September 24, 2008

உயிரோசை உலா


மனுஷ்ய புத்திரனின் உயிரோசை இணைய இதழ் அசத்தலாக வந்துகொண்டிருக்கிறது. உன் தொடர் வருவதால் நீ அப்படித்தான் சொல்வாய் என்று சொல்பவர்கள் ஒரு நடை பொய் பார்த்து விட்டு சொல்லுங்கள். முக்கியமாக ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டும். இந்த வாரம் நான் எழுதியுள்ள கட்டுரையை வாசித்து பாருங்கள். இந்தக் கட்டுரையை வணிக இதழ்கள் வெளியிட விரும்புமா என்று கவனியுங்கள். அப்போதுதான் ஒரு நல்ல இணைய இதழின் முக்கியத்துவம் உங்களுக்கு விளங்கும். வெளிப்படையான எழுத்துக்களுக்கு தமிழில் சிற்றிதழ்களை விட்டால் வேறு புகல் இல்லை. இணையத்திலோ யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற சுதந்திரம் இருப்பதால் பெரும்பாலான எழுத்துகள் விளையாட்டாகவே பதிவாகின்றன. உயிரோசை மாதிரியான பரிபூரண இணைய வார இதழ் இதுவரை வந்ததில்லை என்பதாகவே தோன்றுகிறது. இதழ் அச்சுக்கும் தாவும் நாளை ரொம்ப ஆசையோடு எதிர்பார்க்கிறேன். என் இந்த வார கட்டுரைக்கான சுட்டி: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=199

No comments: