோடு ஒரு கவர்ச்சி நடிகை நடனமாடும்போது வெறும் நடனம் மட்டுமா நடக்கிறது? குதிப்பதுவே! மிதப்பதுவே! குலுங்குவதே! என்று ஒரு வசந்த விழாவே அல்லவா நடந்தேறுகிறது! சாதாரணமாக பாட்டுவந்தால் தம்மடிக்கப் போகிற தம்பிகள் யாரையாவது இந்தப் பாடல்களில் வெளியே போகச் சொல்லுங்கள் பார்க்கலாம், தம்முக்கு பதிலாக விரலை வாயில் வைத்துக்கொண்டு விசிலடித்துக்கொண்டிருக்கும் அவர்களின் காதுகளில் உங்கள் வார்த்தைகள் விழுவது சாத்தியமேயில்லாத ஒரு விஷயம்.<br /></span><br /><span style="font-size:85%;">இதனாலேயே கவர்ச்சி நடிகைகள் என்கிற வம்சமொன்று எமது மொழியிலும் உற்பத்தி செய்யப்பட்டது. அவர்கள் துணிச்சலானவர்கள் என்பதாக பரவலாக ஒரு கருத்து வேறு! இதில் எதிர்பாராத விதமாக அவுட் டோரில் நடக்கிற ஒரு ஷுட்டிங் ஸ்பாட்டில் ஜெயமாலினியோ சில்க் சுமிதாவோ நடித்துக்கொண்டிருந்தால் அந்த இடத்தில் பெரும் காத்திருப்பு நிகழும். நடிகை ஒரு குடைக்குக் கீழே காணும் மடக்கு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாள். அவளது உடம்பை ஒரு போர்வை முழுவதும் போர்த்தியிருக்கிறது. இந்தக் கோலத்திலேயே அவள் கிட்டத்தட்ட ஒருமணிநேரம் உட்கார்ந்திருக்கிறாள். மத்த படவாக்கள் எல்லாம் காமிராவைத் தூக்கவும், வைக்கவும், ட்ராக்குகள் போடவும் கீடவும், லைட்டுகளை நிறுத்தவும் கொள்ளவுமாக ஏதேதோ செய்துகொண்டிருக்கிறார்கள். நடிகையைக் கூப்பிடுகிற வகையாகவும் இல்லை, அவள் அந்தப் போர்வையை விலக்குவதாகவும் இல்லை. வெய்யிலானால் சுட்டெரிக்கிறது. அதைவிடவும் அதிகமாக உள்ளேயிருந்து ஒன்று சுட்டெரிக்கிறது. போர்வைக்குள் அவள் அணிந்திருக்கும் ஆடை எந்த அளவுக்கு சிறியதாக இருக்கும் என்கிற மனநெருப்பு தகதகவென்று எரிந்துகொண்டிருக்கிறது. இந்த சொப்பன உச்சத்திலேயே ஸ்கலிதமாகிவிடும்போல இருக்கிறது. கடைசியாக ஒருவழியாக ரெடி என்று ஒரு ஓசை கேட்கிறது. அதைத் தொடர்ந்து திருப்பதியில் பிரம்மோற்சவம் நிகழ்வதுபோல மாபெரும் மனிதக்கூட்டத்தின் கோஷம் வானைப் பிளக்கிறது.<br /></span><br /><span style="font-size:85%;">இந்த அவலத்தை பலரும் பலவிதமாகக் கதைத்துக்கொண்டிப்பார்கள். சினிமாவிலேயே அவிழ்த்துப் போட்டு ஆடுகிறாள், நேரில் காட்டினால் என்ன? அந்தப் படுபாவிகளுக்கு அவர்கள் சொல்ல விரும்பும் பதில் இப்படி இருக்கலாம், சினிமாவில் பாம்பு கடிக்கிறது என்பதற்காக உண்மையில் அதைக் கூப்பிட்டு நாகமே நாகமே ஒரு நக்கு நக்கிவிட்டுத் தீண்டு என்று சொல்ல முடியுமாடா முட்டாள் காமுகர்களா!<br /></span><br /><span style="font-size:85%;">நீண்ட நெடும்காலம் இருந்துவந்த இந்த நடனப் பாரம்பரியம் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்தது. டைட்டில் கார்டில் ஹீரோ பெயருக்கப்புறம் கவர்ச்சி நடிகையின் பெயர்தான் கைதட்டல் வாங்கி வந்திருந்த சாதனை ஒருநாள் முறிந்தது. நாயகிகளின் கண்கள் மாரியம்மனின் கண்கள் போல திறந்துகொண்டன. அவர்கள் ஏகாந்தத்திலும் அந்தரங்கப் பொழுதுகளிலும் தங்கள் உடலைத் தாங்கள் பார்க்கவும் மற்றவர்கள் பார்த்துச் சொல்லவும் அறிந்துகொண்டார்கள். இப்படி திண்ணென்று இவ்வுடம்பு இருக்கும்போது இன்னொரு உடம்பு வந்து என்ன, காசையும் ரசிக உள்ளங்களின் மனசையும் கொள்ளை கொண்டு போவது என்று அப்போது அவர்களின் மனங்களில் ஒருவிதமான மயக்கம் தோன்றியது. அது ஒருவழியாக நிலைபெறவும் செய்தது. ஸ்ரீப்ரியா முதலான நாயகிகள் முலைகளின் பிளவுகளை ஜீனத் அமன்களை அடியொற்றி வெளிப்படுத்தத் தொடங்கினார்கள். மாதவிப் பொன் மயிலாள் இன்னும் ஒரு படி உயரம் போய் டூபீஸில் ஒரு தோற்றம் கொடுத்தாள். தமிழ் சினிமா வரலாற்றிலேயே அத்தனை குறைவான துணியில் தைக்கப்பட்ட டூபீஸ் வேறொன்று இருக்க முடியாது. டிக்டிக்டிக் படத்தில் அந்த இளநீல டூபீஸ் உடையில் மாதவியைப் பார்த்தபோது மனந்தடுமாறி விழுந்தெழாதவர்கள் என்பதாக ஒருத்தரும் இருந்திருக்கவில்லை. இன்றைக்குத்தான் எஃப் டீவி கிஃப் டீவியெல்லாம். அன்றைக்கு மாதவிதான் ஒட்டுமொத்த தமிழ் தேயத்தின் ஃபேஷன் சேனலே!<br /></span><br /><span style="font-size:85%;">இப்படியாரம்பித்த இந்த திவ்ய தரிசனங்கள் வில்லன்கள் முன்னால் நாயகிகள் ஆடுகிற அளவுக்குக் கொண்டு சேர்த்தது. இது பரிணாமத்தின் தவிர்க்க இயலாத அடுத்த வளர்ச்சி என்பதாக சினிமா சொல்லக்கூடும். ஆனால் அது எப்படி நியாயமாகும்? வில்லன் முன்னால் தன்னுடம்பைக் காட்டிக்கொண்டு நாயகி ஆடினாள் என்றால் அவள் எப்படி கற்புடையவளாகக் கருதப்பட முடியும் என்று ஒரு பெரும் விவாதம் எழுந்த வகையில்தான் இந்த அடுத்த விபத்தும் நேர்ந்திருக்கக்கூடும். நாயகியோடு நாயகனும் ஆடினால் முடிந்தது கதை! அது எப்படி? நாயகனைத்தான் வில்லனுக்கு அடையாளம் தெரியுமே! அதனால் என்ன? ஒட்டு தாடியைத் தாடையில் பொருத்தினால் அடையாளம் தெரியாமல் போய்விட்டுப் போகிறது. சிம்ப்பிள்!<br /></span><br /><span style="font-size:85%;">அடப்பாவிகளா!<br /></span><br /><span style="font-size:85%;">இந்த அட பாவிகளா என்கிற வியப்பு கவர்ச்சி நடனத்தின் மீதான எனது எதிர்க்குரல் என்று தப்பிதமாக எண்ணிக்கொள்ள வேண்டாம். எனக்கு கவர்ச்சி நடனங்கள் ரொம்பவும் பிடித்தமானவை. எனது எதிர்க்குரல் இப்படியெல்லாம் லாஜிக் யோசித்தவர்களின் மீதுதான்!<br /></span><br /><span style="font-size:85%;">எனது ஆல்டைம் ஃபேவரிட்டாக உள்ள கவர்ச்சி நடனம், அன்னை ஓர் ஆலயம் படத்தில் ஜெயமாலினி ஆடிய இரவு நேரம், நிலவு காயும் என்கிற பாடலுக்கானதுதான். அதிக விரசமில்லாத அழகான நடனம் அது. பாடலும் மிகவும் சொக்க வைக்கக்கூடியது. ஜெயமாலினியின் ரோஸ்நிற இடுப்பும் அதன் குடுவைத்தனமான அமைப்பும் பார்க்கப் பார்க்கக் கிறங்கடிக்கக்கூடியது. நமது கோவில் சிலைகளில் காணும் சாமுத்திரிகா லட்சணத்தோடு பிறந்த முக்கியமான அழகி ஜெயமாலினி என்பதில் எனக்கு எவ்விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. சிம்ரனின் இடுப்பிலும் இந்தக் காலத்திலும் டூபீஸில் நடிக்க அஞ்சும் நயன்தாராவின் பில்லா இடுப்பிலும் மயங்கிக் கிடக்கும் இளம் மனங்கள் தயை கூர்ந்து நான் மேற்சொன்ன பாடலை அடுத்தமுறை உங்களிடம் மைக்கை முன்னால் நீட்டி நீங்கள் விரும்பும் பாடல் எது என்று கேட்கும் டீவிக்குட்டியிடம் கேளுங்கள். அகில உலகமும் உங்களை வாழ்த்திப் பாடும்.<br />சாதாரணமாக கவர்ச்சி நடிகைகள் அல்லது நடிகைகளின் கவர்ச்சி என்பதாக எழுதப் புகும் புளுகுணி ஆசாமிகள் அவர்கள் வாழ்வின் விளிம்பிற்கு விரட்டப்பட்டவர்கள், தற்கொலைக்குத் தள்ளப்பட்டவர்கள் என்பதாகவெல்லாம் டுபாகூர் கட்டுரைகளாக எழுதி உங்களின் கண்களைப் பனிக்க வைக்க முயன்று வருகிற வன்கொடுமைக்கு எதிராக என்னால் உருப்படியாக ஒரு கட்டுரை எழுத முடிந்ததற்காக பெண்ணுடம்பின் மென்சதைகளை தளதளப்பாகத் தொடர்ந்து படைத்துவரும் இயற்கையின் தன்மையைத் தொழுகிறேன்.<br /></span><br /><span style="font-size:85%;">வசந்த விழாக்களும், களவு மணங்களுமாக நமது பாட்டன்களின் பாட்டன்மார்களும் பாட்டிகளின் பாட்டிமார்களும் கும்மாளமிட்ட தேயமிது. காமசூத்திரங்களும், மதனநூல்களுமாக எதிர்ப்பாலின் உடலை எவ்வாறெல்லாம் ரசிக்கலாம் என்பதை அனுபவித்து அனுபவித்து உலகத்திற்குக் கொடுத்த தேயமிது. போகிறவன் வருகிறவனெல்லாம் அடித்த கொள்ளையில் வறுமை என்கிற கொடிய நோய் பீடித்த வகையில்தான் எமக்கு எம்மைக் கட்டிய பெண்களின் நிர்வாணத்தைக்கூட ரசிக்க இயலாத பொறுமையிழப்பு நிகழ்ந்துவிட்டதே தவிர, அது உண்மையில் எமது யதார்த்தமான குணாதிசயமல்ல என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.</span>சுதேசமித்திரன்http://www.blogger.com/profile/10553784263990082472noreply@blogger.com0