November 20, 2008

நான் மதிக்கும் கலைஞர்கள் செய்த பிழைகள்!

நாகார்ஜுன் நடித்த இரண்டு தெலுங்குப் படங்கள் தமிழில் தறிகெட்டு ஓடின. ஒன்று மணிரத்னம் இயக்கிய கீதாஞ்சலி. மற்றது ராம்கோபால் வர்மா இயக்கிய சிவா! தமிழில் டப் செய்யப்பட்டபோது இவற்றின் பெயர்கள் இதயத்தைத் திருடாதே, உதயம்!

இதயத்தைத் திருடாதேயில் நாகார்ஜுன் ஒரு நோயாளி. தன் நோயை அறிந்துகொள்ளும் வரைக்கும் கல்லூரி கான்வகேஷனில் காம்பௌன்ட் சுவரைத் தாண்டி தாமதமாக நுழையும் அளவுக்குத்தான் இவரது மாணவ சேஷ்டை இருக்கும். ஆனால் உதயத்தில் அப்படியே தலைகீழ். ஆரம்பத்தில் மிக அமைதியான மாணவனாகத் தோற்றமளிக்கிற இவர், ஒரு பாய்லிங் பாய்ண்ட்டில் வெடித்து தன் சைக்கிளின் செயினை அறுத்தெடுக்கும்போது படம் வேறு தாளகதிக்குள் நுழைந்துவிடும். கல்லூரிக்குள் மாணவர்கள் மோதல் என்பது ரொம்பவும் அழுத்தமாக வெளிவந்தது அந்தப்படம் முதலாகத்தான் என்பதாகவே நினைக்கிறேன். மாணவர்கள் தங்களுக்குள் ஆயுதங்களால் தாக்கிக்கொள்வது, தாதாக்கள் கல்லூரிகளுக்குள் ஊடுருவுவது, அதற்குக் காரணமாக இருக்கும் மாணவர்கள் பிற்பாடு தாதாக்களாகவும் அரசியல்வாதிகளாகவும் மாறுவது என்பதாக ஒரு பேரமைப்பை எடுத்துக்காட்டிய படம் உதயம்...

read more: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=537

No comments: