January 21, 2009

சரக்கும் சினிமாவும்

தமிழ் அகம் வாழ் பெரும் தகைகள் சோம பானம் சுறா பானம் ஆகியவை அருந்தாமலே நெடிதுயிலாய்க் கொண்டுள்ள போதையே தமிழ் சினிமாவின் தரத்தைத் தீர்மானித்துத் தொலைக்கிறது.


இந்தக் கூற்றை என்னாலானமட்டும் விளக்கப் பார்க்கிறேன். பொதுவாக சரக்கு என்கிற வார்த்தை அதன் உண்மையான அர்த்தத்தையும் தாண்டி மதுவகைகளுக்கான மாற்றுப் பெயராக தமிழில் உருவெடுத்து வெகு காலமாகிறபடியால் அந்த அர்த்தத்தில்தான் இந்தப் பதம் உபயோகிக்கப்படுகிறது. ஆனால் திரையில் மதுவருந்துவதுபோன்ற காட்சி வந்தால் கீழே மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்று வாசகம் ஓடவேண்டும் என்கிற ஆணைகள் குறித்தெல்லாம் ஆராய்கிற கட்டுரையல்ல இது.

அதேபோல் எந்தெந்த படத்தில் யார் யார் எப்படி எப்படி குடித்தார்கள் அல்லது குடித்ததுபோல நடித்தார்கள் அல்லது குடித்துவிட்டு வந்து குடிக்காதே என்று போதனை செய்யும் காட்சியில் நடித்தார்கள் என்கிற பட்டியலை வெளியிடுவதும் எனது நோக்கமன்று!

இந்தக் கட்டுரை ஒட்டுமொத்த போதை பற்றியது. அதாவது மாஸ் மப்பு பற்றியது.

Read more: http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=837

No comments: