January 13, 2009

சினிமாவின் மூன்றாவது முகம்

யதார்த்த சினிமாவாகவோ கமர்ஷியல் நோக்கத்தோடோ இல்லாத படத்தை parrellel cinema என்று சொல்லலாமா? ம்ஹூம், சொல்லவே கூடாது! யதார்த்த சினிமா கொடுக்க முயலும் ஒரு கலைஞன் அதை பார்வையாளர்களின் பக்குவத்தையறிந்து கொடுக்க முயலும்போதே அது பாரலல் சினிமாவாக மாறுகிறது (முழுமையான யதார்த்த சினிமாவை பாரலல் சினிமா என்று சொல்லும் போக்கு உண்டு. நான் அந்தக் கோணத்தில் இந்தப் பதத்தை உபயோகிக்கவில்லை).

இதனால் பாரலல் சினிமா என்பது மொழிக்கு மொழி, நாட்டுக்கு நாடு வேறுபட்டுப் போவதும் இயல்பானதே! உதாரணமாக உன்னதமான யதார்த்த சினிமா என்று தமிழ்நாடு கொண்டாடும் ஒரு சினிமா மலையாளத்திலோ பெங்காலியிலோ கன்னடத்திலோ பாரலல் சினிமா என்பதாக அங்கீகரிக்கப்படலாம். பிரெஞ்ச்சிலோ ஈரானிலோ கமர்ஷியல் சினிமா என்பதாக ஒதுக்கப்படலாம்.

ஆகவே பாரலல் சினிமா என்பதே கலைஞர்கள் எதிர்கொள்ளும் பெரும் சவால். அதற்கு வணிக நோக்கமும் இருக்கிறது. அதே நேரத்தில் அது தரமாக இருக்கவேண்டியதும் அவசியமாகிறது. இது அவ்வளவு சாதாரணமான வித்தையல்ல.

Read more: http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=808

No comments: