February 11, 2009

வசனம் எழுதுவது எப்படி?


வசனம் என்றால் வஸ்திரம் என்பதாகவும் ஓரர்த்தம் உண்டு. அதனால்தானோ என்னவோ எமது வசனகர்த்தாக்கள் வகை வகையாக வசனம் எழுத விரும்புகிறார்கள். ஆடை என்பது நிர்வாணத்தை மூடுவதற்காக என்பது ஒழிந்து தோற்றத்தை அழகுபடுத்த என்பதாக மாறிவிட்ட வகையில்தான் வசனமும் இஷ்டத்திற்கு எழுதப்படுகிறதோ என்று தோன்றுகிறது.

கட்டபொம்மன் கப்பத்தைத் தூக்கிக்கொண்டு தென்னாடு முழுக்க ஜாக்சனின் பின்னால் அலைந்தான் என்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின் வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் கொடுக்க வேண்டும் கிஸ்தி? என்று நாடக பாணியில் நடிகர் திலகம் முழக்கமிட்டதைப் பார்க்க நேர்கையில் குமட்டிலிருந்து வருகிறது சிரிப்பு. இந்த சிரிப்பு, நடிகரைப் பார்த்து வருவதல்ல. வசனகர்த்தாவைப் பார்த்து வருவது.

சின்னதாக ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டால் போதும், வசனகர்த்தா தன் மொழிப்புலமையை முழுக்க முழுக்க கொட்டித் தீர்த்து வந்திருக்கிறார் என்பதே நாம் காணக் கிடைப்பது.
மனோகராவில் வசந்தசேனை! வட்டமிடும் கழுகு! வாய்பிளந்து நிற்கும் ஓணாய்!! நம்மை வளைத்துவிட்ட மலைப்பாம்பு!!! என்று அடுக்கடுக்காய் பொழிகிறது வசனம். சிவாஜி கணேசனின் கர்ஜனைக் குரலில் கேட்பதற்குத்தான் எத்தனை ஆசையாய் இருக்கிறது. ஆனால் எந்த ஒரு காலத்திலும் இம்மாதிரி பேசிக்கொண்டு அலைந்தார்களா என்று யோசிக்கப் புறப்பட்டால் முன்னால் ஒரு சுவர்தான் வந்து முட்டுகிறது.

ஒரு நடிகர், வாங்கிய காசுக்கு அதிகமாக நடித்தால் மிகை நடிகர் என்று பழிக்கப்படுகிற கலாச்சாரம் இருக்கிறதே தவிர, ஒரு வசனகர்த்தா இஷ்டத்துக்கு எழுதினால் அதை மிகையெழுத்து என்று தூற்றுகிற சமுதாயமாக ஏன் இல்லாமல் போயிற்று என்பதுதான் தெரியவில்லை.

Read more: http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=915

No comments: